குறும்படங்களுக்கு விருது…! – நடிகர் கோபிகாந்தி அறிவிப்பு

gopi 1

கல்வியால் வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் ஒரு ஏழை மாணவனின் போராட்டத்தை சொன்ன முதல்மாணவன் திரைப்படம் வாயிலாக திரைத்துறைக்கு நாயகனாக அறிமுகம் ஆனவர் கோபிகாந்தி. 

நாமக்கல்லை தாய் மண்ணாக கொண்ட இவர், சாதாரண சாக்கு தைக்கும் தொழிலாளியாக இருந்து, உழைப்பால் உயர்ந்து, பின்னர் திரைத்துறைக்கு வந்தவர்.

எந்த பின்புலமும் இல்லாமல் சுயம்புவாக முதல்மாணவன் திரைப்படத்தை தயாரித்து, அதில் நாயகனாகவும் நடித்தார்.

 அந்த படம் வெற்றி பெற்றதால் அதிரடியாக வைரமகன் மற்றும் வீரக்கலை ஆகிய படங்களை தொடங்கி, பரபரப்பாக படப்பிடிப்பையும் முடித்துள்ளார். 

இதில் வைரமகன் படம் தாய்-மகன் நடுவே உள்ள பாசப்போராட்டத்தையும், வீரக்கலை படம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும் சொல்கிறது.

விரைவில் இப்படங்களின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. வீரக்கலை படத்தின்  வெளியீட்டு உரிமையும் கோபி காந்தியின் R.S.G.PICTURES நிறுவனத்திடமிருந்து பீனிக்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

gopi 2

இதற்கிடையே புதிய திறமைசாலிகளை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் தனது தயாரிப்பில் நாடக கலைஞர்கள், திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க கோபி காந்தி முடிவு செய்துள்ளார். 

அத்துடன் சிறந்த குறும் படங்களுக்கு விருதுகள் வழங்கவும் தீர்மானித்துள்ளார். எனவே குறும்பட படைப்பாளிகள் 163A, R.P.புதூர் மெயின் ரோடு, நாமக்கல் – 1 என்ற முகவரிக்கு

தங்களது குறும்படங்களை அனுப்பி வைக்கலாம் எதிர்காலத்தில் நாமக்கல்லில் ஒரு திரைப்பட ஸ்டுடியோவை நிறுவும் திட்டமும் கோபிகாந்திக்கு இருக்கிறது.

திரைப்பட தயாரிப்பாளர் – நடிகராக பிரபலமாகி உள்ள கோபிகாந்தி நாமக்கல் வட்டாரத்தில் ஒரு சமூக சேவகராகவும் அறியப்பட்டுள்ளார். உலக சமூக சேவை மையம் என்ற தன்னார்வ அமைப்பை நிறுவி,

 ஏழை எளியவருக்கு உதவும் நல்ல மனதை பாராட்டி சென்னை கலை மன்றம் கோபிகாந்திக்கு கோல்டு ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்துள்ளது. 

கோல்டு ஸ்டார் கோபிகாந்திக்கு இப்போது ரசிகர் மன்றமும் உருவாகியுள்ளது. மற்றவர்களை போல் வழக்கமான எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல்,

 பொதுமக்களுக்கு நற்பணி மட்டுமே செய்ய வேண்டும் என தனது ரசிகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார் கோபிகாந்தி.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →