Thodari Audio & Trailer Launch Stills (37)
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்க,
தனுஷ் , கீர்த்தி சுரேஷ் , தம்பி ராமையா நடிப்பில்
பிரபு சாலமன் இயக்கி இருக்கும் தொடரி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்
பல சுவாரஸ்யமான விஷயங்கள் .
முதலில் ரயிலுக்கு புகை வண்டி என்று புகை படிந்த தமிழ் வார்த்தைக்குப் பதிலாக,
தொடரி என்ற சரியான சொல்லை பயன்படுத்தி இருக்கும் பிரபு சாலமனுக்கு வாழ்த்துகள் .
படத்தின் பாடல்களும் முன்னோட்டமும் நிகழ்வில் திரையிடப்பட்டன .
தொடரியில் வரும் தீவிரவாதிகள் , அவர்களை பிடிக்க வரும் தீவிரவாத தடுப்புப் படை ,
அந்த தொடரியில் உள்ள உணவகத்தில் வேலை செய்யும் பூச்சியப்பன் என்ற இளைஞன் ,
தமிழும் மலையாளமும் தெரிந்த ஓர் இளம்பெண் இவர்களை சுற்றி நிகழும் கதை என்பது,
முன்னோட்டத்தில் தெரிந்தது .
தொடரியின் உணவாக மேலாளராக தம்பி ராமையா .
பயணச்சீட்டு பரிசோதகராக இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்
இமான் இசையில் அமைந்த பாடல்கள் பிரபு சாலமனுக்கான சிறப்பு இனிமையோடு இருந்தன .
வெற்றியின் ஒளிப்பதிவில் காட்சிப் பதிவுகள் அருமை
(இன்னொரு சுகுமாரை உருவாக்குகிறாரா பிரபு சாலமன் ?)
“எவ்வளவு வேலை இருந்தாலும் தனி ஆளாக செய்வார் பிரபு சாலமன் .
அந்த வகையில் அவர் பிரபு solo man “என்றார் படவா கோபி
தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தார் தம்பி ராமையா .
“நடிப்பில் கமல் ஹீரோயிசத்தில் ரஜினி இரண்டும் சேர்ந்து அமைந்த கலவை தனுஷ் ” என்று,
பாராட்டினார்கள் , ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர்
“நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு எல்லா கதாபாத்திரங்களையும் ஏற்று ,
சிறப்பாக நடிக்கும் திறமை கொண்டவர் தனுஷ் ” என்றார் கலைப்புலி எஸ் தாணு (ம்ம்ம்ம்.. புரியுது .. புரியுது )
“காட்சிகளைப் பார்க்கும்போதே இது வெற்றி பெறும் என்பது புரிகிறது ” என்றார் வசந்த பாலன்
“தனுஷுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பது அனைவருக்கும் தெரிஞ்ச விஷயம் .
ஆனா அவங்க தேதி கேட்டபோது வெற்றி மாறன் படத்தை முடிச்சுட்டுதான் வருவேன் .
வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டார் .
அந்த அளவுக்கு அவர் தமிழ் சினிமாவுக்கு முக்கியத்துவம் தருகிறார் ” என்றார் பார்த்திபன்
இயக்குனர் செல்வராகவன் பேசும்போது ” பிரபு சாலமன் மட்டும் ,
எப்போ கால்ஷீட் கேட்டு வந்தாலும் யோசிக்காம கொடுத்துடுன்னு தனுஷ் கிட்ட சொல்லி இருந்தேன் ” என்றார்
பிரபு சாலமன் தன் பேச்சில் ” தனுஷ் சாரை நான் பார்த்த உடன்,
எப்போ தேதி வேணும்னு மட்டும் சொல்லுங்க’ என்றார் .
கும்கியில் சில யானைகளை கட்டி மேய்ச்சோம்.
ஆனா ரயிலை வச்சு படம் எடுப்பது ஆயிரம் யானைகளை கட்டி மேய்க்கிற மாதிரி .
ஆக, எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பால்தான் இந்த படம் சாத்தியப்பட்டது .
அதுவும் தனுஷ் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது ஒரு இடததில் ,
சரியாக தங்க வசதி இல்லாத சூழ்நிலையில் நான்கு நாட்கள் கேரவானிலேயே தங்கி,
நடித்துக் கொடுத்தார் . “என்றார் .
தனுஷ் தன் பேச்சில் ” இங்கு என்னை பலர் பலவாறாக புகழ்ந்தார்கள்.
அதில் உண்மையும் உண்டு . அதீத அன்பு காரணமான சில வார்த்தைகளும் உண்டு .
எனவே அனைவருக்கும் நன்றி
எனக்கு நடந்த ஒரு விபத்துக்குப் பிறகு எனக்கு உயரத்தில் நிற்பது என்றால் பயம் .
இந்தப் படத்தில் ரயில் மீது நிற்கிற மாதிரியான பல காட்சிகள் .
எனக்கு பயமாகத்தான் இருந்தது .
ஆனால் எனக்கு முன்பாக பிரபு சாலமன் ரயிலில் ஏறி நின்று,
என்ன செய்யவேண்டுமோ அதை செய்து காட்டுவார் .
அப்படி எனக்கு தைரியம் கொடுத்ததோடு மிகுந்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்தே நடிக்க வைத்தார் .
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் என்னை விட சிறப்பாக நடித்துள்ளார் . அவருக்கு விருது நிச்சயம் ” என்றார்