“மலையாளத்தின் தாய்மொழி தமிழ்தான்.”  – மலையாள இயக்குனர் வினீஷ் மில்லினியம்  பேச்சு   

வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகி பாபு நடிப்பில்,  இயக்குனர்  இயக்கத்தில்,  மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”.  
 
இப்படத்தில்  ஹரீஷ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.என். அருணகிரி இசையமைத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார். 
 
 வரும் மே 16 ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில்,  டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில்   தயாரிப்பாளர் ஜாகிர் அலி பேசியபோது, “நான் ஒரு மலையாளி, தமிழ் மீதான நம்பிக்கையில், யோகி பாபு மீதான அன்பில், இப்படத்தை எடுத்துள்ளோம். நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். யோகிபாபு இப்படத்திற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். “என்றார். 
 
எடிட்டர் சாபு ஜோசப் பேசியபோது, “இயக்குநரை 10 வருடம் முன்பிருந்தே தெரியும். அவர் இயக்கிய தீப்பிடிக்கும் பச்சை மரம் படத்திற்கு என் மனைவிதான் எடிட்டர், இப்போது பத்து வருடங்கள் கழித்து, இப்படத்திற்கு நான் எடிட்டர் மகிழ்ச்சி. என்னிடம் கதை சொல்லும் பல இயக்குனர்கள்,  யோகிபாபு தான் ஹீரோ என்பார்கள். யோகி பாபு எல்லோரும் அணுகக்கூடிய நாயகனாக இருக்கிறார். அவர் அதிக படம் செய்யும் போது, சினிமா நன்றாக இருக்கும். இந்தப்படத்திற்கு மது அம்பாட் கேமராமேன், பல தேசிய விருதுகளை வென்றவர். அவர் படத்தில் நான் இருப்பது எனக்குப் பெருமை. “என்றார். 
 
நடன இயக்குனர், நடிகை வசந்தி பேசியபோது, ” யோகிபாபு நிறைய ஒத்துழைப்பு தந்தார். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளில் உண்மையிலேயே அவரை அடித்துள்ளேன், பரவாயில்லை தயங்காமல் நடியுங்கள் என எனக்கு ஊக்கம் தந்தார். அவர் நிறைய உதவும் குணம் கொண்டவர். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது.”என்றார். 
 
நடிகர்  ஶ்ரீதர் கோவிந்தராஜ் பேசியபோது, “இயக்குநர் விநீஷ் சார், என்னை நம்பி மிகப்பெரிய கதாபாத்திரம் தந்துள்ளார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளேன் என நம்புகிறேன். யோகிபாபு அண்ணாவிடம் ஒரு சாரி கேட்டுக்கொள்கிறேன். படத்தில் அவர் மீது பாட்டிலால் அடிக்கும் காட்சியில் உண்மையிலேயே அடித்து விட்டேன் ஆனால் அவர், கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், கவலைப்படாதே இயக்குநருக்கு ஒகே இல்லை என்றால், ஒன்ஸ்மோர் போகலாம் என்றார். என்னை ஊக்கப்படுத்தினார் அவருக்கு என் நன்றி. “என்றார். 
 
நடிகர் அருவி பாலா பேசியபோது, “இந்த படம் செய்யும் போது தான் வேட்டையன் பட வாய்ப்பு கிடைத்தது.  மது அம்பாட் சார் மூலம் தான் இந்த பட வாய்ப்பு  எனக்குக் கிடைத்தது. அவருக்கு நன்றி. வாய்ப்பு தந்த இயக்குனர் வினீஷ் அண்ணாவுக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி. யோகி பாபு அண்ணன் நிஜத்திலும் அண்ணனாகவே நடந்து கொண்டார். அவருடன் பல படங்களில் நடித்துள்ளேன்,  என்னை கைட் பண்ணிக் கொண்டே இருப்பார். அவருக்கு நன்றி” என்றார்.
 
ஒளிப்பதிவாளர் மது அம்பாட் பேசியபோது, “இந்தப் படத்திற்காக வினீஷ் என்னை அழைத்தது மகிழ்ச்சி. யோகி பாபு மிக நல்ல நடிகர். சிறப்பாக நடித்துள்ளார். எல்லோரும் மிக சந்தோஷத்துடன் வேலை பார்த்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் “என்றார் 
 
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியபோது, “தயாரிப்பாளர் ஜாகிர் அலிக்கு வாழ்த்துகள். மது அம்பாட் இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர், அவர் இப்படத்தில் வேலை பார்த்துள்ளது பெருமை. அவர் எப்போதும் தேர்ந்தெடுத்துத் தான் படம் செய்வார். இது இப்படத்திற்குப் பெருமை. எல்லோரும் மிகவும் தன்னடக்கமாக இருக்கிறார்கள். யோகிபாபு பல சின்ன பட்ஜெட்  படங்களில்   தொடர்ந்து நடிக்கிறார். இது சினிமாவுக்கு நல்லது. எனக்கு இன்னும் படம் காட்டவில்லை. , டிரெய்லர் நன்றாக உள்ளது. படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.  அனைவருக்கும் வாழ்த்துகள். 
 
யோகிபாபுவை கலகலப்பு படத்திலிருந்து பார்க்கிறேன், அவரது இந்த உயரத்திற்கு கடின உழைப்பு தான் காரணம். யோகிபாபு புரமோசன் வருவதற்கு 7 லட்சம் கேட்கிறார் என புகார் கூறுகிறார்கள், ஆனால் அவர் அப்படியில்லை என எனக்குத் தெரியும். அவரை 1 நாள் நடித்த படத்திற்குக் கூப்பிடுவது எல்லாம் அழகல்ல. அவர் பல படங்களுக்கு புரமோசனுக்கு வருகிறார். அவரைப் பற்றி தப்பாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். “என்றார். 
 
இயக்குநர் வினீஷ் மில்லினியம் பேசியபோது, “நான் கொஞ்சம் மலையாளி, மலையாளத்தின் தாய்மொழி தமிழ்தான். 2013 ல் புதுமுகங்களின் முயற்சியில் தீக்குளிக்கும் பச்சை மரம் படம் எடுத்தேன் பலருக்குத் தெரிந்திருக்கும்.  அப்போது என்னிடம் 400 பேர் நடிக்கக் கேட்டு வந்தார்கள், அப்போது ஒருவர் என்னிடம் வந்திருந்தார், அவருக்கு ஒரு நாள் 1000 ரூபாய் சம்பளம் பேசி 25 நாள் நடிக்கச் சொன்னேன், ஆனால் நான் நிறையப் படம் நடித்துள்ளேன், எனக்கு 2000 சம்பளம் தாருங்கள் என்றார், ஆனால் நான் நடிக்க விருப்பமிருந்தால் நடி இல்லையென்றால் ஓடிவிடு என்றேன். அவர் தான் யோகிபாபு. 
 
ஆனால் சில வருடம் கழித்து நான் போன் செய்த போது, அன்போடு என்னை அழைத்துப் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  நான் படம் செய்யப்போகிறேன் என்று சொன்ன போது, கதை எல்லாம் சொல்ல வேண்டாம், உங்களுக்காக நடிக்கிறேன் எனச் சொன்னார். அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படம் கண்டிப்பாக அவரது நடிப்பில் மிக வித்தியாசமான படமாக இருக்கும்.  மது அம்பாட் சார் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவார், இப்போது சொன்னாலும் மலை ஏறுவார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர் என் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எனக்குத் தமிழில் முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் தாணு சாருக்கு நன்றி. தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி”. என்றார்.
 
கலைப்புலி தாணு  பேசியபோது, “இப் படத்தின் டிரெய்லர் பாடல்களை முன்பே பார்த்து விட்டேன்.  நண்பர் தயாரிப்பாளர் ஜாகிர் அலியை வரவேற்கிறேன். யோகிபாபு எல்லோருக்கும் நல்லவராகத் தான் இருக்கிறார். நான் போன் செய்தபோது, ஒரு தயாரிப்பாளருக்குப் பணமே வாங்காமல் நடித்துத் தந்தார். அவரது பெயருக்குக் களங்கம் வரக்கூடாது. இந்தப் படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள். “என்றார். 
 
நடிகர் யோகிபாபு  பேசியபோது, “தயாரிப்பாளர் ஜாகிர் அலி மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் செய்துள்ளார், என்னால் இல்லை, அதற்கு வேறு பல காரணங்கள், ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார். இயக்குநர் வினீஷ் சார் சொன்னது உண்மை தான். தீக்குளிக்கும் பச்சை மரம் 2013ல் நடித்தேன், 1000 ரூபாய் சம்பளம். மீண்டும் பல வருடம் கழித்து போன் செய்து அவர் பேசியவுடனே சொல்லுங்கள் வினீஷ் சார் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன். நான் எல்லோருக்கும் சப்போர்ட் செய்து தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். 
 
என்னிடம் உதவியாளராக இருந்தவர் ஹீரோவாக நடித்தார் அந்த படத்தில் ஒரு நாள் நடித்தேன், அந்த படத்திற்குத்தான் 7 லட்சம் கேட்டேன் எனப் புகார் சொல்லியுள்ளார்கள். இது நான் நடித்த படம் அதனால் நான் வரவேண்டும், வந்துள்ளேன்.  நான் என் சம்பளத்தை, நிர்ணயிப்பதில்லை, ஆனால் எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை. எனக்கு வர வேண்டிய சம்பளம் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதனால் யாரும் தவறாகப் பேசாதீர்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.”என்றார். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *