ஹார்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் (Harvest Moon Pictures) நிறுவனம் சார்பில், டாக்டர்.கே.பாலகுமரன் தயாரிக்க,
அப்பு கிருஷ்ணா என்ற புதுமுகம் நாயகனாக நடிக்க, நாயகியாக முக்ஷா என்பவர் நடிக்க ,
இவர்களுடன் நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர், போண்டா மணி, வெங்கல்ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க,
ரிஷா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட\,
பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘முந்தல்’.
ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கே.ஜெய்கிருஷ் இசையமைத்துள்ளார். சாய்சுரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜாய்மதி நடனம் அமைக்க,
வெ.மதன்குமார், அண்ணாமலை, தர்மபுத்திரன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
சிறு வயதிலேயே சிலம்பம், குங்பு, யோகா உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் திறமையானவராக விளங்கிய ஜெயந்த்,
திரையுலகில் ஸ்டண்ட் நடிகராகவும், இயக்குநராகவும் சுமார் 250 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது ‘முந்தல்’ மூலமாக இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஸ்டண்ட் ஜெயந்த், தனது முதல் படத்தை பிரம்மாண்ட ஆக்ஷன் நிறைந்த படமாக எடுத்திருப்பதுடன்,
புற்று நோய்க்கான விழிப்புணர்வு படமாகவும் இயக்கியிருக்கிறார்.
“புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த கூடிய மருந்துகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டாலும், வியாபார நோக்கில் அதனை சிலர் மறைத்து வைத்துவிட்டனர்.
அப்படி மறைக்கப்பட்ட ஒரு அபூர்வ மருந்தை தேடி ஹீரோ செல்ல, அதே மருந்துக்காக பலர் பயணிக்க இறுதியில் அந்த மருந்து யாரிடம் கிடைக்கிறது? என்பது தான் படத்தின் கதை.
படத்தில் இடம்பெறும் காட்சிகள் பெரும்பாலும் பயணம் சம்மந்தமான காட்சிகள் என்பதால் 40 க்கும் மேற்பட்ட லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல கப்பல், விமானம், ரயில் என்று அனைத்திலும் கதை பயணிக்கிறது.” என்று கூறும் ஸ்டண்ட் ஜெயந்த்அடிப்படையில் ஒரு மீனவர்
”நான் மீனவன் , கடலை பற்றி நன்கு அறிந்தவன் என்பதால், பெரிய ஆபத்தான கடல் காட்சிகளையும் ரொம்ப இயல்பாக படமாக்க முடிந்தது
கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதியில் படமாக்கப்பட்ட இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.
இந்த உலகத்தையே ஒருவன் தனக்கு ஆதாயமாக்கிக் கொண்டாலும், அவன் இறந்த பிறகு அவனது ஆன்மா அடையும் பயன்கள் என்ன?
– என்பது உள்ளிட்ட ஆன்மீக் தகவல்களைக் கொண்ட இப் படத்தில் வெரைட்டியான ஐந்து பாடல்கள் உள்ளன . :” என்கிறார்
படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையான மீன் உணவை வழங்கி அசத்திவிட்டாராம் ஜெயந்த்.
இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்டண்ட் கலைஞர் என்பதால்,
ஜெயந்த் உடனான நட்பின் மூலம் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் எந்தவிதமான டூப்பும் போடாமல், ரிஸ்க் எடுத்து நடித்துக் கொடுத்துள்ளார்.
ஹீரோவும் பல ரிஸ்கான காட்சிகளில் நடித்து அனைவரிடமும் பாராட்டுப் பெற்றுள்ளார்.
”தங்களது உயிரை பணையவைத்து மற்றவங்களை வாழ்க்கையில் உயர்த்திவிடும் ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்க்கையை நன்கு உணர்ந்த ஸ்டண்ட் ஜெயந்த்,
அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை படமாக் கியிருக்கிறார்” என்று பாராட்டுகிறது படக் குழு
விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.