”கானா பாடல்கள்தான் சென்னையின் அடையாளம்” — இயக்குனர் எஸ் பி ஜனநாதன்

 

pandi 9விகோசியா மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் நிதின் சத்யா – ரக்ஷா ராஜ் ஜோடியாக நடிக்க , இவர்களுடன்  மயில்சாமி, சிங்கம் புலி, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிக்க , 

இயக்குனர் அரவிந்த ராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய குணசேகரன் எழுதி இயக்கியுள்ள படம் பாண்டியோட கலாட்டா  தாங்க  முடியல

 படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் , அரவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர் . 
படத்தின் மூன்று பாடல்களும் முன்னோட்ட,மும்  திரையிடப்பட்டது . 
pandi 5ஒரு பாடலை  கானாபாலா  எழுதி பாடி நடித்து இருகிறார் , , இன்னொரு பாடலை  மரண கானா  விஜி , சசி என்பவரோடு  சேர்ந்து  எழுதியதோடு,   , பாடி நடித்தும்  இருந்தார் . 
மரண கானா விஜியின்  பாடலில்  உயரம் குறைவான நடிகர்கள் பலர்  பேய் மற்றும் குரங்குகள் உருவத்தில் உடை அணிந்து  தோன்றி நடித்து இருந்தது வித்தியாசமாக இருந்தது . 
மிகுந்த சிரமத்தோடு பணியாற்றி இருக்கும் அவர்களை மேடையில் அழைத்து பாராட்டியது , பாராட்டப்பட வேண்டிய விஷயம் . தவிர பாடல் வெளியீட்டிலும்  இவர்களுக்கு  தரப்பட்ட மரியாதையை போற்றுதலுக்குரியது 
படத்தின் முன்னோட்டமானது  நட்பு , காதல் , நடனம் , பேய்களின்   வருகை  என்று கலந்து  கட்டி இருந்தது . 
pandi 999
நிகழ்ச்சியில் பேசிய  கானா பாலா ” இந்த 2016 வது வருடத்தில் நான் பாடிய பாடல்கள் இதுவரை திரையில்  வந்து இருக்கின்றன.  
ஆனால் நான்  திரையில்  தோன்றி  நடித்து  இந்த வருடம் வெளிவரும்  முதல் பாடல் இதுதான் . ஆனால் எனது பாடலை விட விஜியின் பாடல் நன்றாக இருக்கிறது ” என்றார் . 
மரண கானா  விஜி  பேசும்போது ”  நான்  நிறைய  பாடல்கள் பாடி இருக்கிறேன் . சினிமாவில் சில பாடல்கள் வந்தும் உள்ளன . ஆனால் இந்தப் பாடலை  இயக்குனர்  சிறப்பாக எடுத்துள்ளார் . எல்லோருக்கும் நன்றி ” என்றார்  
பாடலாசிரியர் சசி பேசும்போது ” நானும் மரணகானா விஜியும் இதுபோல பல பாடல்களை எழுதி இருக்கிறோம் .
இனி ஒவ்வொன்றாக வரும் ” என்றார் .
இயக்குனர்  அரவிந்தராஜ் தனது பேச்சில்
pandi 7
”  இயக்குனர் குணசேகரன் , படத்தின்  தயாரிப்பாளரிடம் ஒவ்வொரு நாளும் எடுக்க வேண்டிய காட்சி அதற்கு ஆகும் செலவு என்று முன்பே தெளிவாக எழுதிக் கொடுத்து,
அதில் இருந்து ஒரு ரூபாய் கூட அதிகம் ஆகாமல் 24 நாட்களில் எடுத்து முடித்து இருக்கிறார் , எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது , என்னிடம் உதவியாளராக இருந்த ஒருவரிடம் இவ்வளவு சிக்கனமா என்று !
இந்தப் படம் வெற்றி பெறும் என்பதற்கு இதுவே உதாரணம் ” என்றார் . 
நிறைவாக  சிறப்புரை ஆற்றிய மக்கள் இயக்குனர்  எஸ் பி ஜனநாதன், 
pandi 3
” இன்றைய நிலையில் நல்ல படங்கள்  தேவைப் படுகின்றன .
ஒரு பெரிய இயக்குனர் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எனக்கு ஒரு திட்டம் வந்தது. மாதம் ஒரு படம் எடுக்க வேண்டும் . இரண்டு கோடி ரூபாய்தான் பட்ஜெட் .
இப்படி வருடம் பனிரெண்டு படம் வர வேண்டும்’ என்று சொன்னார்கள். 
இதை  எதற்காக நான் சொல்கிறேன் என்றால் இங்கே நல்ல படங்கள் தேவைப்படுகின்றன . அதே நேரம் தயாரிப்பாளர்கள் சுரண்டப் படுகிறார்கள் . அது மாற வேண்டிய ஒன்று .
அதை நோக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். 
pandi 8
இந்தப் படத்தில் கானா பாலா , மரண கானா விஜி ஆகியோர் பாடி இருப்பது சந்தோசம் . எனது முதல் படத்தில் நான் கானா பாடல்களைக் கொண்டு வந்தேன். அப்புறம் அதிகமாக தொடர் முடியவில்லை . 
கானா பாடல் என்பது ஏதோ இழிவான வார்த்தைகளைக் கொண்ட பாடல்கள் என்று பலரும் தவறாக பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் அது உண்மை அல்ல.  
கானா பாடல்களில் வரும் சில நல்ல வரிகளை பெரிய கவிஞர்கள் கூட எழுத முடியாது . 
உதரணமாக நான் எனது ஈ  படத்தில்  காலகாலமாக வழக்கில் இருக்கிற ஒரு பழைய கானா பாடலை பயன்படுத்தினேன்.
pandi 1
அதில் “குறுக்கு ஆறு நெடுக்கு ரெண்டு  சுத்தி வரும் வாழ்க்கை , நீ முன்னே நான் பின்னே எல்லோருக்கும் இருக்கு ” என்ற (ரீதியில் !) வரிகள் வரும் .
குறுக்கு ஆறு நெடுக்கு ரெண்டு என்பது பிணத்துக்கு கட்டப்படும் பாடையின் அளவு . பாடை கட்டுபவனுக்கு மட்டுமே அது தெரியும். இப்படி பல ஆழமான கருத்துகள் கானா பாடல்களில் உண்டு . 
சரியான கானா பாடல்கள் படங்களில் வெளிவந்தால் அது உலக அளவில் சென்னைக்கான  அடையாளமாக   விளங்கும் ” என்று முத்தாய்ப்பாக பேசி  முடித்தார் . 
உண்மை . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →