ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி @விமர்சனம்

review

வைத்திய பரம்பரையில் வந்த மக்கு பையன் (பரத்) படித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள எண்ணி காலேஜ் காலேஜாக அலைந்து ஒரு கல்லூரி வாசலில் ஒரு பெண்ணை (நந்திதா) பார்த்து முடிவு செய்கிறான் . அவள் தந்தையிடம் (தம்பி ராமையா) போய் எம் பி பி எஸ் டாக்டர் என்று பொய் சொல்கிறான் .

தனக்கு டாக்டர் மாப்பிள்ளை கிடைக்கப் போவதாக எண்ணி மகிழ்ந்து போய்,  கிட்டத்தட்ட மாமாவாகவே மாறி கல்யாணம் வரை கொண்டு போகிறான் பெண்ணின் தந்தை . இடைவேளையில்தான் தெரிகிறது அந்த பெண்ணும் படிக்காதவள் என்று .

பையன் பொண்ணு இரண்டு பேரும் பெரும் ஃபிராடுகள் என்பது இருவருக்கும் தெரிய வந்து சண்டை போட்டு கடைசியில் சமாதானம் ஆகிறார்கள் .

இந்த கிமு காலத்துக் கதையை கற்கால பாணியில் படமாக்கி படம் பார்க்கும்  ஒவ்வொருவரின் மண்டையையும் உடைக்கிறார்கள்.

பரத்
பாக்க வந்தவங்கள்ளாம் பாவம்தானே டார்லிங்?

பரத்துக்கு காமெடி நடிப்பு சுத்தமாக வரவில்லை . நந்திதா பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்து இருக்கிறார் . ஆனால் முள்ளுச் செடிக்கு கட்டிய சேலை மாதிரி இருக்கும் அவரது தோற்றத்தால் பார்க்கும்  நமக்கு அது கிளாமராகவே இல்லை .

தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், மயில்சாமி. சிங்கம் புலி இவர்களோடு இன்னும் பல காமெடி நடிகர்கள் இருந்தும் நகைச்சுவை படத்தில் இல்லவே இல்லை . எப்படா படம் முடியும் என்று விரல் கடித்து கடித்து நகச் சுவை கண்டதுதான் மிச்சம் (சாரி.. படம் பார்த்த எஃபெக்ட்.)

இந்தப் படத்தின் மூலம் யாரையும் ஒரு காட்சியில் கூட சிரிக்க வைக்க மாட்டோம் என்று தினசரி வீட்டில் கட்டி கட்டியாய் சூடம் கொளுத்தி சத்தியம் செய்த பிறகுதான் எல்லோரும் ஷூட்டிங்கிற்கே போனார்கள் போல .

தியேட்டருக்கு வரும் கொஞ்ச நஞ்ச ரசிகர்களையும் தியேட்டர்கள் இருக்கும் திசைப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க விடாமல் தடுக்கவே இது போன்ற படங்கள் உதவும் .

படம் சம்மந்தப்பட்ட அனைவரின் உடம்பிலும் ஆளுக்கொரு கிலோ ராட்ஷஷ ரணகள்ளி வேர் (நன்றி :  சின்னப் பூவே மெல்லப் பபேசு படம்)கொண்டு ‘ரப்பு… ரப்பு..” என்று தேய்த்தால் கூடத் தப்பில்லை

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ... அரைவேக்காடு முறை  செத்த பைத்திய மாங்கா மணி

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →