ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்’ நிறுவனத்தின் தயாரிப்பில் , விதார்த் — பின்ன்னனிக் குரல் கலைஞர் ரவீனா ஜோடியாக நடிக்க,
காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளரான சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கும் படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’
முன்னணி கதாபாத்திரங்களில் ஜார்ஜ், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், ஹலோ கந்தசாமி, ஒளிப்பதிவாளர் ஆர் வி சரண்,
இசையமைப்பாளர் ரகுராம், படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன் கலை இயக்குநர் டி கிராபோர்ட், ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ்
ஒரு ஆட்டை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் விழாவில், நடிகர் நாசர் மற்றும் இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் ஈராஸ் நிறுவனத்தின் சார்பில் சாகர் சத்வானி (மூத்த துணை தலைவர்), சிட்தி பூஜா ராவ் (தலைமை நிர்வாகி),உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் செயற்கைத் தனம் இல்லாமல் இயல்பாக கிராமிய மணத்தோடு இருந்தன
ராஜ பாளையம் பகுதியில் பசுமையே இல்லாத கந்தகக் காட்டில் செருப்பு கூட போடாமல் நடிகர்கள் நடிக்க, தொழில் நுட்பக் கலைஞர்களும் செருப்பு அணியாமல் கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கி உள்ளனர்
“ரசிகர்கள் அனைவரும் குடும்பமாக வந்து ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படம் தான் இந்த ஒரு கிடாயின் கருணை மனு. அதிக நகைச்சுவை,
சிறிதளவு செண்டிமெண்ட் என மிக சிறப்பான முறையில், குடும்பங்களை கவரக் கூடிய விதத்தில் இந்த படம் உருவாகி இருக்கின்றது” என்றார் சாகர் சத்வானி

“இந்தப் படம் மிகவும் வித்தியாசமான அனுபவம் . இதை சொல்வதை விட பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள் என்றார் விதார்த் .
“இந்த ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்க்கும் பொழுது எனக்கு என்னுடைய மைனா படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாபகத்திற்கு வருகிறது.
தமிழ் திரையுலகில் சாதனை படைத்த திரைப்படங்களின் வரிசையில் இந்த படமும் இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ” என்றார் இயக்குநர் பிரபு சாலமன் .
“எந்த ஒரு படம், முழு அர்ப்பணிப்போடு பணிபுரியும் நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருக்கின்றதோ, அந்த படம் நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வென்றுவிடும்.
அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் இந்த ஒரு கிடாயின் கருணை மனு. இது போன்ற ஒரு தரமான அதே சமயத்தில் தனித்துவமான கதையம்சத்தை தேர்வு செய்த ஈரோஸ் நிறுவனத்திற்கு ,
எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றேன். எப்படி பல வருடங்களுக்கு முன்பு ஆட்டை வைத்து எடுக்கப்பட்ட ஆட்டுக்கார அலமேலு படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோ,
அதைவிட அதிகமான பாராட்டுகளை இந்த ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் பெற்று, தமிழ் திரையுலகில் புதியதொரு சாதனையை படைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நடிகர் நாசர்