லைகா புரடக்ஷன்ஸ் மற்றும் எஸ் கே புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவா கார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கும் படம்.
ஏட்டுப் படிப்பு வராத – வாழ்வில் என்ன ஆவோம் என்றும் புரியாத- கடைசி பெஞ்ச் மாணவனை, அவனுக்கான தேடலை அவனே கண்டடைய விடாமல்- படி படி என்று அப்பாவும் , அதே போல மிலிட்டரித்தனமாக கல்லூரியும் செய்து கசக்கி பிழிந்தால் அவனுக்கு ஏற்படும் உணர்வுகளும் விளைவுகளுமே படம்.
மாணவனாக சிவ கார்த்திகேயன், அப்பாவாக சமுத்திரக்கனி, கல்லூரியின் முகமாக எஸ் ஜே சூர்யா காதலுக்கும் ஆட்டம் பாட்டத்துக்கும் பிரியங்கா அருள்மோகன் .
மாணவர்களுக்கு பிடித்த விசயத்தை பேசும் படம். சிவகார்த்திகேயன் பொருத்தமாக ஜொலிக்கிறார் .
எஸ் ஜே சூர்யா அதகளம். குரல் நடிப்பு அபாரம் . சமுத்திக்கனி வெகு யதார்த்தம்
மாணவனின் அம்மாவாக ஆதிரா, நண்பர்களாக ஷிவாங்கி, மிர்ச்சி விஜய் , கல்லூரி ஆட்களாக முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான் ,ஆகியோரும் இருக்கிறார்கள் .
பின்னணி இசையில் அசத்தல் அனிருத் . பாடல்களும் ஒகே . தொழில் நுட்ப ரீதியாக சிறப்பான படம் .
கதை நுட்பம்?
தேவைக்கு மேலான நீளம், எந்தத் தரப்பையும் தெளிவாக எடுத்து வைக்காத குழப்பம், காமெடி போதாமை , சாதரணமாக கடக்கும் காட்சிகள் ஆகியவை குறைபாடு . ஏழ்மை அப்பன் பிள்ளையிடம் ஒரு நிமிடம் கூட அன்பாக பாசமாக பேசக் கூடாதா என்ன ?
ஒரு காட்சியில் ஒருவர் பேசிய வசனத்தை இன்னொரு காட்சியில் இன்னொருவர் பதிலுக்கு ரிப்பீட் செய்வது சுகம் தரும் திரைக்கதை உத்தி. ஆனால் அது அளவுக்கு மீறி வருகிறது .
படத்தின் முதல் காட்சியில் கொடுக்கும் பில்டப் கடைசியில் புஸ்வானம் .
டான் …. முன்பே தெரிந்த உள்ளூர் ரவுடி
