![Design Work Photos (1)](https://wh1026973.ispot.cc/wp-content/uploads/2015/07/Design-Work-Photos-1.jpg)
மெட்ராஸ் என்ற பெயரில் வடசென்னையை மையமாக வைத்து வந்த படம் அதன் இயக்குனர் பா. ரஞ்சித்தை ரஜினிவரை கொண்டு போய் இருக்கிறது.
அதன் பாதிப்போ என்னவோ வடசென்னையில் ஒரு முக்கிய இடமான வியாசர்பாடி என்ற பெயரிலேயே படம் ஒன்று வருகிறது
![20x24-01](https://wh1026973.ispot.cc/wp-content/uploads/2015/07/20x24-01.jpg)
இந்தப் படத்தில் ஹீரோவாக சுரேஷ் அறிமுகமாக, ஹீரோயினாக மீரா அறிமுகமாகிறார். மற்றொரு ஹீரோவாக தனுஷ் ராஜ்குமார் நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்குபவரும் இவரே இவர்களுடன் பிளாக் பாண்டி, யோகி பாபு ஆகியோர் காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள்.
மேலும், கிருஷ்ணகிரி ருக்கு, சின்னாளப்பட்டி சுஜி ஆகியோர் வில்லிகளாக நடிக்கிறார்கள். ஆயுஷி திவாரி என்ற மும்பை நடிகையும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்கள்.
இவர்கள் மட்டுமா ? ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் குங்பூ கலையை கற்றுக் கொடுத்தவரும் ஆயிரக்ககணக்கான இளைஞர்களுக்கு குங்பூ பயிற்சி கொடுத்தவருமான ராஜநாயகம் என்பவர் இந்தப் படத்தில் மிக முக்கிய வில்லனாக நடிக்கிறார் . .
கதை என்ன ?
“ஒரு ரவுடியால் பாதிக்கப்படும் நான்கு வாலிபர்கள், அந்த ரவுடியை எதிர்க்கொண்டு, அவரால் பாதிக்கபப்ட்ட ஒரு ஏரியாவை காப்பாற்றி, அந்ப் பகுதி சிறுவர்களுக்கு கல்வி பயில உதவி செய்கிறார்கள். இதனால் வரும் எதிர்ப்புகளும், அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும்தான் ‘வியாசர்பாடி’ படத்தின் கதை.
ஓர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க வட சென்னை பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.” என்கிறார்.