‘அந்தமான்’ பாடல் வெளியீட்டு விழா

andha 2

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மற்றும் அவரது மனைவி சுதா இருவரும் தயாரிக்க, 

ரிச்சர்டு – மனோ சித்ரா  இணையராக நடிக்க, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், மனோபாலா, சாம்ஸ் வையாபுரி, முத்துக் காளை, தியாகு, நெல்லை சிவா ஆகியோர் உடன் நடிக்க , 
andha 1
டி. ஆர் .எஸ் .ரமணி அய்யர் என்பவரின் கதை வசனம் பாடல்களில் எஸ் பி எல் செல்வதாசன்  இசையில் 
எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் திரைக்கதை அமைத்து இயக்கும் படம் அந்தமான்,
தயாரிப்பளர் கண்ணதாசன் வில்லனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில்,
 andha 8செல்வதாசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் 
ரமணி அய்யர் எழுத்தாளர் பால குமாரனை மானசீக  குருவாக ஏற்றவர். முப்பது  வருடங்களாக பாலகுமாரனின் வாசகர் . .
andha 4
அந்தமான் படத்தில் தான் எழுதிய  பாடல்களை பாலகுமாரனுக்குப் போட்டுக் காட்டி அவரது பாராட்டுக்களையும் ஆசிகளையும் பெற்றவர் 
கூல் ஜெயந்த்  நடனம் அமைக்க , ஆர் எஸ் .செல்வா  ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம் சென்னையிலும்   அந்தமானில் இதுவரை எந்தப் படத்தில் இடம்பெறாத பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.  
andha 6
கப்பலில் ரிச்சர்டும் கண்ணதாசனும் மோதும் சண்டைக் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது .
படத்தில் வரும் ஆறு பாடல்களில் கானா பாலா பாடியுள்ள “காலை மாலை தெரியாமல் குடிக்கிற மனுஷா ” என்ற பாடல் குடிப்பழக்கததைக் கண்டிக்கும் பாடலாக வந்துள்ளது .
இதே போல  அப்பா  அம்மா செண்டிமெண்ட் பாடல், காதல் பாடல் என்று வெரைட்டியான பாடல்கள் . 
andha 8
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கப் பிரதிநிதிகளான அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பி எல் தேனப்பன், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும்  இயக்குனர் பவித்ரன் ஆகியோர்  கலந்து கொண்டனர் . 
அவர்கள் பேசும்போது ” சிறிய படங்களை தயாரிப்பவர்கள் அனுபவம் உள்ள தயாரிப்பாளர்களை அணுகி அவர்களது ஆலோசனைகளைப் பெற்றால் தயாரிப்பு செலவைக் குறைக்கலாம் ” என்றார்கள்.   
andha 5
படத்தில் நடித்துள்ள மனோபாலா  வையாபுரி  , சாம்ஸ் ஆகியோர் பேசும்போது ” அந்தமானில் தயாரிப்புத் தரப்பு எங்களை நன்கு கவனித்துக் கொண்டது .
சம்பளத்தை பைசா பாக்கி வைக்காமல் அன்றன்றே கொடுப்பார்கள் . கண்ணதாசன் மிகச்சிறந்த மனிதர் ” என்றார்கள் . 
andha 3
நடன இயக்குனர் கூல் ஜெயந்த் பேசும்போது “இந்தப் படத்துக்குப் பிறகு ரிச்சர்டு மிகச் சிறந்த வெற்றிகரமான கதாநாயகனாக உயருவார் ” என்றார் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *