சதுரம் 2 @ விமர்சனம்

sadhuram-4

யோக்  ஜெபி , சனம்  , ரோஹித் , ரியாஸ் அன்சாரி  ஆகியோர் நடிக்க சுமந்த் ராதா கிருஷ்ணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் சதுரம் 2.

 இந்த சதுரம் நேர்த்தியானதா ? இல்லை நேர்த்திக் கடனானதா ?  பார்ப்போம்
ஒரு சதுர வடிவ அறைக்குள் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இருவர் கண் விழிக்கிறார்கள்
sadhuram-7
ஒருவன்… தவறு செய்யும் பெரிய மனிதர்களின் நிழலான காரியங்களை படம் புகைப்படம் எடுத்து தவறான மனிதர்களுக்கு கொடுத்து காசு சம்பாதிக்கும் இளைஞன் . 
இன்னொருவர்…. ஜூனியரின் இல்லீகல் கோரிக்கைக்கு  துணை போகாத —  ஆனால் மனைவிக்கு தெரியாமல் சக பெண் ஊழியரோடு  குடும்பம் நடத்துகிற பிரபல டாக்டர் .
சதுர அறைக்குள் பிணைக்கப்பட்ட இருவரின் சட்டைப் பையிலும் ஒரு கேசட் இருக்கிறது கூடவே ஒரு குட்டி டேப் ரிக்கார்டர் . அதில் “நீங்கள் குற்றவாளிகள் . உங்களுக்கு மரணம்தான் பரிசு .
sadhuram-6
ஆனால் அதே நேரம் எதிரில் இருக்கும் நபரைக் கொன்றால் உங்களை விடுவிப்பேன் . அல்லது இங்கே நான் வைத்து இருக்கிற சில குறிப்புகளை வைத்து தப்பிக்க முடிந்தால் தப்பித்துக் கொள்ளுங்கள் .
ஆனால் அதற்குள் உங்களுக்கு மரண பயம் வந்து இருக்கும் . அதன் பிறகு திருந்தி வாழுங்கள் என்ற செய்தி இருக்கிறது . 
தவிர அந்த அறையில் கொடூரமாக கொல்லப்பட்ட ஒரு மனிதனின் உடலும் இருக்கிறது . 
sadhuram-5
அவர்கள் தப்பிக்க முயலும் அதே நேரம், நாட்டுக்காக பெரும் சேவை செய்த அதிகாரி ஒருவரின் கதையும் விரிகிறது .
அவரின் காதல் மனைவிக்கு இரட்டைக் குழந்தை உருவாகி அவர்கள் சந்தோஷமாக இருக்கும் நேரம், அந்த அதிகாரிக்கு  மூளையில் கட்டி வந்து விரைவில் மரணம் என்ற நிலைக்கு போய் விட்டது சொல்லப் படுகிறது . 
சதுர அறையில் சிக்கிய இருவரும் கொன்று கொண்டார்களா? தப்பித்தார்களா ?
sadhuram-2
மூளை கட்டி அதிகாரிக்கு இதில் என்ன பங்கு ? என்பதே இந்த சதுரம் 2. 
ஒரு சிறிய அறையில் பெரும்பகுதி கதை நிகழ்வதும் குறிப்புகள் மூலம் கதையை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்படுவதும் பாரட்டுக்குரிய விஷயம்தான். .
அதே போல் கிளைமாக்ஸ் டுவிஸ்டும் , நாங்க எல்லாம் நல்லா வாழ முடியாத உலகில் நீங்க ஏன் வாழணும் என்ற கேள்வியும் சிறப்பு .
sadhuram-3
ஆனால் saw  என்ற ஆங்கிலப் படத்தைக் காப்பி அடித்தவர்கள் அதை வெகு ஜனமக்களைக் கவரும் வகையில் சொல்லத் தவறி விட்டார்கள் . 
நாங்க எல்லாம் நல்லா வாழ முடியாத உலகில் நீங்க ஏன் வாழணும் என்ற கேள்வியை இன்னும் சிறப்பான சம்பவங்கள் மற்றும் படமாக்கல் மூலம்  சொல்லத் தவறியதால் … 
சதுரம் .. ரொம்பவே நசுங்கிக் கிடக்கிறது

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *