வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, வருண், ராஹே, டிடி , கிருஷ்ணா, நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருக்கும் படம்
வெளிநாடு வாழ் பெண் ஒருத்திக்கும் ( ராஹே) பணத்துக்காக கொலைகள் செய்யும் ஹைடெக் இளைஞன் ஒருவனுக்கும் ( வருண்) கண்டதும் வரும் காதல், படுக்கை வரை போகிறது .
ஒரு நிலையில் அவன் தனது கொலைத் தொழில் பற்றிச் சொல்ல , அவள் அவனைப் பிரிகிறாள்.
அவனுக்கு பணிகள் தரும் முகமையின் ஒருங்கிணைப்பாளர் பெண்மணி (டிடி ) அந்தக் காதலை மறந்து விடு என்கிறாள் .
உலகளாவிய மாபியா கும்பல் தலைவன் ஒருவனுக்கு எதிராக அந்தக் காதலி லண்டன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல இருக்கும் நிலையில் அவளைக் கொல்ல, மாஃபியா தலைவனின் ஆட்கள் தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள்
இந்த நிலையில் அந்த ஒருங்கிணைப்பாளர் பெண்மணியிடம், அவளை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் பணி ஒப்பந்தம் வருகிறது
அந்தப் பெண் அதை காதலனுக்கே கொடுக்கிறாள் . காதலியும் வேறு வழி இன்றி ஏற்கிறாள் . அவனால் அவளைக் காப்பாற்ற முடிந்ததா? அந்தக் காதலியின் புரிதல் என்ன ஆனது என்பதுதான் படம்.
மீண்டும் ஓர் அழகான தமிழ்ப் பெயரோடு கூடிய படம். பாராட்டுகள் கவுதம் வாசுதேவ் .
கொலைத் தொழில் காதலனாக வருண், இதுவரை நடித்த எல்லா படங்களையும் விட நன்றாக நடித்து இருக்கிறார் . குரல் நடிப்பிலும் ஒப்பீட்டு அளவில் முன்னேற்றம் . சண்டைக் காட்சிகளில் உழைப்பு தெரிகிறது . எனவே ஹீரோயிசம் மிளிர்கிறது.
நவ நாகரீகப் பெண்ணாக ராஹே உடல் மொழிகளில் கவர்கிறார். அவருக்கான பின்னணிக் குரலும் எலைட்.
ஆங்கிலப் படங்களில் பார்க்க முடிந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் மேட்டிமையான முக பாவங்களோடு அழகாக நடித்து இருக்கிறார் டிடி . குட்.
அதே போல கொஞ்ச நேரமே வந்தாலும் கிருஷ்ணா நன்றாக நடித்து இருக்கிறார் .
சண்டைக் காட்சிகள் சிறப்பு. சண்டைக் காட்சிகளில் மட்டுமல்ல எல்லா காட்சிகளிலும் தானும் உருண்டு புரண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர்.
கார்த்திக்கின் இசையும் சிறப்பு.
ஒரு இளைஞன் தனக்குப் பிடித்த இளம்பெண்ணை முதன் முதலில் சந்தித்துப் பேசும்போது, அவன் பார்வை அவள் மேல் எங்கே எப்படி எல்லாம் நகரும்? அந்தப் பாய்ன்ட் ஆஃப் வியூவில் நாயகி முகத்தில் கேமரா நகரும் ஷாட்களில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிகிறார் .
வழக்கம் போல வண்ணமயம், இருள் ஒளிப் பயன்பாடு , என்று அவருக்கே உரிய மேக்கிங் சிறக்கிறது . எல்லோரிடமும் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார்
அடிப்படையில் ஒரு திரையரங்கு வணிகப் படத்துக்கான கதைதான் இது . ஆனால் இடைவேளைக்குப் பிறகு என்னென்னமோ நினைத்து எழுதி எடுத்து சுத்தி விட்டு படம் பார்ப்பவகளையும் சுத்தலில் விடுகிறார்
கிளைமாக்ஸ் எல்லாம் குரங்கு கை ஃபிலிம் மாலை போல, சின்னா பின்னமாகிறது .
அது என்னவோ தெரியவில்லை, இப்போது எல்லாம் பல தமிழ் டைரக்டர்களுக்கு இரண்டாம் பகுதியை எடுப்பதில் அவ்வளவு அநியாயத் தடுமாற்றம்
மலையாளப் பட இயக்குனர்கள் எல்லாம் எப்படி எடுக்கிறாங்க. பாத்துக் கத்துக்குங்க மேனன் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462