பட்டாம்பூச்சி @ விமர்சனம்

அவனி டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி நடிப்பில் பத்ரி எழுதி இயக்கி இருக்கும் படம். 

கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் இருக்கும் ஒருவன் ( ஜெய்) , மாலை முரசு நாளிதழின் நிருபரை (ஹனி ரோஸ்)  சந்திக்க விரும்புகிறான். சந்திக்கும் நிருபரிடம் தான் செய்யாத கொலைக்கு தண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் , ஆனால் செய்த எட்டு கொலைகள் பற்றி யாருக்கும் தெரியாது என்கிறான் .

மேற்படி சைக்கோ கொலைகாரனின் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு , சாராய வியாபாரி ஒருவனின் குண்டு வைப்புக்கு மகளையும் புத்திர சோகத்தால் மனைவியையும் இழந்த போலீஸ் அதிகாரி ( சுந்தர் சி ) கைக்கு வருகிறது . மாலைமுரசின் நிருபர் இந்த போலீஸ் அதிகாரிக்கு பெண் பார்க்கப்பட்டு, காதல் காரணமாக போலீஸ் அதிகாரியை மணக்க மறுத்தவர். 

மிகுந்த புத்திசாலித்தனத்துடன் செயல்படும் கொலைகாரன் சட்டத்தின் படியே ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுகிறான் . வெளியே வந்த அவன் மேலும் சிலரையும் பெண் நிருபர் , அவரது மகள்,,போலீஸ் அதிகாரியின் தந்தை ஆகியோரைக் கொல்ல முயல , என்ன நடக்கிறது என்பதே இந்தப் படம் .

போலீஸ் அதிகாரியாக மிக இயல்பாக நடித்துள்ளார் சுந்தர் சி.வில்லனாக ஜெய் … ஆரம்பத்தில் பொருந்தவில்லை என்றாலும் போகப் போக மிரட்டுகிறார் 
ஹனி ரோஸ் , மானஸ்வி இருவரும் ஓகே. 

கொலை செய்து விட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைவது , சட்டம் விரிக்கும் வலையை அந்த சட்டத்துக்கே வலை விரித்து முடக்குவது என்று ஜெய் கேரக்டர் செய்யும் வில்லத்தனம்   ரசிக்க வைக்கிறது . 

படத்தில் மாலைமுரசு நாளிதழின் தலைப்புச் செய்தியாக வரும் ஒரு வாசகம்… ‘ ஈன்ற தந்தையைக் கொன்ற தந்தை’ஈனுதல் என்பது உடம்பில் இருந்து  வெளிக் கொண்டு வரும் உயிர். ஆக என்றைக்கு ஒரு ஆணின் உடலுக்குள் கர்ப்பப்பை வந்து அத்துண கரு வளர்ந்து அவன் உடம்பில் இருந்து குழந்தை பெற்றெடுக்கப்படுகிறதோ அப்போதுதான் அவன் ஈன்ற தந்தை என்று ஆக முடியும் . 

மிகப் பழமையான பாணிக் காட்சிகளை ரத்தத்தில் முக்கி எடுத்ததற்குப் பதில் வித்தியாசமான காட்சிகள் அமைத்து சுவாரஸ்யத்தில் நீராட்டி இருக்கலாம்.

எனினும் கடைசிக் காட்சிகள் பரபரப்பு படபடப்பு . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *