ஆர் கே செய்யும் ‘எக்ஸ்பிரஸ்’ வேக சினிமா விநியோகப் புரட்சி

rk 5

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே தனது மக்கள் பாசறை சார்பாக  தயாரித்து நாயகனாகவும் நடிக்க  மலையாளத்தில்  மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி ஆகிய நட்சத்திரங்களை வைத்து இயக்கிய ஸ்டார் டைரக்டர்  ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வைகை எக்ஸ்பிரஸ் . எல்லாம் அவன் செயல் படத்துக்குப் பிறகு ஷாஜி கைலாசும் ஆர் கே வும் இணையும் படம் இது. 

சென்னையில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் இந்தப் படத்தின் முழு படப்பிடிப்புக் களமும் ரயில்தானாம் .

ரயிலில் ஒரு தீவிரவாத கும்பல் போவதாக கிடைக்கும் தகவலை அடுத்து காவல் துறை அதிகாரி அதே ரயிலில் பயணிக்க , அங்கே இருப்பது தீவிரவாதக் கும்பல் மட்டுமல்ல , ஒரு சைக்கோவும் என்று படத்தின் கதை போகிறது.

rk 2

படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்.கே., நடிகை நீது சந்திரா, கோமல் சர்மா, காமெடி டைம் அர்ச்சனா மற்றும் படத்தின் திரைக்கதையாசிரியர்,வசனகர்த்தா v. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை  வெளியிட்டார் ஆர்.கே, ” படத்தின் பெயர் ‘பைரவா’ .  தமிழ் சினிமா முன்னணிஇயக்குனர் ஒருவர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் . 

இதுவரை நான்  மலையாள இயக்குனரான ஷாஜி கைலாசுடன் மட்டுமே பணியாற்றுகிறேன்   என்ற பெயர்  இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்இந்த திரைப் படம் அமையும்

 இப்படம் குழந்தைகளை வெகுவாக கவரும் வகையிலான கதையம்சத்தை கொண்டதாக இருக்கும்” என்றார். 

அதோடு’‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்துக்காக சிரத்தை எடுத்து அமெரிக்கா சன்று சண்டைப் பயிற்சி பெற்று  படத்தின் மூன்று முக்கிய சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். 

rk 6

மாஸ்டர் கனல் கண்ணன்   சண்டைக் காட்சிகளில் நான் ரிஸ்க் எடுத்து நடித்ததை வெகுவாகப் பாராட்டினார்” என்றார்

ஆனாலும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கிய அம்சம்  வைகை எக்ஸ்பிரஸ் படத்தை வியாபாரம் செய்யும்  முறையில் ஆர் கே கொண்டு வரவிருப்பதாகக் கூறும்  ஒரு மாற்று வழிதான் . அது என்ன? அவரே  சொல்கிறார் 

“படம் எடுக்க ஆறேழு மாதம் கஷ்டப்படும் நாம் அதை வியாபாரம் செய்வது பற்றி சரியாக சிந்திக்காமல் ‘தியேட்டருக்கு ஆளே வரவில்லை’  என்கிறோம். இது என்ன நியாயம்?

ஏர்செல் ஏர்டெல் என செல்போன்  நெட் ஒர்க் நிறுவனங்களுக்கும்  எங்கும் எளிதில் சிம் கார்டு கிடைக்கும்படி விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். கடைக்குக்  கடை விற்கிறார்கள்.  இப்படி ஒவ்வொன்றுக்கும் பத்து லட்சம் விநியோகஸ்தர்கள் இருக்கும்போது ஏன் சினிமாவுக்கு மட்டும் இன்னும் நிறைய விநியோகஸ்தர்கள் இருக்ககூடாது?

rk 4

பத்து பேர் விநியோகஸ்தர்கள் உள்ள சினிமாவுக்கு  பத்து லட்சம் பேர் விநியோகஸ்தர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து உருவானதுதான் எனது இந்த புதிய திட்டம். இப்போது சினிமாவில் இருக்கிற 10 விநியோகஸ்தர்களும்  பைனான்சியர் ஆகிவிட்டார்கள். இந்த பத்து பேருக்கு பதில் ஒரு லட்சம் சினிமா விநியோகஸ்தர்கள் களம் இறங்கினால், சினிமா  வியாபார முறை மாறும். 

அந்த வகையில் முதல் கட்டமாக…..

என்னுடைய   திரைப்படத்திற்கு தமிழகத்தில் மட்டும் பத்தாயரம் விநியோகஸ்தர்களைக் கொண்டு                           வரத் திட்டமிட்டுள்ளேன். அதற்காக ஆறு மாதங்களுக்கு மேல் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.                

எப்படி என்றால்…. ஆயிரம் டிக்கெட் வாங்குபவர் விநியோகஸ்தராக அறிவிக்கப்படுவார் . இவருக்கு நூறு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்.   பத்து டிக்கெட் வாங்கும் ரசிகருக்கு ஒரு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் .

rk 1

இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம் ரசிகர்களின் வரவேற்பு வெள்ளி, சனி ,  ஞாயிறு தவிர மற்றதினங்களிலும் அதிகமாகும்.இது தமிழ் திரையுலகில் மாபெரும் புரட்சியை  ஏற்படுத்தும்.        

 திருட்டு விசிடி விற்கிறவன் கூட, அவனது வாடிக்கையாளர்களுக்கு சிடியைக் கொடுத்து விட்டு, ”இது தரமாக இருந்தால் மட்டும் பணம் கொடுங்க ”

— என்று  கேட்டு வாங்குகிறான். திருட்டு விசிடி விற்கும் அவனே அவ்வளவு யோசிக்கும் போது,  நாம் ஏன் புதிய முறைகளைக் கையாண்டு விநியோகம்    செய்துகாட்ட முடியாது?

 இப்போது யாரும் பொருட்கள் வாங்குவதற்கு வெளிய செல்வதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் வீடு தேடி வருகிறது. அதே போல் நாமும் காலத்திற்கு ஏற்றார் போல்  நம் வியாபார முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான்….  

இந்த விநியோக முறையை வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறேன்.

rk 3

இதற்காக பணம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்ட பத்தாயிரத்தும் மேலான இளைஞர்களைத் திரட்டி விட்டேன். வைகை எக்ஸ்பிரஸ் படத்தை அடுத்து மற்ற பெரிய நடிகர்களின் படங்களையும் இந்த முறையில் வாங்கி வெளியிடவுள்ளேன்.

இதுவரை பெரிய நடிகர்கர்கள் தங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களை கட் அவுட் வைக்கவும், பாலாபிஷேகம் செய்யவுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த கோடிக்கணக்கான ரசிகர்களை தனது  படத்தின் மூலம் ஒரு பைசா சம்பாதிக்கக் கூட எந்த நடிகரும்  வழிவகை செய்ததில்லை. 

வீட்டில் அந்த  ரசிகர்களுக்கு எல்லாம்  வெட்டிப்பயல் சினிமா பைத்தியம் என்ற அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். எனது இந்த முயற்சி அதை மாற்றும். கட் அவுட் வைக்கிற ரசிகனும் தனக்கு தெரிந்தவர்களுக்கு டிக்கெட் விற்பதின் மூலம் தனது வீட்டிற்கு காசு கொடுக்கும் நிலையை உருவாக்கலாம். இதை செய்தே தீருவேன் ” என்றார் ஆர்.கே 

சக்சஸ் ஆனால் ஓ.கே. !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →