இறைவன் @ விமர்சனம்

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் தயாரிக்க, ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், விஜய லக்ஷ்மி, சார்லி,  அழகம்பெருமாள் நடிப்பில் அஹமது இயக்கி, வெளிவந்திருக்கும் படம். 

போலீஸ் அதிகாரி நண்பர்கள் இருவரில்,  மனைவி  (விஜயலட்சுமி) குழந்தை என்று இருக்கும் ஒருவனின் ( நரேன்) தங்கை ( நயன்தாரா), தனது  அண்ணனின் நண்பனை  (ஜெயம்ரவி) விரும்புகிறாள். எப்போது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்துள்ள நிலையில் தனக்கு திருமணமே வேண்டாம் என்பது அவன் எண்ணம். 
 
மாநகரில் ஒரு சைக்கோ  (ராகுல்  ) அடுத்தடுத்து இளம் பெண்களைக் கடத்தி சித்திரவதை செய்து  கொலைகள் செய்கிறான். அவனைப் பிடிக்கும் முயற்சியில்  திருமணம் ஆன நண்பன் சைக்கோவால் கொல்லப்படுகிறான் .
 
அது மட்டுமின்றி சைக்கோவாக இதுவரை அறியப்பட்ட நபர் மட்டுமே எல்லா கொலைகளையும் செய்யவில்லை. காப்பி கேட் பாணியில் அவன் பாணியில் கொலை செய்யும் இன்னொரு சைக்கோவும் இருப்பது தெரிய வர , நடந்தது என்ன என்பதே படம். 
 
ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்தின் இருள் ஒளிப் பயன்பாடு சிறப்பாக அமைந்த ஒளிப்பதிவு ஒரு சைக்கோ கில்லர் கதைக்கு அவ்வளவு அருமையாக பொருந்தி இருக்கிறது. . ஜாக்கியின் கலை இயக்கமும் அப்படியே அட்டகாசம் . யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மட்டும் பரவாயில்லை ரகம். 
 
ஜெயம் ரவி, நயன்தாரா , சார்லி, விஜயலட்சுமி பண்பட்ட நடிப்பைத் தந்துள்ளனர் .  முதல் சைக்கோ ராகுல் போஸ் மிரட்டுகிறார் . இரண்டாவது சைக்கோ வினோத் கிஷன் ஓவர் ஆக்டிங் . 
 
இயக்குனர் அஹமது மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார் . எனினும் இளம்பெண்கள் கொல்லப்படுவதையும் சித்திரவதை செய்யப்படுவதையும் கொடூரமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் . .  மிக பலவீனமான திரைக்கதை. குடும்பம் செண்டிமெண்ட் காதல்  என்று சில காட்சிகள்  தன் பாட்டுக்கு வருகின்றன .
 
இரண்டாவது சைக்கோ கதாபாத்திரத்தை இயக்குனர் இவ்வளவு  கொண்டாடி இருக்கிறார். அதே மாடல்  போட்டோகிராபர், மாடல் பெண் கதாபாத்திரங்கள் வக்கிரத்தின் உச்சம் . 
 
அப்பாவிகள் நல்லவர்கள் இவ்வளவு கொடூரங்களுக்கு ஆளாவதை விலாவாரியாகக் காட்டியவர்கள் அதே போல குற்றவாளிகளை நாயகன் கிழித்துப் போடுவதையும் காட்டினாலாவது குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் ஏற்படும் . அதுவும் இல்லை .
 
இரண்டு சைக்கொக்களையும் கம்பீரமாகவும் ஒரு செகண்டிலும் முடித்து விட்டு துண்டை உதறித்  தோளில் போட்டுக் கொண்டு நடக்கிறார் இயக்குனர் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *