பிவிபி நிறுவனமும் மேட்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, ராணா டகுபதி, டாப்சி நடிக்க சங்கல்ப் ரெட்டி என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில்
தெலுங்கு, தமிழ் , இந்தி மூன்று மொழிகளில் வரும் படம் காஸி.1971ல் இந்தியாவிற்க்கும் பாகிஸ்தானிற்க்கும் இடையே நடந்த போரின்போது நடந்த, இதுவரை யாரும் அறிந்திராத போர்க்கதைதான் இந்த காஸி. போரின் போது விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து , இயக்குனர் சங்கல்ப் ரெட்டியே எழுதிய ப்ளூ ஃபிஷ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.
காஸி என்பது அமெரிக்கா பாகிஸ்தானுக்குக் கொடுத்த ஒரு நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் .
படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராணா டகுபதி, இயக்குனர் சங்கல்ப், படத்தின் இசை அமைப்பாளர் கே,மற்றும் பி.வி.பி யின் நிர்வாக இயக்குனருமான கே.கே ஆகியோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ராணா டகுபதி,
” என்னுடைய சிறுவயதில் விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தான் போர் சம்பவமாக நான் கேள்விபட்ட விசயம்தான் இப்படத்தின் கதை. ப்ளூ ஃபிஷ் புத்தகத்தை எழுதிய இயக்குனர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் இப்படம் முழுநீள திரைபடமாக தற்போது வெளிவந்துள்ளது. விசாகபட்டிணத்தில் 71 நாட்கள் நடந்த யாரும் அறிந்திராத கடலுக்கடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.
போர்க்களத்தில் நமக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும்
நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும்,அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம் .
நிஜமான நீர் மூழ்கிக் கப்பலில் வீரர்கள் யூஸ் அன் த்ரோ சட்டைதான் போடுவார்கள். ஷேவ் செய்ய மாட்டார்கள். சமையல் செய்பவர் மட்டும்தான் குளிக்க முடியும் . இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு ” என்றார்
இயக்குனர் சங்கல்ப் பேசுகையில்,
” என்னுடைய முதல் படமே ஒரு சொல்லபடாத உண்மை சம்பவத்தை சொல்வதில் பெருமை கொள்கிறேன் இப்படத்தை நான் இயக்கியதில் ரொம்ப சந்தோசம் ” என்றார்
இசையமைப்பாளார் கே பேசுகையில், ” இந்திய திரையுலக வரலாற்றில் இது முற்றிலும் மாறுபட்ட ஒரு முக்கிய திரைப்படம். முற்றிலும் புதிய களத்தை கொண்டது.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனித்தன்மை கொண்ட இப்படம், என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும்” என கூறினார். படம் வரும் பிப்ரவரி 17 அன்று வெளிவருகிறது