1970களிலேயே பிரபலமான தென்னிந்தியாவின் முதல் பாடி பில்டர் ஆணழகன் என்று தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனால் பட்டம் கொடுக்கப்பட்டு எம் ஜி ஆரால் போற்றப்பட்ட சிதம்பரம் .
இந்த ஆணழகன் சிதம்பரத்தின் மகன் அருண் சிதம்பரம், அயல்நாட்டில் ஐ டி துறையில் வகித்த பெரும்பகுதியை உதறி விட்டு சென்னை வந்து,
கனவு வாரியம் என்ற என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கி , தயாரித்து, பாடல்கள் எழுதி கதாநாயகனாக நடித்துள்ளார் .
தமிழ் நாட்டில் அண்மையில் நிலவிய பதினெட்டு மணி நேர மின்வெட்டுப் பிரச்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ,
திரைக்கு வருவதற்க்கு முன்னரே இரண்டு ரெமி விருதுகளை பெற்று பெருமை பெற்றுள்ளது . ஏழு உலகப் பட விருதுகளையும் பதினைந்து நாடுகளின் சினிமா விழாக்களில் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனதின் இயக்குனர் சிவன்(ISRO), இயக்குனர் இமயம் பாரதிராஜா, பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,
இந்திய ரூபாய் சின்னத்தின் வடிவமைப்பாளர் உதய்குமார், நல்லகீரை என்ற அமைப்பின் பெயரில் ஆர்கானிக் தாவர உணவுப் பொருட்களுக்கென ஒரு தனி நிறுவனம் துவங்கி இருக்கும்ஜெகநாதன் மற்றும்
தமிழ்நாடு வெதர்மேன் (Weather Man) ப்ரதீப் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இசை வெளியீட்டு விழா முடிந்து நடந்த பத்திர்க்கையாளர் சந்திப்பில் இந்தப் படம் ரெமி விருது பெற்றபோது அதை வெளிநாட்டினர் பல பாராட்டுவதையும் திரையிட்டனர் .
படத்தின் முன்னோட்டம் மின்வெட்டில் கிராம வாழ்வு படும் துன்பங்களையும் , எளிய முறையில் மின்சாரம் கண்டு பிடிக்க முயலும் ஒரு இளைஞனின் வாழ்வையும் வெளிப்படுத்தியது
மீண்டும் ஆரம்பகால இயற்க்கை விவசாயத்தை பின்பற்றுவது பெருமையக இருக்கின்றது என்னுடைய மகனும் இப்பொழுது இயற்கை விவசாயத்தை மேற்க்கொள்வது எனக்கு பெருமை அளிக்கிறது” என்றார்
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் இயக்குனர் கவுரவ் சபர்வால் பேசும்போது ” ரெமி விருதுகளை வென்ற இந்தப் படம் மிக சிறப்பாக வந்துள்ளது .
ஒரு சிறப்பான படத்துடன் தென்னிந்திய மொழிகளில் வெளியீடுகளில் ஈடுபட விரும்பிய நாங்கள் இந்தப் படத்தின் மூலம் சந்தோஷமாக தென்னிந்திய வெளியீடுகளை துவங்குகிறோம் ” என்றார்
என்னுடைய ஆரம்ப காலங்களில் அப்போது ஸ்டுடியோவில் செட்டுக்குள் படம் எடுப்பதைப் பார்த்து எனக்கு கோபம் வரும் கிராமம என்று அவர்கள் போட்ட செட் செயற்கையாக இருக்கும் பெயின்ட் வாசனையே அடிக்கும் .
அருண் சிதம்பரம் தன் பேச்சில் ” புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் உருவாக்குபவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும், அதுமட்டுமல்ல அவர்களை கொண்டாட வேண்டும் .
என் படத்தை பிரபல ஹாலிவுட் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் வெளியிடுவது மேலும் ஒரு சிறப்பு” என்றார்
இந்தப் படம் gross root innovation என்று சொல்லக்கூடிய அடிமட்ட கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருப்பது இன்னுமொரு பெருமை.
மேலும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொண்டது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றார்





