ஃபிரண்ட்ஸ் சினிமா மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா ஆர்.தர்மராஜ், ஷோபா கே .கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் தயாரிக்க,
தெனாவட்டு, சிங்கம் புலி, வாலு , குரங்கு கையில் பூமாலை , எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் கேரக்டர் ரோலில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் நாயகனாக நடிக்க,
உடன் தயாரிப்பாளர் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்றாயன் , மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்க,
இசையமைப்பாளர் பரணி இசை அமைத்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஒண்டிக் கட்ட
நிகழ்ச்சியில் பல இசையமைப்பாளர்களும் இயக்குனர்களும் கலந்து கொண்டு மனப்பூர்வமாக பரணியை பாராட்டினார்கள் .
இசையமைப்பாளர் தீனா பேசும்போது ” பரணி சிறப்பாக பாடல்களைக் கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை . ஏனென்றால் நான்கு சுவர்களுக்குள் உட்கார்ந்து செய்யும் வேலை அது . ஆனால் டைரக்ஷன் செய்வது கஷ்டம் .
எஸ் ஏ ராஜ்குமார் தன் பேச்சில் ” இப்போது வரும் பல பாடல்கள் சத்தக் குப்பைகளாகவே இருக்கின்றன . நாம் ட்ரெண்ட் என்ற பெயரில் அவைதான் இசை என்று நினைத்துக் கொள்கிறோம் .
இசையமைப்பாளர் சத்யா பேசும்போது ” இசை அமைப்பாளர்கள் ஹீரோவாகப் போகும் காலத்தில் பரணி அதற்கும் மேலே ஒரு படி மேலே போய் இயக்குனராகி இருக்கிறார் .
மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இசையமைப்பாளர் அம்ரேஷ் தனது பேச்சில் ” உண்மைதான் . நாங்கள் எல்லாம் ட்ரெண்ட் என்ற மாயவலையில் சிக்கிக் கொண்டோம் .
இயக்குனர் சக்தி சிதம்பரம் பேசும்போது ” நானும் பிரபுதேவாவும் படம் பண்ண முடிவு செய்த நிலையில், ” ஒரு பயணத்தில் ,
இயக்குனர் பாரதி கணேஷ் பேசுகையில் ” வெளிநாடுகளில் எண்பது வயது ஆனாலும் இயக்குனர்கள் படங்களை எடுக்கிறார்கள் . ஆர் டி பரமன் வயதான பிறகுதான் இளமையான பாட;ல்கள் கொடுத்தார் .
அவரை இயக்குனர்கள் புறக்கணித்ததன் விளைவு ? இப்ப அவர் இயக்குனராவும் ஜெயிக்கப் போறார் ” என்றார் .
இயக்குனர் விஜய் சந்தர் தன் பேச்சில் “இந்தப் படத்தின் நாயகன் விக்ரம் ஜெகதீஷ் என் நெருங்கிய நண்பன் . ஒரே அறையில் நாங்கள் இருந்தோம் . அவன் கடின உழைப்பாளி . திறமைசாலி. குறிப்பா மிக நல்லவன்.
இயக்குனர் சாய் ரமணி பேசும்போது ” எனது சிங்கம் புலி படத்தில் வில்லனாக சிறப்பாக நடித்தவர் விக்ரம் ஜெகதீஷ் .
படத்தை எழுதி இயக்கி இருக்கும் பரணி பேசும்போது “இசையமைப்பாளராக என் பயணத்தைத் துவங்கி 18 வருடங்கள் ஆகி விட்டது.
இதுவரை எனக்குக் கிடைத்த அனுபவங்களையும் கற்றுத் தேர்ந்த விசயங்களையும் இந்தப் படத்தில் பயன்படுத்தி இருக்கேன்
பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு போகும் மணமகள் மாதிரி , நான் இசைத் துறையில் இருந்து இயக்குனர் துறைக்கு அடியெடுத்து வைக்கிறேன். இரண்டு வீட்டுப் பெருமையையும் நான் காப்பாற்றியாக வேண்டும் .
அதனால்தான் என் பிறந்த வீட்டு சொந்தங்களான இசையமைப்பாளர்கள் பாடல்களை வெளியிட , புகுந்த வீட்டு சொந்தங்களான இயக்குனர்கள் பெற்றுக் கொள்ளும்படி விழா நிகழ்ச்சியை அமைத்தேன்
இந்தப் படத்தில் கிராமத்து நாகரீகத்தை பதிவு செய்திருக்கிறேன் . படத்தின் கதாபாத்திரங்கள் பேசப்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மண்சார்ந்த வாழ்க்கையையும் மக்களையும் இதில் பிரதிபலித்து இருக்கிறோம்.
நாம் பிறந்தபோது ஒன்டிக்கட்டையாகப் பிறந்தோம் . போகும்போதும் ஒண்டிக் கட்டையாகத்தான் போகிறோம் என்பதை சொல்லும் படம் இது .
படத்தில் நடித்துள்ள விக்ரம் ஜெகதீஷ், தயாரிப்பாளர் தர்ம ராஜ், நேகா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் தர்மராஜுக்கு நல்ல பெயர் கிடைக்கும் .
என் கற்பனையை சிறப்பாக வடிவமைக்க தயாரிப்பாளர்களான தர்மராஜ் , கே கே சுரேந்தர் , என் மனைவியும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சுமித்ரா பரணி ஆகியோர் பக்கபலமாக இருந்தார்கள்.
குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பிடிக்கும் படமாக ஒண்டிக்கட்ட இருக்கும் ” என்றார் .
வாழ்த்துகள் !