லாஜிக் திரில்லர் ‘களம்’

 

 

kalam group

அருள் மூவீஸ்  புரடக்சன் சார்பில் பி.கே.சந்திரன் தயாரிக்க அவரது மகன் சுபிஷ் சந்தரின் கதை திரைக்கதை வசனத்தில் ,

ஸ்ரீனிவாசன் , லட்சுமி ப்ரியா, பூஜா . கனி ஆகியோர் நடிக்க , ராபர்ட் ராஜ் இயக்கி இருக்கும் படம் களம் 

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் பி.மதன் இந்தப் படத்தை வெளியிடுகிறார் 
தயாரிப்பாளர்  சந்திரன் அருள் அப்பளம் நிறுவன உரிமையாளர். மலையாளத்தில் மோகன்லால் மம்முட்டி ஆகியோர் நடிப்பில் பல வெற்றிப் படங்களைக்  கொடுத்தவர் .தமிழில் இது இவருக்கு மூன்றாவது படம் .  
ராபர்ட் ராஜ் இயக்குனர் கோகுலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் .
kalam group 6
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தையும் படக் குழுவையும்  இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சுசீந்திரன், ஏ எல் விஜய் , கோகுல் ஆகியோர் மனதாரப் பாராட்டி பேசிய காட்சித் தொகுப்புகள் திரையிடப்பட்டன .  
தவிர நிகழ்ச்சிக்கும் வந்திருந்தார் சுசீந்திரன் . நடிகர் ஆரியும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். 
படத்தின் மோஷன் போஸ்டர் எனப்படும் அசையும்  சுவரொட்டியையும் முன்னோட்டத்தையும் மிகுந்த கலையழகுடன் எடுக்கப்பட்ட ஒரு பாடலையும் திரையிட்டனர் . 
பிரகாஷ் நிக்கி  இசையில் கபிலன் வைரமுத்து இரண்டு பாடல்களையும் பார்வதி ஒரு பாடலையும் எழுதி இருக்கின்றனர். 
kalam group 3
சீட்டுக் கட்டில் உள்ள ஜாக்கி , குவீன் , கிங் வடிவம் மற்றும் உடையில் நடிகர்களை நிறுத்தி,  அதற்குள் அசைவுகள் நகர்வுகளை கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த அசையும் சுவரொட்டி,
 செம கிரியேட்டிவ் ஐடியா . (உணமையில் அது அசையும் சுவரோட்டிக்கும் மேலே ) 
முன்னோட்டமும் அழுத்தமாகவும் மிரட்டலாகவும் இருந்தது .
ஒரே அறையில் மெழுகுவர்த்திகள் பொதிந்து எரிய , ஒரு நாற்காலியில் உட்கார்ந்தபடியே லட்சுமி பிரியா நடிக்கும் அந்த பாடல் இயக்குனர் ராபர்ட் ராஜின் அழகான பிரேம்களில்,
kalam group 5
அறிமுக ஒளிப்பதிவாளர் முகேஷின் மிகச் சிறந்த ஒளிப்பதிவில் மிக சிறப்பாக இருந்தது. செந்தில் திரவியத்தின் கலை இயக்கம் மிக சிறப்பாக இருந்தது . 
இவை எல்லாம் சேர்ந்து படத்தின்  மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது .
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சந்திரன் ” படம் பண்ணலாம் என்று முடிவு செய்தபோது என் மகன் சுபிஷ் சந்தர் வந்து ‘ அப்பா , நான் ஒரு கதை எழுதி இருக்கேன் .பாருங்க ‘ என்று சொன்னார்.
நான் ”அட போப்பா .. அதெல்லாம் விளையாட்டு இல்லை’ என்று சொல்லிவிட்டு பல கதைகள் கேட்டேன் . ஒன்றும் திருப்தியாக இல்லை .
chandran
ஒரு நாள்,  ‘சரி… நம் மகன் என்னதான்  எழுதி இருக்கிறான்னு பார்ப்போமே’ என்று ஸ்கிரிப்டை படித்த போது , வியந்து போனேன் . ரொம்ப நன்றாக இருந்தது. சுபிஷிடம் பேசினேன் . ரொம்ப தெளிவாக இருந்தார் .
அவரே இயக்குநரை முடிவு செய்தார் .படம் எடுத்து முடித்தோம்.  நான் இன்னும் முழு படத்தை பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவரை நன்றாக இருந்தது .
தவிர பலரும் படத்தை பாராட்டுவது சந்தோஷமாக இருக்கிறது. . இனி மக்கள் கையில் ” என்றார்  .
சுபிஷ் சந்திரன் பேசும்போது “எவ்வளவோ பேய்ப் படம் வருது . இதுவும் ஒரு பேய்ப் படம்தானே . இதில் என்ன ஸ்பெஷல்/’ என்று நீங்கள் கேட்கலாம் . இருக்கிறது . இதில் திரில் இருக்கிறது . ஹாரர் இருக்கிறது.
kalam subish
ஆனால் அவை எல்லாம் லாஜிக்காக , சுவாரஸ்யமாக , அதே நேரம் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பாக   இருக்கிறது.
நல்ல படம எடுத்து விட்டோம் . ஆனால் இப்போது படம எடுப்பதை விட பெரிய விஷயம் படத்தை ரிலீஸ் செய்வது .  அப்போதுதான் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் அவர்களை சந்தித்தோம் .
அடுத்த நாளே படம் பார்க்க வந்தார் . படத்தைப் பார்த்தார் . மனதாரப் பாராட்டியதோடு ,  படத்தை வாங்கி வெளியிட சம்மதித்தார் .
இப்போது என் சுமையை அவர் மேல் சுமத்தி விட்டு  நான் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் ” என்றார் 
லட்சுமி பிரியா தன் பேச்சில்
kalam chandran 3
” நல்ல கதை . நல்ல படம் .இதில் நடித்தது நல்ல அனுபவம் . உதாரணமாக நீங்கள் பார்த்த — ஒரே நாற்காலியில் அமர்ந்து பாடும் அந்தப் பாட்டு ..
இது போல படத்தில் பல சிறப்பான , ரசிகர்களைக் கவரும் விஷயங்கள் இருக்கு ” என்றார் .
பூஜா பேசும்போது ஓர் இடைவேளைக்குப் பிறகு நான் தமிழில் நடிக்கும் படம் இது . செம ஸ்கிரிப்ட் . நல்ல மேக்கிங். இது தவிர படத்தின் ஹீரோ சீனிவாசன் , லட்சுமி இவர்களோடு பழகியது நல்ல அனுபவம் .
லட்சுமி சோ ஸ்வீட் . ஒரு டாம் பாய் கேர்ள் . படம் எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கும் ” என்றார் .
கபிலன் வைரமுத்து பேசும்போது ” எதிர்பாராமல் அச்சப்படுவது என்பதை யாரும் விரும்புவது இல்லை . ஆனால் திட்டமிட்டு விரும்பி பயப்படுவதை மக்கள் ரொம்பவே விரும்புகிறார்கள் .
kalam chandran 2
ஹாலோவீன் பார்ட்டிகள் , தீம் பார்க்குகளில் உள்ள ஹாரர் அரங்குகள் இதற்கு உதாரணம் . சினிமா அதன் உச்சம் . எனவேதான் பேய்ப்படங்கள் நன்றாக ஓடுகின்றன.
அந்த வகையில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் ” என்றார் . 
கலை இயக்குனர் செந்தில் திரவியம் பேசும்போது ” ஒரு பங்களா , சில இடங்கள் என்று மிகக் குறைவான ஏரியாவில் படம் நடக்கும்போது கலை இயக்கத்தின் பங்கு மிக முக்கியமானது .
அதை உணர்ந்து பணியாற்றி இருக்கிறேன் . படம் நன்றாக வந்துள்ளது” என்றார் .
இசையமைப்பாளர் பேசும்போது ” மிக வித்தியாசமான திரைக்கதை என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக சிறப்பாக அமையவேண்டும் . அமைந்து இருக்கிறது ” என்றார் 
படத்தின் நாயகன் சீனிவாசன் பேசும்போது
kalam group 2
” மிக நல்ல கதை . நல்ல ஸ்கிரிப்ட். ஒளிப்பதிவாளர் , கலை இயக்குனர் எல்லோரும் நன்றாக பணியாற்றினர்.  
எனக்கு நல்ல கேரக்டர் . படம் நன்றாக வந்திருக்கிறது ” என்றார் . 
இயக்குனர் சுசீந்திரன் பேசும்போது ” கலை இயக்கம் , ஒளிப்பதிவு, இசை , நடிப்பு, இயக்கம் எல்லாவற்றையும் பார்க்கும்போது இந்தப் படம் வெற்றி பெறும் என்பது உறுதியாகத் தெரிகிறது .
அதையும் மீறி இந்தப் படம வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் . அதற்குக் காரணம் உண்டு . 
விஜய் சேதுபதி,  விஷ்ணு, இந்தப் படத்தின் ஹீரோ சீனு எல்லோரும் ஒரே நேரத்தில் போராடத் துவங்கியவர்கள் . இதில் விஜய் சேதுபதி சிறந்த இடத்துக்குப் போய் விட்டார் . விஷ்ணுவும் உயர்ந்து விட்டார் .
kalam suseen
ஆனால் அவர்களைப் போல உயர வேண்டிய சீனு இன்னும் உயரவில்லை . இந்தப் படம நன்றாக ஓடவேண்டும் . சீனு பெரிய ஹீரோவாக உயர வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்” என்றார் . 
நாயகன் ஆரி பேசும்போது ” படத்துக்கு முதலில் என்னை ஹீரோவாகக் கேட்டு சுபிஷ் வந்தார்  . அப்போது நான் மாயா படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்து உடனே ஒரு பேய்ப்படம் வேண்டாமே என்றேன் . 
சரி பொருத்தமான ஹீரோவை தேடுவோம் என்று சொன்னார் சுபிஷ் . எனக்கு முழு கதையும் தெரியும் என்ற நிலையில் அவர் கேட்ட மாதிரி தோற்றத்துக்கு நான் சொன்ன ஒரு சிலரில் சீனுவும் ஒருவர் .
அவரை பார்த்த உடன் எல்லோருக்கும் பிடிக்க அவரே ஹீரோவானார் . தவிர இன்னொரு பவர்ஃபுல்லான பெண் கதாபாத்திரம் படத்தில் உள்ளது . அதற்கு கனி என்று ஒரு நடிகையை தேர்வு செய்து கொடுத்தேன் .
kalam aari
கடைசியில் பார்த்தால் அந்த நடிகை சுபிஷுக்கும் அவர் தந்தைக்கும் முன்பே தெரிந்தவர் . .
இப்படி எல்லாம் படத்தில் நடிக்காத நானே ஆர்வத்துடன் செயல்படக் காரணம் , படத்தின்  அருமையான ஸ்கிரிப்ட்தான் .
இப்போது மேக்கிங்கை பார்த்தால்  சொன்னதை விட படம் நன்றாகவே வந்துள்ளது தெரிகிறது ” என்றார் 
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தன் பேச்சில்
kalam mathan
”  பல ஹாரர் படங்கள் வந்தாலும் இந்தப் படம் திரைக்கதை , படமாக்கிய விதம் ஆகியவற்றில் சிறப்பாக இருந்தது . மிஸ் பண்ண விரும்பவில்லை .
அதனால்தான் நாங்கள் வெளியிடுகிறோம் ” என்றார் . 
நிறைவுரையாற்றிய  இயக்குனர் ராபர்ட் ராஜ்
kalam robert
” சந்திரன் சாரின் அருள் அப்பளத்துக்கு விளம்பரப் படம் எடுத்துக் கொடுத்தேன் . அது  சந்திரன்  சாரின் பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்தது. அப்படித்தான் பழக்கம் ஏற்பட்டது .
படம் பண்ணலாம் என்று முயன்றபோது சுபிஷ் இந்த கதையை சொன்னார் . நல்லா இருக்கு என்றேன் . நீங்கதான் டைரக்ட் பண்ணனும் என்றார் .
பொதுவா எல்லரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம்னு பேக்கேஜோடுதான் வருவாங்க .
ஆனா , அவர் சொன்ன கதை எனக்கு மிஸ் பண்ணக் கூடாத ஒண்ணுன்னு தோணுச்சு. 
kalam chandranசரி , தயாரிப்பாளர் தேடுவோம்னு சொன்னேன் . சுபிஷ் என்கிட்டே ‘ அதான்  என் அப்பா  இருக்காரே .. அப்புறம் என்ன?’ ன்னு சிரிச்சார் . நல்ல கதையும் அமைஞ்சு தயாரிப்பாளரும் கிடைச்சப்ப ஏன்  தயங்கணும் ?
சந்திரன் சார் கிட்ட பேசினோம் . ஆரம்பிச்சோம் . நல்லபடியா எடுத்தோம் .
முடிந்தவரை குறைவான செலவுல பண்ணனும் என்பதால  யாருக்குமே ஒய்வு இல்ல. டெக்னீஷியன் , நடிக  நடிகையர் எல்லாரும் கடுமையா உழைச்சாங்க.  
ஷூட்டிங் ஆரம்பிக்கிற நேரம் மட்டுமே எல்லோருக்கும் தெரியும். முடியும் நேரம்  யாருக்குமே தெரியாது . ஒரு நாள்  நேரம் கடந்து போய்ட்டு இருந்தது . 
kalam jamesகடைசியில் கேமரா மேன் கிட்ட இன்னும் ஒரே ஒரு ஷாட் னு நான் சொல்ல, அப்படியே களைப்புல அவன் கேமரா மேல சாஞ்சு படுத்துட்டான் . அப்புறம் ஒரு சின்ன வாக்கிங் போயிட்டு வந்து எடுத்துக் கொடுத்தான் . 
நான் இந்த மேடையில் எங்கம்மாவை கூப்பிட்டு கவுரவப்படுத்த விரும்பறேன் . என் அப்பா இப்போ இல்ல . நான் டைரக்டர் ஆவேன்னு காத்திருந்தாரு. ஒரு நிலையில்  உடம்பு சரி இல்லாம போய்டுச்சு .
எனக்கு வாய்ப்பு கிடைச்சது . படம் ஆரம்பிச்சு ஷூட்டிங் போகும்போது ஒரு சீன் எடிட பண்ணி போட்டுக் காட்டினேன் . 
kalam prodசும்மா கண்ணால பார்த்தாரு. நினைவு எல்லாம் இல்ல . அப்படியே செத்துட்டார் . …” என்று கலங்க , மேடைக்கு வந்த அந்தத் தாய் அழ , 
படத்தின் வெற்றி இதை எல்லாம் ஆனந்தக் கண்ணீராக மாற்றட்டும் !
 
வரும் 29  ஆம் தேதி திரைக்கு வருகிறது , களம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →