கதை கேட்டு ஷாக் ஆன கதாநாயகியின் ‘பானு’

Baanu-Movie-Audio-Launch-Photos-2
பசவா புரடக்ஷன்ஸ் மற்றும் கமல்தீப் புரடக்ஷன்ஸ் இணைந்து வழங்க கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கம் ஜி.வி..சீனு மற்றும் இசை அமைத்து இருக்கும் உதயராஜ் இருவரும கதாநாயகர்களாக நடிக்க,  கதாநாயகியாக கல்கத்தா பொண்ணு நந்தினி ஸ்ரீ என்பவர் நடிக்கும் படம் பானு .

 வட சென்னைப் பையன் ஒருவனுக்கும் வட இந்தியப் பெண் ஒருத்திக்கும் வட சென்னையில் 2002  மற்றும் 2003 காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் படமாம் இது.

படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ்நாடு  டிஜிட்டல் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

படத்தில் இடம் பெறும் சோகப்பாட்டு ஒன்று கவனம் கவர்ந்தது . இன்னொரு பாட்டில் நடிகை சுஜிபாலா  கவர்ச்சி நடனம்  ஆடுகிறார் .

படத்தின் கதாநாயகி கல்கத்தா பெண்ணாக இருந்தாலும் தமிழ் பேசினார் ” படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொல்லும்போது ‘2002 இல் கூட இப்படியெல்லாம் நடக்குமா ? அதுவும சென்னையில்!’  என்று ஆச்சர்யப்பட்டேன் . அடுத்ததடுத்து என்ன என்ற  ஆர்வத்தை கதை தூண்டியதால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தேன் ” என்றார் .
நிகழ்ச்சியில் பேசிய தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜயமுரளி
விஜயமுரளிக்கு பொன்னாடை
விஜயமுரளிக்கு பொன்னாடை

” இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கும் அப்துல் ரகுமான் இதயம் , கிழக்கு வாசல் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர் . இப்போது ஒலிச்சித்திரம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் .

கவுரவிக்கப்படும் அப்துல் ரகுமான்
கவுரவிக்கப்படும் அப்துல் ரகுமான்

இவரைப் போன்றவர்கள் பணியாற்றுவது இந்த பானு படத்துக்கு கிடைத்த சிறப்பு ” என்றார் .

ஜி.சேகரன் தன் பேச்சில் ” ஒரு ரயில்வே ஸ்டேஷன். அங்கே  வழக்கமாக ஒரு தண்டவாளத்தில்தான் ரயில் வரும் . இன்னொரு தண்டவாளம இருக்கிறது . அதில் ரயில் வரவே வராது. இதை அறிந்த பலப் பல ஏழைக் குழந்தைகள் அந்த — ரயில் வராத தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டு இருந்தன .

அப்போது வழக்கமாக ரயில் போகும் தண்டவாளத்தில் ரயில் வர , அந்த நேரம் பார்த்து என்கிருந்தோ வந்த வேறு ஒரு குழந்தை அந்த ரயில் போகும் தண்டவாளத்துக்குள் வந்து விட்டது . டிரைவர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, பக்கத்தில் இருந்த இன்னொரு டிரைவர் , “அண்ணே! இந்த ஒத்தைக் குழந்தை ரயில்வே அமைச்சரின் குழந்தை “என்றான் .

உடனே டிரைவர் , ரயில்வே அமைச்சரின் குழந்தையைக் காப்பாற்ற , ரயிலே போகும் வழக்கம் இல்லாத – பல ஏழைக் குழந்தைகள் விளையாடும் அந்தத் தண்டவாளத்தில் வண்டியைத் திருப்பினான் . அந்தக் குழந்தைகள் எல்லாம் செத்துப் போயின .

அதுபோல்தான் தமிழ் சினிமாவிலும் நடக்கிறது .

பல சின்னப் படங்கள் ரிலீசுக்கான தேதியை முன்னரே அறிவித்து விட்டு பல நாள் காத்திருக்க, திடீரென ரிலீஸ் தேதி அறிவிக்கும் பெரிய படங்களுக்காக தியேட்டர்கள் போய் விட , சின்னப் படங்கள் எல்லாம் அந்த ஏழைக் குழந்தைகள் போல அடிபட்டு செத்துப் போகின்றன ” என்றார் .

பேசி விட்டு வந்து அமர்ந்த சேகரனிடம் அபிராமி ராமநாதன்  எதோ சொல்ல  “நீங்க அப்படிப் பேசினால் நான் மறுபடியும் எழுந்து விலாவாரியாகப் பேச வேண்டி வரும் ” என்றார் ஜி.சேகரன் .

அபிராமி ராமநாதன் பேசும் போது ” பெரிய படங்கள் வருடத்துக்கு இருபது வரும் . ஒவ்வொரு பெரிய படத்துக்கும் ஒரு வாரம் என்று வைத்துக் கொண்டாலும் இருபது வாரம்தான் பெரிய படங்கள் இருக்கும் . மீதி 32 வாரங்கள் திரையரங்குகளைக் காப்பாற்றுவதும் , ஏராளமான திரைக் கலைஞர்களுக்கு வேலை தருவதும் சின்னப் படங்கள்தான் ” என்றார் .

அதோடு முடிந்தது .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →