வரும் 29 ஆம் தேதி படம் வெளிவர இருக்கும் நிலையில் கருப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! .
“படத்தின் இயக்குனர் பன்னீர் செல்வம் , நாங்கள் தயாரித்த ரன் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் .
அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இந்தப் படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சி.
படத்தின் ஹீரோவாக அவர் ஆளுமையோடு நடித்திருப்பதுதான் படத்தின் பிளஸ் ” என்றார் தயாரிப்பாளர் ரத்தினம்
“இப்படி ஒரு படத்தில் பெண்ணுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் நடித்ததில் மகிழ்ச்சி ” என்றார் நாயகி தன்யா .
“குடும்ப உறவின் அருமையை கணவன் மனைவி பாசத்தை சொல்லும் படம் இது . விஜய் சேதுபதி அந்த கேரக்டரை தன் நடிப்பால் உயர்த்தி இருக்கிறார் .
பெரிய கதாநாயகி நடித்தால் கூட இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது என்கிற அளவுக்கு தன்யா நன்றாக நடித்துள்ளார் .” என்றார் இயக்குனர் பன்னீர் செல்வம் .
விஜய் சேதுபதி பேசும்போது ” கணவன் மனைவி உறவின் பெருமை பேசும் படம் இது . படம் பார்க்கும் தம்பதிகளுக்குள் பாசம் அதிகரிக்கும் .
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தின் மேல் ஆசை வரும்” என்றார் .
”நீட் போன்ற விசயங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் நிலையில் தேசிய விருது கொடுத்தால் வாங்கிக் கொள்வீர்களா ?” என்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது
” நிச்சயமாக வாங்க மாட்டேன் . எனக்கு என் மக்கள்தான் முக்கியம் . மத்திய அரசு தமிழகத்தை ஒடுக்குகிறது . அதில் சந்தேகமே இல்லை
ஆனால் இதற்கு உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது செய்து பிரச்னையில் சிக்கிக் கொள்வதை விட அறிவுப் பூர்வமாக யோசித்து செயல்பட வேண்டும் ” என்றார்
சூப்பர் !