உண்மை சம்பவம் to நாவல் to காஸி

kasi
பிவிபி  நிறுவனமும் மேட்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க,  ராணா டகுபதி, டாப்சி  நடிக்க சங்கல்ப் ரெட்டி என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில்
தெலுங்கு, தமிழ் , இந்தி மூன்று மொழிகளில் வரும் படம்  காஸி.1971ல்   இந்தியாவிற்க்கும் பாகிஸ்தானிற்க்கும் இடையே நடந்த போரின்போது நடந்த,  இதுவரை யாரும் அறிந்திராத போர்க்கதைதான் இந்த காஸி. போரின் போது விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து , இயக்குனர் சங்கல்ப் ரெட்டியே எழுதிய ப்ளூ ஃபிஷ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.

காஸி என்பது அமெரிக்கா பாகிஸ்தானுக்குக் கொடுத்த ஒரு நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் .

படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராணா டகுபதி, இயக்குனர் சங்கல்ப், படத்தின் இசை அமைப்பாளர் கே,மற்றும் பி.வி.பி யின்  நிர்வாக இயக்குனருமான கே.கே ஆகியோர் கலந்து கொண்டனர்  கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ராணா டகுபதி,

kasi 3
” என்னுடைய சிறுவயதில் விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தான் போர் சம்பவமாக  நான் கேள்விபட்ட விசயம்தான் இப்படத்தின் கதை. ப்ளூ ஃபிஷ்  புத்தகத்தை எழுதிய இயக்குனர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் இப்படம் முழுநீள திரைபடமாக தற்போது வெளிவந்துள்ளது. விசாகபட்டிணத்தில் 71 நாட்கள் நடந்த யாரும் அறிந்திராத கடலுக்கடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

போர்க்களத்தில் நமக்காக உயிர்த்  தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும்   

நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும்,அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம் .

நிஜமான நீர் மூழ்கிக் கப்பலில் வீரர்கள் யூஸ் அன் த்ரோ சட்டைதான் போடுவார்கள்.  ஷேவ் செய்ய மாட்டார்கள். சமையல் செய்பவர் மட்டும்தான் குளிக்க முடியும் . இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு ” என்றார்
 இயக்குனர் சங்கல்ப் பேசுகையில்,
kasi 4
” என்னுடைய முதல் படமே ஒரு சொல்லபடாத உண்மை சம்பவத்தை சொல்வதில் பெருமை கொள்கிறேன் இப்படத்தை நான் இயக்கியதில் ரொம்ப சந்தோசம் ” என்றார்
இசையமைப்பாளார் கே பேசுகையில், ” இந்திய திரையுலக வரலாற்றில் இது முற்றிலும் மாறுபட்ட ஒரு முக்கிய திரைப்படம். முற்றிலும் புதிய களத்தை கொண்டது.
kasi 2
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனித்தன்மை கொண்ட இப்படம், என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும்” என கூறினார். படம் வரும் பிப்ரவரி 17 அன்று வெளிவருகிறது

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *