புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிவகுமாரின் ‘ திருக்குறள் 100 ‘

ஓவியராக வாழ்க்கையைத் துவங்கி நடிகர் ஆகி , இரண்டு கதாநாயக நடிகர்களுக்கு அப்பாவாகி அதற்கடுத்து கம்பராமாயணம் மகாபாரதம் இவற்றைப் பற்றிய பேச்சுரை ஆசிரியராக ஜொலிக்கிறார் சிவகுமார். 

கம்பராமாயணம் , மகாபாரதம் இவற்றை அடுத்து திருக்குறளை எடுத்துக் கொண்டார் சிவகுமார் .  பிரபலமான மற்றும் தனது உறவுகள் உட்பட்ட பிரபலமல்லாத மனிதர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சம்பவத்துக்கும் பொருத்தமாக ஒரு திருக்குறளை சொல்லும் வகையில் வள்ளுவர் வழியிள் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள் என்ற விளக்கத்தோடு ‘திருக்குறள் 100’ என்ற தலைப்பில் ஈரோடு புததகத் திருவிழாவில் உரை அரங்கேற்றம் செய்தார். வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு என்ற குரலில் துவங்கி நூறாவது சம்பவமாக மலக்குழி இறங்கும் துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ‘ என்ற குரலோடு முடித்தார்.  

தங்களை அறியாமலே வள்ளுவர் வழியில் வாழ்ந்த மனிதர்கள் வாழ்வையும் அதற்கான சம்பவங்களையும் இடை விடாது தொடர்ந்து நான்கு மணிநேரம் அந்த உரையில் கொண்டாடினார் சிவகுமார். அதனால்  ஒரு மாபெரும் இலக்கிய சாதனை என்று தமிழறிஞர்களால் கொண்டாடப்பட்டார். 

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அந்த உரை ஆற்றுதல் நடந்தபோது இரவு நெடுநேரம் சென்றும் கூட்டத்தினர் கவனம் சிதறாமல் உரையைக் கேட்டது ஒரு மாபெரும் சாதனை பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த நிகழ்ச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் துவங்கி காணும் பொங்கல் வரை தொடர்ந்து மூன்று நாட்கள் (15, 16, 17- 01- 2023 ) பிற்பகல் மூன்று மணிக்கு ஒளிபரப்பாகிறது . அடுத்து புதுயுகம் தொலைக்காட்சியில் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) காலை பத்து மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

இதை ஒட்டி திருக்குறள் 100 நிகழ்ச்சியின்  தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது . . உண்மையிலேயே பார்க்க வேண்டிய பயனுள்ள நிகழ்ச்சி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *