
கதகளி படம் வெளியாகி ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார் இயக்குனர் பாண்டிராஜ் .
பல விசயங்களை ஜஸ்ட் ஃபிரண்ட்லியாக பேசினார் .
” கதகளி மாதிரியான படத்தில் பாடல்கள் பெரிதாக நிற்காது . பாண்டியநாடு படத்தில் வந்த ஃபை ஃபை ஃபை கலாய்ச்ச்சி ஃபை பாடல் போல ஒரு பாடல் இதிலும் வைப்பதாக இருந்தது . ஆனால் இந்த பரபரப்பு வேகத்தில் பாடல் நிற்காது என்பதால் வரவில்லை .
பசங்க . பசங்க 2 , கதகளி எல்லாமே கமர்ஷியல் படம்தான் . அடுத்த படம் எந்த மாதிரி படமாக இருந்தாலும் கமர்ஷியல் படமாகத்தான் இருக்கும் ” என்று சொன்னார்
இது நம்ம ஆளு படம் பற்றிப் பேச்சு வந்த போது ” அதில நாலு பாட்டு இருக்கு . அதுவே போதும் . அப்படிப் பாத்தா படம் எப்பவோ ரெடியா இருக்கு . ஆனா தயாரிப்பாளர் தரப்பு ( டி .ஆர். மற்றும் சிம்பு ) அதை எடுக்கணும்னு சொல்றாங்க . அதனால்தான் ரிலீஸ் தள்ளிப் போகுது .. இதுக்கு மேல இத பத்தி பேச வேணாம். ஏன்னா இன்னிக்கு எனக்கு சந்திராஷ்டமம் ” என்றார் .
இது நம்ம ஆளு புரமோஷனுக்கு சிம்பு நயன்தாரா சேர்ந்து வருவாங்களா? என்ற கேள்விக்கு “ஏன் வரமாட்டாங்க . சேர்ந்து நடிக்கவே வச்சிட்டேன் . புரமொஷனுக்கு வர வைக்க முடியாதா என்னால்?” என்று திருப்பி அடித்தார் . (அதானே ?)
சிவகார்த்திகேயனுடன் அடுத்த படம் எப்போ என்று கேட்டபோது” மெரினா படத்துல நான் சிவ கார்த்திகேயனை அறிமுகப்படுத்தினேன். நாங்க சேர்ந்து பண்ணின கேடி பிள்ள கில்லாடி ரங்கா படம்தான் ரெண்டு பேருக்கும் கமர்ஷியலா நல்லா போனது . மறுபடியும் அவரை வச்சு பண்ணலாம்தான். ஆனா சம்பளம்னு அவர் கை விரல்கள் பத்தாம கால் விரல்களையும் சேர்த்து காட்டுவார் போல இருக்கே ?” என்றார் .
இது இப்படி இருக்க ,கமல்ஹாசனை வைத்து பாண்டிராஜ் ஒரு படத்தை இயக்கப் போவதாக ஒரு லேட்டஸ்ட் தகவல்