உச்சத்துல சிவா @ விமர்சனம்

siva-1

கே என்டர்டெயின்மென்ட் சார்பில் தேவி கரண் தயாரிக்க, 

கரண், நேஹா , நரேன் .இளவரசு ஆகியோர் நடிக்க , 
கதை திரைக்கதை வசனம் எழுதி ஜே பி என்பவர் இயக்கி இருக்கும் படம் உச்சத்துல சிவா .
உச்சம் மச்சமா இல்லை மிச்சமா ? பார்ப்போம். 
ஷீரடி சாய் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக இருக்கும் சிவா (கரண்) , மறு நாள் காலை கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போக வேண்டிய சூழலில், 
ஒரு வாடிக்கையாளரை இறக்கி விட்டுவிட்டு வீட்டுக்குப் போகும் வழியில் , தன்னைக் கொல்ல வருவோரிடம் இருந்து தப்பி ஓடிவரும் ஒரு இளம் ஜோடியைப் பார்க்கிறான் . 
siva-2
துரத்தி வந்தவர்கள் அந்த ஆணை  கொன்று விட,,  பெண்ணான நிலாவை (நேகா) மட்டும்  சிவாவால் காப்பற்ற முடிகிறது .
அவளைக் காப்பாற்றும் முயற்சியில் சில போலீஸ் அதிகாரிகள், சில ரவுடிகள் ஒரு போதைப் பொருள் கடத்தல் கும்பல் இவற்றின் பகைக்கு ஆளாகிறான். 
வேறு யாரையும்  பெண் பார்க்கப் போக வேண்டாம் . இவளையே அம்மாவிடம் கொண்டு போய் நிறுத்தி  மனைவியாக்கிக் கொள்ளலாம் என்று சிவா முடிவு செய்யும் சமயம் , 
ஓர்  எதிர்பாராத திருப்பம் .!
siva-3
எல்லாக் கதையும் தலைகீழாகப் போய், கடைசியில்  போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிவா ஜெயிலுக்குப் போக வேண்டி அமைகிறது . 
அதில் இருந்து சிவா மீண்டானா? காதல் என்ன ஆச்சு ? பொண்ணு பாக்கப் போகிற  பிளான் என்ன ஆச்சு ? 
— என்பதே இந்த உச்சத்துல சிவா . 
இத்தனை வருடத்துக்குப் பிறகும் கரன் இன்னும் இளமையாக இருக்கிறார் . உற்சாகமாக நடிக்கிறார் . அதிரடியாக சண்டை போடுகிறார் . 
நாயகி நேகா இயல்பான அழகு . குறை சொல்ல ஒன்றும் இல்லை . 
இடைவேளை டுவிஸ்ட் யாரும் எதிர்பாராதது 
siva-4
கனவுப் பாடல் காட்சி  எடுக்கப்பட்ட விதத்தில் இயல்பான குளுமை . 
இருக்கட்டும் .. இத்தனை வருட சினிமா அனுபவம் உள்ள நிலையில் சொந்தப் படம் எடுத்து இருக்கிறார் கரண்.
அப்படி இருக்கும்போது எல்லோரையும் பேச வைக்கும் ஒரு வித்தியாசமான் கதை திரைக்கதையோடு களம் இறங்கி அசத்தியிருக்க வேண்டாமா ?
இப்படியா காதல் ஜோடி, அப்பாவிப் பெண்,   போதை மாஃபியா  என்று ….
எட்டுத்  தெருவுக்கு மூக்கைத் துளைக்கும் புளிச்ச மாவை மீண்டும் மீண்டும்  ஊற்றி ஊற்றி அரைப்பது ?
உச்சத்துல  .. சிவ சிவ ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *