வேம்பு @ விமர்சனம்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷும் விஜயலக்ஷ்மியும் தயாரிக்க, ஹரி கிருஷ்ணன் , ஷீலா ராஜ்குமார் நடிப்பில் ஜஸ்டின் பிரபு எழுதி இயக்கி இருக்கும் படம் . 

கிருஷ்ணகிரி மாவட்டக் கிராமப் பின்னணியில் பாடு பரதேசி  அப்பா அம்மாவுக்கு ஒத்தைப் பிள்ளையாகப் பிறந்த வேம்பு ( ஷீலா ராஜ்குமார்) சிறு வயது முதலே சிலம்பக் கலையில் வல்லவள். விட்டால் மாநில , தேசிய அளவில்  முன்னேற வாய்ப்புள்ள  அந்தப் பிள்ளையை, கிராமத்து பெரிய மனுஷங்க , ‘  பொம்பளைப் புள்ள புகழ் பெறுவதா ?’  என்ற நோக்கில் , ”குடும்பத்துக்கு ஆகுமா?”  என்று எல்லாம் அவள் அப்பனிடம் போட்டு விட,ம , அவளது மாமனுக்கு  ( ஹரி கிருஷ்ணன்)அவளை  திருமணம் செய்து வைக்க முடிவு எடுக்கின்றனர்.  
 
வேம்புவுக்கு மாமனைப் பிடிக்கும் என்பதால் சிலம்பக் கலையை விட்டு ஒரு குழப்ப நிலையில் மாமனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள் 
 
கல்யாணம் முடிந்த உடன் நடந்த ஒரு விபத்தில் கணவனின் பார்வை பறிபோக, அடுப்படியில் வேகும் விறகாய்,  ரேஷன் கடைக்கு அலைபாயும் தராசுத் தட்டாய்,  ,கண்ணிழந்த கணவனுக்கு வேலைக்காரியாய் ஒடுங்கிப் போகிறாள் வேம்பு.  . வறுமை மேலும் விரட்ட புகைப்படக்கலைஞராக இருந்த கணவன் மற்றும் அவனது உதவியாளர் சிறுவன் மூலம் புகைப்படக் கலையைக் கற்றுகே கொண்டு  கணவனின் போட்டோ ஸ்டுடியோவை எடுத்து நடத்துகிறாள் . 
 
அவள் கற்ற கலைகள் அவளுக்கு உதவியதா? ஆம் எனில் எப்படி ? இல்லை எனில் ஏன் என்பதே படம் 
 
அச்சு அசல் கிராமம் , காடு மலை கரடு பின்புலம் . எளிய முகங்கள் , 
 
ஆங்கங்கே ஓவர் ஆக்டிங் அல்லது பத்தாத நடிப்பு  எட்டிப் பார்த்தாலும்,  கதாபாத்திரத்தைத் தாங்கும் நடிக்க நடிகையர் . 
 
கதா நாயகியாக நடிக்க சிலம்பம் ஓரளாவது கட்டாயம் தெரிய வேண்டும் எனபதால் நடிக்க ஆட்கள் கம்மி என்ற நிலையில் உற்சாகமாக சிலம்பமாடி தனது அவசியத்தை நிரூபிக்கிறார் ஷீலா . குளோசப் காட்சிகளில் கொஞ்சம் பயமுறுத்தினாலும்  கம்பைன்ட் ஷாட்களில் உயிர்ப்புடன்  ஜொலிக்கிறார் . லாங் ஷாட்களில் நடக்கும் காட்சிகளில் உடல் மொழிகளில்  அசத்துகிறார் 
 
குருடன் நடிப்பில் யதார்த்தத்துக்கும் மேல் துருத்திக் கொண்டு தெரிகிறார் ஹரி கிருஷ்ணன் . நாயகியின் அப்பாவாக ஜெயராவ் இயற்கை போன்ற பாவனையில் படு செயற்கை நடிப்பு 
 
வசனங்கள் குழந்தைத்தனம் . 
 
பாராட்டுக்குரிய டைரக்ஷன்  
 
பெண் குழந்தைகளுக்கு எந்த சூழலிலும் ஒரு தொழிற் கலையும் தற்காப்புக்கலையும் அவசியம் என்பதை சொல்லும் கருத்தியல் கொண்டாடத்தக்கது . வாழ்த்துகள் .. பாராட்டுகள் . 
 
ஆனால் சினிமாவுக்கு நல்ல கதை மட்டும் போதாது . அதை நல்லபடியாக ஈர்க்கும்படி சொல்லும் திரைக்கதையும் மேக்கிங்கும் கட்டாயம் . 
 
அது இல்லாத காரணத்தால்  வேம்பு … செழித்த மரமில்லை; சின்னச் செடிதான் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *