துணிவு படத் தயாரிப்பளர் போனி கபூர் துணிவு படம் பற்றி கூறும் போது, “துணிவு படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் . நான் இந்தப் படத்தை ரசித்து தயாரித்தேன்.
ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் சமம்தான். அது போல எனக்கு நான் தயாரித்த எல்லா படங்களும் சமம்தான். நான் தயாரித்த நேர்கொண்ட பார்வை, வலிமை , நெஞ்சுக்கு நீதி , விசேஷங்க எல்லா படங்களும் எனக்கு அப்படித்தான். ஒரு படத்தை ரசித்து சரியாக தயாரித்தால் வெற்றி உறுதி . துணிவு படத்தில் நாம் அனைவருமே வெற்றி பெற்று உள்ளோம் . அஜித், வினோத் , ஜிப்ரான் எல்லோரும் சிறப்பாக பங்களித்து உள்ளனர் . மஞ்சு வாரியார் கிளாமராக ஜொலிக்கிறார்.
என் மேல் அஜித், வினோத் இருவருக்கும் நம்பிக்கை இருந்தது. எனக்கும் அவர்கள் மேல் இருந்தது . இது நல்ல பயணம் . எங்கள் பயணம் இனியும் தொடரும்.
சார்லி சாப்ளின் தமிழ்ப் படத்தை நான் நோ என்ட்ரி என்று இந்தியில் எடுத்தேன் . அதற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்தது .
உலக அளவில் நல்ல படங்கள் பல்வேறு மொழிகளில் பல்வேறு முறை எடுக்கப்படுவதும் தொடர்ச்சி எடுக்கப் படுவதும் மொழி மாற்றம் செய்யப்படுவதும் சகஜமே. ஓ டி டி இன்னும் பெரிய அளவில் படங்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது
துணிவு இந்தியில் ஓ டி டி மற்றும் டிவிக்காக மொழி மாற்றம் செய்யப்படும் .
புதிய படைப்பாளிகளோடு கரம் கோர்க்க காத்திருக்கிறேன் . இந்தியாவின் பல மொழிப் படைப்பாளிகளின் முதல் இந்திப் படம் என்னால் தான் தயாரிக்கப்பட்டது .
பயோபிக் படங்களில் எனக்கு ஆர்வம் இல்லை
ஒரு தயாரிப்பாளராக என்ன பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும் . நான் கூரை மேல் உட்கார்ந்து சத்தம் போட மாட்டேன் “என்றார்
