கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் , லிங்க பைரவி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன்ஆகியோர் தயாரிக்க,
அமைச்சர் மன்சூரை (மன்சூர் அலிகான்) சுட்டுக் கொல்கிறான் . மன்சூரின் தீவிர தொண்டனான ஓர் இளைஞன் ( ஜி வி பிரகாஷ் குமார் ) அதை போட்டோ எடுத்து விடுகிறான் .
அவனது காதலி (கிரீத்தி கார்பன்டா ), குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்கிறாள் . ஆனால் புரூஸ்லீ என்ற பட்டப் பெயர் இருந்தும் ,
புகைப்பட ஆதாரத்தை சரியான யாரிடமாவது ஒப்படைக்க எண்ணி இந்த ஜோடிகள் எடுக்கும் எந்த முயற்சியும் பலிக்கவில்லை .
இது தவிர , தாதாவின் ஆள் ஒருவன் உருவாக்கிய ஒரு டைம்பாம், தயாரிப்புக் குறைபாடு காரணமாக எப்போது வேண்டுமானாலும் டைமர் ஓடும் .
அதுக்கு மட்டும் எல்லாம் படம் பார்க்க முடியுமா என்ன ?
கடமைக்கு எழுதப்பட்ட கதை, அக்கறையின்றி அமைக்கப்பட்ட திரைக்கதை , சளசளவென்று வெட்டியாய்க் கொட்டும் வசனங்கள் என்று…. ஒரு வழி பண்ணி விடுகிறார்கள் .
அடுத்தடுத்து டுவிஸ்டு என்று எண்ணிக் கொண்டு என்னென்னமோ சொல்கிறார்கள் . ஆனால் அதில் ஓர் ஒழுங்கு, லாஜிக் , யதார்த்தம், சீரியஸ்னஸ் அல்லது காமெடி வேண்டாமா ?
நினைத்ததை எல்லாம் எழுதி எடுத்து ஒட்டிக் கொடுத்தால் எப்படி ?
எல்லாவற்றையும் வளவள என்று வசனத்துலேயே பேசி விடலாம் என்றால் அப்புறம் கேமரா எதற்கு ?
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆகி விட்டால் கூட மன்னிக்கலாம் . ஆனால் குரங்கு பிடிப்பதற்கே குறி வைத்து அதுவும் கோணவாயன் குட்டியாகப் போன கொடுமையை என்ன சொல்ல ?
இதுவரை பார்த்த படங்களில் எல்லாம் என்ன மாதிரி பேசி என்ன மாதிரி ஆடினாரோ அப்படியே இதிலும் ஜி வி பிரகாஷ் .
ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கதை இருக்கும் . அதற்கேற்ப கேரக்டர் இருக்கும் . அதற்கும் ஏற்ப நடை உடை பாவனை உடல் மொழிகள் வேண்டும் அல்லவா ? பாடல்களும் இசையும் கூட படு சுமார் ரகமே.
அந்த பொண்ணு பேர் என்ன …? க்ரீத்தி கார்பன்டரோ பிளம்பரோ … உற்சாகமாக நடிப்பதாக நினைத்துக் கொண்டு ஓவராக படு செயற்கையாக குதிக்கிறார் .
ஒரு ஏரியாவில் நம்மை சுற்றி எல்லாருமே மெண்டலாக இருந்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஓர் மன நிலையை தருகிறது திரைக்குள் தெரியும் உலகம் .
ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் , நான் கடவுள் ராஜேந்திரன் என்று நடிகர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் . ஆனாலும் காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டு ….. .நோ யூஸ் !
ஒரு பத்து நிமிஷம் மனசார நெகிழ்ந்தோம் அல்லது சிரித்தோம் அல்லது பயந்தோம் அல்லது ரசித்தோம் அல்லது கிறங்கினோம் என்று சொல்ல, ஒரு சந்தர்ப்பம் கூட மொத்தப் படத்திலும் இல்லை என்பதுதான் கொடுமை .
புரூஸ் லீ , புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……லீ !




