இசைஞானி இளையராஜாவின் இசையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகி இம்மாத இறுதியில் திரைக்கு வர இருக்கும் படம் டோரதி.
இந்தப் படம் எங்களுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்கிறார்கள் ரிஷிகாந்த்தும் சனத்தும்
”அண்மையில் நான் நடித்து வந்த மொத ராத்திரி படம் ஆரம்பிப்பதற்கு முன்பே இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது” என்றார் ரிஷிகாந்த்
”கார்த்திக் சுப்புராஜ் சார் முன்பே எனக்கு அவர் படங்களில் நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளார் ஆனால் டோரதி எனக்கு ரொம்ப ஸ்பெஷல் “என்றார் சனத்
இது 1990களில் மதுரையில் நடக்கும் கதை என்கிறார் கார்த்திக் சுப்புராஜ் .
“இந்தக் கதை எழுதி பல வருடங்கள் ஆகிறது. கதைப்படி ஒரு பிரபலமான ஹீரோயின் . இரண்டு இளம் நாயகர்கள்தான் செட் ஆகும். அப்படி பெரிய ஹீரோ இல்லாத புராஜக்ட் என்பதால் அவ்வளவு சீக்கிரம் தயாரிப்பாளர் அமையவில்லை.
சனத்திடம் ”நீ ஒரு ஹீரோ ரெடியாகி விடு” என்று சொல்வேன். அவரும் ரெடியாகி வந்து நிற்பார். ஆனால் நான் வேறு படத்துக்குப் போய் விடுவேன். இப்படியே பல முறை அவர் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் தளராமல் ஒவ்வொரு முறையும் வந்து நிற்பார்.
உலகப்பட விழா ஒன்றில் இந்தக் கதையை சொன்னபோது பிடித்துப் போய் சிக்ஷா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.
ரிஷிகாந்த் எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லை . ஆனால் அவரது குறும்படங்களை பார்த்து இருக்கிறேன். இன்னொரு ஹீரோவாக ரிஷிகாந்த் முடிவானார்.
ஒரு மலையாளப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இது எனக்கு ரொம்ப பர்சனலான படம் ( ஹீரோக்களுக்கு கார்த்திக், சுப்பு என்று பெயர் வைத்திருக்கும்போதே தெரிகிறது)
படம் ரிலீசுக்கு முன்பே டொராண்டோ இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட இருக்கிறது.
இசைஞானி இளையராஜா இசையில் வந்த கல்யாண விருந்து பட்டையைக் கிளப்புவதும் , முத்துமணி பாடல் உருக வைப்பதும் எல்லோருக்கும் தெரியும். இன்னும் அற்புதமானா பாடல்கள் வர இருக்கின்றன.
அவருடன் பணியாற்றியது எனது லைஃப் டைம் அனுபவம் . அவரிடம் பணியாற்றும்போது நான் எடுத்த காட்சியை வேறு கோணத்தில் அவர் எனக்குப் புரியவைத்தார். இப்படிப் பார்த்துப் பழகு என்றார் . அவர் சொன்ன கோணத்தில் யோசித்தபோது எனக்கே எனது படம் புதுசாக இருந்தது
அடுத்த படத்திலும் அவருடன்தான் பணியாற்ற இருக்கிறேன்..
அது இல்லாமல் இந்தப் படத்துக்காக இளையராஜா கொடுத்திருக்கும் பின்னணி இசையின் முக்கிய பகுதிகளை தொகுத்து ஓர் இசை ஆல்பம் போல பட வெளியீட்டுக்கு முன்னதாக வெளியிட இருக்கிறோம் ” என்றார்.
ராஜா ஆளட்டும் .