‘சத்தம் இன்றி முத்தம் தா’ பத்திரிக்கையாளர் சந்திப்பு

செலிபிரிட்டிட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில், ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம் ‘சத்தம் இன்றி முத்தம் தா’.

மார்ச் 1-ம் தேதி திரைக்கு இப்படம்  வரவுள்ளதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாயகி பிரியங்கா திம்மேஷ் பேசும்போது, “இந்தப் படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது திடீரென்று நடந்த ஒரு விஷயம். முதல் நாள் எனக்கு போன் செய்து இந்தப் படத்தைப் பற்றிச் சொன்னார்கள். அடுத்த நாள் நான் சென்னை வந்து இந்த படத்தில் கலந்து கொண்டேன். 

இதற்கு முதலில் நான் ஶ்ரீகாந்த் சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். முதலில் இயக்குநரிடம் இருந்து போன் கால் வந்தது. உடனேயே ஸ்ரீகாந்த் சாரிடம் இருந்தும் அழைப்பு வந்தது. அவர்தான் இந்தப் படத்தின் கதையை என்னிடம் விவரித்துச் சொன்னார். எனக்கு கதை பிடித்திருந்தது. ஆனால், இயக்குநர் சொன்ன தலைப்பு மட்டும் எனக்குப் புரியவில்லை. ஸ்ரீகாந்த் சார்தான் அதற்கு அர்த்தம் சொன்னார்.

இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திற்குத் தேவையான உழைப்பைக் கண்டிப்பாகக் கொடுப்பேன் என்று சொன்னேன். சொன்னதைச் செய்துள்ளேன்.

நான் இப்போது தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்றுக் கொண்டு தமிழில் நிறையப் படங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்தப் படம் எனக்கு இதுவரை செய்த படங்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்தது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்..” என்றார்.
 
இசையமைப்பாளர் ஜுபின் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. ஆனந்த் சார்தான் நான் இந்தப் படத்தில் பணியாற்ற மிக முக்கிய காரணம். இதுவரை நான் பணியாற்றிய படங்களுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் மிக நன்றாக வந்துள்ளது. அதில் ஒரு பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். பாடலாசிரியர் நல்ல வரிகளைக் கொடுத்துள்ளார். படம் ஆரம்பத்தில் பரபரப்பாக இருந்தாலும் முடிவு உங்களைக் கண் கலங்க வைக்கும். ஶ்ரீகாந்த் சாரினால் இன்று இங்கு வர முடியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். மொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துகள்…” என்றார்.
 
இயக்குநர் ராஜ்தேவ் பேசும்போது, “இந்தப் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது போலத்தான் எழுதவும் ஆரம்பித்தேன். இந்தப் படத்திற்காக நடிகர்களைத் தேர்வு செய்யும்போது இது போன்ற கதைகள் கொண்ட படங்களில் நடிக்காதவர்களைத்தான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
 
அப்படித்தான் ஶ்ரீகாந்த் சாரை சந்தித்து இந்த படத்தைப் பற்றிப் பேசினேன். அனைத்து நடிகர்களையும் அப்படித்தான் தேர்வு செய்தேன். கதாநாயகியும் ஹீரோவுக்கு நிகராக சிறப்பாக நடித்துக் கொடுத்தார். இசையமைப்பாளரும் நானும் நிறைய டிஸ்கஸ் செய்தோம். படத்தில் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரில் சத்தம் அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும் இது தலைப்புக்கேற்ற படமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இத்திரைப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும்.
 
படத்தில் ஸ்ரீகாந்தின் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகப் பெரியது. அவர் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படமாக இருக்கும்..” என்றார்.
 
 இப்படம் தமிழகமெங்கும் வரும் மார்ச் 1-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *