அரசு பிலிம்ஸ் சார்பில் திருநாவுக்கரசு வழங்க , கோபி தயாரிப்பில்
மிர்ச்சி சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடிக்க கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த நைனா சர்வார் நடிக்க,
இவர்களுடன் சென்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில்
ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் இயக்கியுள்ள படம் ‘அட்ரா மச்சான் விசிலு’..
ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாடல்கள் திரையிடப்பட்டன ‘கண்ணாமூச்சி கண்ணாமூச்சி கலங்கிடாத மாமா…’மற்றும் ‘சத்தியமா சொல்றேன் தாலி கட்டுறேன்…’
–என்ற இரண்டு பாடல்களும் சிறப்பு
நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது”.. சிவா பாசமான தம்பி.. என்னை எங்க பார்த்தாலும் கட்டிப்பிடிப்பார்.. முந்தி சிம்பு இப்படித்தான் கட்டிக் கட்டிப் பிடிச்சார்..
இப்ப சிவா தம்பி அதேமாதிரி பாசத்தை வெளிப்படுத்துறார். கடைசிவரை இந்த பாசம் நிலைக்கணும்னு விரும்பறேன்
தயாரிப்பாளர்கிட்ட நான், என்ன பிசினஸ் பண்றீங்கன்னு அதுக்கு அவரு கப்பல் விட்ருக்கேன்னு சொன்னார். படத்துல அவர் பணத்தை தண்ணீரா செலவு பண்ணியிருக்கிறதை பார்க்கும்போது,
அது உண்மையா இருக்கும்னுதான் தோணுது.
டைரக்டர் திரைவண்ணன், நம்மகிட்ட வேலை வாங்குறது தெரியாத மாதிரியே நடிக்க வச்சுருவார்..ரொம்ப திறமையானவர்.. அதனால வருங்காலத்துல அவருக்கு நானே ஒரு படம் கொடுக்கலாம்னு இருக்கேன்.
படத்தோட பாடலை கிட்டத்தட்ட பத்து தடவை போடச்சொலி தொடர்ந்து கேட்ருக்கேன்.. அந்த அளவுக்கு ரகுநந்தன் நல்லா மியூசிக் போட்ருக்கார்..
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துல திகட்ட திகட்ட லட்டு தின்னதுக்கு அப்புறமா இந்தப் படம் எனக்கு கிடைச்சது. நான் நடிச்ச படங்கள்ல இந்தப் படத்துலதான்,
நிறைய சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடந்திருக்கு. இந்தப் படம் வந்தால் எனக்கு ஒரு ‘கிரேடு’ கூடும்னு நினைக்கிறேன்.
இந்தப் படம் ஆரம்பிச்சப்ப பேப்பர்ல பெரிய சைஸ்ல விளம்பரம் கொடுத்தாங்க.. என் படத்தை பெரிசா போட்டு, தம்பி சிவா படத்தை சின்னதா போட்ருந்தாங்க..
இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல இருந்து கோபிக்கு லெட்டர் போயிருச்சு. அதாவது இந்தப்படத்தை நான்தான் தயாரிக்கிறேன்னு இன்கம்டாக்ஸ்ல நினைச்சுட்டாங்க.
அதுல இருந்து என் போட்டோ பேப்பர்ல வர்றது இல்ல..
இந்தப் படம்னு இல்ல, நான் எந்தப்படத்துல நடிச்சாலும் அதை நான்தான் தயாரிக்கிறேன்னு நினைச்சுக்கிறாங்க.. அது உண்மை இல்ல. ஆனா நான் ஜனவரிக்கு மேல படம் எடுக்கத்தான் போறேன்.
இந்தப் படம் முழுக்க காமெடி படமா வந்தருக்கு. என்ஜாய் பண்ணிப் பாருங்க” என்றார்
கதாநாயகி நைனா சர்வார் கொஞ்சு தமிழில் “மதுரைப் பொண்ணாக நடித்தது சந்தோசம்” என்றார்
சிவா தனது பேச்சில் “பவர் ஸ்டாரோட பெர்ஃபார்மன்ஸ் பத்தி சொல்லணும். பொதுவா ஒரு காட்சியில் நடிக்கும்போது எப்படியெல்லாம் ரியாக்சன் கொடுக்கலாம்னு எல்லாருக்கும் தோணும் இல்லியா?
ஆனால் இப்படியெல்லாம் கூட ரியாக்சன் கொடுக்க முடியுமாங்கிறதை பவர்ஸ்டாரை பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அந்த அளவுக்கு புதுசு புதுசா ரியாக்சன் கொடுப்பாரு.
யாரவது ஒருத்தர் ஒரு காட்சில சோகமா ஃபீல் பண்ணி பேசும்போது நாம ஒரு ரியாக்சன் கொடுத்தா, அவரு மட்டும் சாட்டைல அடிச்ச மாதிரியோ மிளகாயை கடிச்ச மாதிரியோ ,
ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்க… சான்சே இல்லை.. அவருக்குன்னு தனியா ஒரு பாடி லாங்குவேஜ் வச்சிருக்கிறாரு.
படத்துல என்னோட பேரு சிம்மக்கல் சேகர்.. பவர்ஸ்டாரோட தீவிரமான ரசிகனா நடிக்கிறேன். படத்துல பவர் ஸ்டாருக்கு 22வது பிறந்தநாள் கொண்டாடுற மாதிரி ஒரு பாடல் இருக்கு..
ஆனா இப்ப நேர்ல பார்க்கிறப்ப ஒரு வயசு குறைஞ்ச மாதிரி தெரியுறாரு..
காதல் தேசம் டைம்ல வந்திருந்தாருன்னா அப்பாஸுக்கு செம டப் கொடுத்திருப்பாரு. அந்தப் படத்தை இப்ப ரீமேக் பண்ணினா பவர் ஸ்டார் அப்பாஸாகவும் நான் வினீத் கேரக்டர்லயும் நடிக்க ரெடியா இருக்கேன்…
இந்தப்படத்துல வெறும் காமெடி மட்டும் இல்ல.. ஒரு நடிகரோட ரசிகர்கள் எந்த அளவுக்கு லிமிட்டோட இருக்கணும்; சொந்த வாழ்க்கையையும் பாத்துக்கனும்னு ஒரு மெசேஜ் சொல்லிருக்கோம்.
கடைசியா எனக்கு ஒரு டவுட் நைனா சர்வாரை அவங்க நைனா எப்படி கூப்பிடுவாருன்னு தேரியல “என்று சிரிக்க வைத்து, முடித்தார்
இயக்குனர் திரைவண்ணன் பேசும்போது,
“கச்சேரி ஆரம்பம் படத்துக்குப் பிறகு ஐந்து வருடம் கழித்து இந்தப் படத்தை இயக்கிருக்கேன். இந்தப் படத்துக்கு கதாநாயகி தேடிப் பார்த்து,
இங்கே எதுவும் அமையாம, கடைசியா பெங்களூர்ல கிடைச்ச தேவதைதான் இந்த நைனா சர்வார்..
மதுரை பொண்ணு கேரக்டரை சரியா புரிஞ்சு நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு தமிழ் தெரியாது. எனக்கு ஆங்கிலம் தெரியாது..
ஷூட்டிங் ஸ்பாட்ல எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மொழிபெயர்ப்பு பண்றதுல சிவா தான் ஒரு உதவி இயக்குனர் மாதிரி செயல்பட்டார்.
இந்தப் படத்துல ராஜ்கபூர், செல்வபாரதி, ஜெகன், டி.பி.கஜேந்திரன்ன்னு நான் உள்பட மொத்தம் ஆறேழு இயக்குனர்களை நடிக்க வச்சிருக்கேன்.
குறிப்பா சொல்லணும்னா நான் யார்கிட்ட எல்லாம் வாய்ப்பு கேட்டு போனேனோ, யாருகிட்ட வேலை பார்த்தேனோ அந்த டைரக்டர்களை எல்லாம் இதுல நடிக்க வச்சுருக்கேன்..
இந்தப் படத்துல நானும் பாட்டு எழுதியிருக்கேன்.. அதுக்கு காரணம் இசையமைப்பாளர் ரகுநந்தன்தான்.
படத்துல ஒரு டூயட் தர்றேன்னு பொய் சொல்லிதான் பவர் ஸ்டாரை புக் பண்ணினேன் . இதோ எடுக்கலாம்னு சொல்லி சொல்லி அவரை ஏமாற்றியே படத்தை முடிச்சுட்டேன் .
ஆடியோ லாஞ்ச் வரை வந்த அப்புறமும் இன்னும் அந்த பாட்டை எடுப்பேன்னு அவர் நம்பறார் . அவ்வளவு நல்லவர் அவரு.
கச்சேரி ஆரம்பம்னு சொன்னாலே அடுத்து அட்ரா மச்சான் விசிலுன்னுதான் சொல்வாங்க… ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கச்சேரிய ஆரம்பிச்சு வச்ச எனக்கு,
இப்பத்தான் அட்ரா மச்சான் விசிலுன்னு சொல்ல நேரம் வந்திருக்கு. “என்றார்
இறுதியாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இயக்குனர் திரைவண்ணன், “எப்படி ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு போலீஸ் இவங்கள்ல ஒருத்தரை வில்லனா காட்டுறோமோ,
அதே போலத்தான் ஒரு நடிகனை வில்லனா காட்டியிருக்கோம்.. அவ்வளவுதான்..
மற்றபடி இது தனிப்பட்ட எந்த நடிகரையும் குறி வைத்து சொல்லப்படவில்லை. ரஜினி சாரை கிண்டல் பண்ற மாதிரி எந்த காட்சியும் இல்ல.. நாங்க அவ்வளவு பெரிய ஆளுமில்ல.
அவரு இமயமலை.. நாங்க வெறும் பரங்கிமலை” என்றார்