ஃபீனிக்ஸ் @ விமர்சனம்

ஏ கே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அனல் அரசு தயாரிக்க, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா , வரலக்ஷ்மி, தேவதர்ஷினி , காக்கா முட்டை விக்னேஷ், அபி நக்ஷத்ரா, வர்ஷா நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி அனல் அரசு இயக்கி இருக்கும் படம்.

ஆளுங்கட்சியின் மோசமான எம் எல் ஏ வை  (சம்பத்) ஒரு டீன் ஏஜ்  பையன் ( சூர்யா) முப்பத்தி ரெண்டு துண்டுகளாக வெட்டிகே கொல்கிறான்  ஜெயிலில் அடைக்கப்படும் அவனை உள்ளேயே தீர்த்துக் கட்ட  செய்ய எம் எல் ஏ வின் மனைவி ( வரலக்ஷ்மி ) அந்த பொண்டாட்டியின் தகப்பனான அரசியல்வாதி (அஜய் கோஷ்)ஆகியோர்  திட்டமிட , அவனது அம்மா (தேவதர்ஷினி) தவிக்க 

ஜெயிலில் அவன் அஞ்சாறு சாமுராய் வீரர்களுக்கு இணையாக இருக்கிறான் . 

அரசியல்வாதி தரப்பு பெரும் முயற்சி எடுத்துக் கொலை செய்ய முயல் , அவன் பயப்படாமல் மீண்டும் ஜெயிலுக்கே வருகிறான் . எங்கயாவது தப்பிப் போய் பொழைச்சுக்கடா என்று போலீசே  சொல்ல அவன் மறுக்கிறான் . அவன் சொல்லும் பிளாஷ்பேக்கில்  அவன் அண்ணன் ( விக்னேஷ்) அண்ணனின் காதலி (அபி)  காதலியின் அம்மா , தம்பி  , செத்துப் போன எம் எல் ஏ எல்லோரும் வருகிறார்கள். 

நடந்தது என்ன ? முடிந்தது என்ன என்பதே படம். 

படத்தில் முதலில் கவர்வது வேலு ராஜின் அற்புதமாக கேமரா கோணங்கள் . படத்துக்கு பெரும் பலம். 
சூர்யா சண்டைக் காட்சிகளில் சிறப்பாக  அடிக்கிறார் . நடிப்பில் உற்சாகமும் இருக்கிறது . இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தலாம். 

அடாவடி அரசியல் கதாபாத்திரத்தில் சம்பத் அசத்தி இருக்கிறார் . 

சாம் சி எஸ் சின் பின்னணி இசை அருமை . 

ஆனால் எல்லாவற்றையும் விட அசத்தல் அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள்தான் . ஸ்டன்ட் மாஸ்டரே இயக்குனர் என்னும்போது சும்மா விட்டு விடுவாரா ? பிரம்மாதம். குறிப்பாக அந்த ‘MMA’ பாக்சிங் சண்டை.. பாக்கற நமக்கே கதி கலங்குது . 

படத்தின் ஒலி வடிவமைப்பும் அபாரம் . 

தேவதர்ஷினி எல்லாம் பத்து ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கிறார் . 

படம் முடிந்து விட்டது என்று பாதிப் பேர் வெளியே போன பிறகு பதினஞ்சு நிமிஷம் ஓடுது 

சண்டைக் காட்சிகள், ஒளிப்பதிவு , பின்னணி இசை  இவற்றை தவிர்த்து விட்டுப் பார்த்தால் வழக்கமான கதைதான்  எனினும் சண்டைப் பிரியர்களை படம் ஒருவேளை திருப்திப் படுத்த வாய்ப்பு உண்டு என்று யூகிக்க ஒரு வாய்ப்பு இருக்கவே செய்கிறது . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *