தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்கிற ஓம்கார் எனும் கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்த,
அபிமன்யு சிங் வரும் காட்சியில் எல்லாம் மிரட்டல்தான் . சரி இவர் எதைப் பார்த்து மிரண்டார் ? அவரே சொல்கிறார் .
” இயக்குநர் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது,
இது உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த கதையில் அவ்வளவு அறிவுபூர்வமான விஷயங்கள் இருந்தது.
என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் வரலாறும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
கார்த்தி மிகசிறந்த மனிதர். அவர் எப்போதும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக தெளிவாகவும் , முழு கவனத்தோடும் செய்யக்கூடியவர்.
காட்சிக்கு காட்சி தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்பார். அது சரியாக வரும் வரை தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பார்.
தன்னுடைய பங்களிப்பால் ஒட்டுமொத்த காட்சியும் சிறப்பாக வரவேண்டும் என்று சிரத்தை எடுத்து வேலை செய்வார்.
கண்ணியமானவர் , கடின உழைப்பாளி . அனைவரிடமும் எளிமையாக பழகுபவர்.
இயக்குநர் வினோத் தன்னுடைய நடிகர்களை அதிகம் நேசிப்பார். எப்போதும் எதையும் அமைதியாகக் கையாள்வார். காட்சிகள் சிறப்பாக வரும் வரை கடுமையாக உழைப்பார்.
அதிக கவனம் , தூய்மையான மனம் போன்றவை எனக்கு வினோத்திடம் மிகவும் பிடித்தவை.” என்று கூறும் அபிமன்யூ சிங் ,
படப்பிடிப்புத் தளத்தில் நடந்த மறக்கமுடியாத கடினமான நிமிடங்களை நினைவு கூர்கிறார்.
” நாங்கள் வெயில் மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் பருவத்தில் படபிடிப்பு நடத்தவேண்டி இருந்தது.
நான் படப்பிடிப்பு முடிந்து ஒரு நாளைக்கு 15 முறை என் முகத்தை கழுவ வேண்டும். அங்கே அவ்வளவு தூசி படலம் இருக்கும்.
இப்போது படத்தின் வெற்றி எல்லா கஷ்டங்களையும் மறக்கடித்துள்ளது” என்றார் அபிமன்யு சிங்.