கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில் கோவை பாலசுப்பிரமணியம் தயாரிக்க, விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, ஞான சம்மந்தன் நடிப்பில் ஏ, வெங்கடேஷ் திரைக்கதை எழுதி நடித்து இயக்கி இருக்கும் படம்.
அமைச்சரின் ( எ .வெங்கடேஷ்) ஆணவ அயோக்கிய மகன் நண்பர்களுடன் சேர்ந்து கலாட்டா செய்ய அதில் ஒரு ஆர்க்கிடெக்ட் ( விஜய் சத்யா) அவன் மனைவி (ஷெரின்) ஆகியோர் பாதிக்கப்பட அதன் விளைவாக நடக்கும் சம்பவங்களால் அந்த அயோக்கிய மகன் கொல்லப்படுகிறான்.
ஆர்க்கிடெக்ட்டின் மாமியார் , அமைச்சர் மனைவியின் (வனிதா விஜயகுமார்) தோழியாக இருக்க, எதிர்பார்த்த சந்திப்பில் ஆர்க்கிடெக்ட், மனைவி மகள், மாமனார் (ஞானசம்பந்தன்) மாமியார் ஆகியோர் அமைச்சர் வீட்டுக்குப் போக , அங்கே சில உண்மைகள் வெளிப்பட என்ன நடந்தது என்பதே படம்.
படத்தின் இசை அமைப்பாளரான அம்ரேஷ் விஜய் சத்யாவோடு சேர்ந்து ஆடிப் பாடி இருக்கும் முதல் பாடல் ரகளை.
சற்றே ஜெயம் ரவி போன்ற தோற்றத்துடன் இருக்கிறார் விஜய் சத்யா . குரல் பெரிய பலம் . சண்டைக் காட்சிகளில் சிறப்பாக செய்து இருக்கிறார். ஹீரோவாக நிலைக்க சிக்ஸ் பேக் மட்டும் போதாது . நடிப்பும் வேண்டும் .
சூப்பர் சுப்பராயனின் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பு .
இமான் அண்ணாச்சி பாலா காமெடி காட்சிகள் பலனும் இல்லை பழுதும் இல்லை .
இன்னும் சிறப்பான கதை திரைக்கதை இருந்திருக்கலாம் .
தில்ராஜா .. ராஜா இருக்கிறார் .. தில் எங்கே?
