யானை @ விமர்சனம்

ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி சக்திவேல் தயாரிக்க, அருண் விஜய் , பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, போஸ்  வெங்கட் நடிப்பில் ஹரி இயக்கி இருக்கும் படம் . 

இறந்து போன முதல் மனைவிக்கு  மூன்று மகன்கள் ராமச்சந்திரன் ( சமுத்திரக்கனி), சிவச் சந்திரன் ( போஸ் வெங்கட்) ஜெயச்சந்திரன் ( சஞ்சீவ்), இரண்டாவது மனைவி ( ராதிகா) வழியே ஒரு மகன் ரவிச்சந்திரன் (  அருண் விஜய்) என்று  வாழும் பெரிய மனிதர் பி ஆர் வீரபாண்டியனுக்கும் (ராஜேஷ்) , 

அவரிடமே தொழில் கற்று பிறகு அவருக்கே இறால் தொழில் உள்ளிட்ட விசயங்களில் போட்டியாளரான சமுத்திரம் ( ஜெயபாலன்) அவரது இரண்டு மகன்கள் லிங்கம் மற்றும் பாண்டி (இரு வேடம் ராமச்ச்திர ராஜு) ஆகியோருக்கும் பெரும்பகை .பாண்டி,  செய்த தவறுக்காகக் கொல்லப்பட்டாலும் , கொலை நடக்க தானும் ஒரு காரணம் என்ற வகையில் ரவிக்கு ஒரு  சிறு அனுதாபம் உண்டு .

ஆனால் ஜெயிலில் இருந்து வரும் லிங்கம் வீரபாண்டியன் குடும்பத்தை ஒழிக்கப் பகை கொண்டு அலைகிறான் . 

இந்த சூழலில் ராமச்சந்திரன் மகள் ஒரு இஸ்லாமிய இளைஞனைக் காதலித்து அவனோடு ஓடிப் போக , முதல் மனைவியின் சாதி வெறி பிடித்த மகன்கள் காதல் ஜோடியை ஆணவக் கொலை செய்யத் தேட, ரவி அதைத் தடுக்க, ரவியையும் அவன் தாயையும் அவமானப்படுத்தி ஒதுக்குகின்றனர் மூத்த பிள்ளைகள்.. வீரபாண்டியன் மரணத்தில் கூட ரவிக்கும் அவன் அம்மாவுக்கும் கூட மரியாதை இல்லை . 

ஒரு நிலையில் தனது மகளான காதல் ஜோடி, ரவி , அவன் அம்மா ஆகியோரைக் கொல்ல , ராமச்சந்திரன் லிங்கத்துடனேயே கூட்டணி அமைக்க, நடந்தது என்ன என்பதே படம் . 

அதிரடியாக நடித்து அசத்துகிறார் அருண் விஜய். 

யோகி பாபு  நகைச்சுவை மட்டுமின்றி சீரியசான கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். மண்டபம், பாம்பன் பாலம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கச்சத் தீவு, கடல் பரப்பு என்று லொக்கேஷன்கள் சும்மா அள்ளுகிறது . கோபிநாத்தின் ஷாட்களும் ஒளிப்பதிவும் அருமை 

நீண்ட நெடிய ஒரே ஷாட்களில் எடுக்கப்பட்டு இருக்கும் சண்டைக் காட்சிகள் அதிரடி .

ஜி வி பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்க, பார்க்க இனிமை . 

வழக்கமான ஹரி படம் என்றாலும்கூட்டுக் குடும்பம்  ஒரு சகோதரனின் பிள்ளைகள் மீது மற்ற சகோதரர்கள் காட்டும் அன்பு அக்கறை . பதிலுக்குப் பிள்ளைகள் காட்டும் மரியாதை,  பயம், உறவுக்  கண்ணிகளின் பலம் ,

சாதி மதம் கடந்த காதலுக்கு ஆதரவு, பெண்ணியம் , மத நல்லிணக்கம் , சாதி  வெறிக்கு எதிரான கருத்து இவைகளை சொல்லும் வகையில் படம் பாராட்டுக்குரியது. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *