வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் பெண் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்க,
புதுமுகங்கள் விஷ்வா, நீரஜா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் கிஷோர், மாஸ்டர் ராஜநாயகம், கஞ்சா கருப்பு, ’கோலி சோடா’ பாண்டி, சுப்புராஜ், ’பசங்க’ சிவகுமார்,
செந்தி, சிந்து, பருத்திவீரன் சுஜாதா, புதுமுகம் சங்கவி ஆகியோர் நடிக்க, தோழர் அரங்கன் இயக்கும் படம் ‘கதிர்.
ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, 
மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஆர்.எம்.நந்தகுமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
இப்படம் ஓர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
கும்பகோணத்தில் பஸ் ஸ்டாண்ட் குணா என்பவர், அனைவரும் தெரிந்தவராக இருந்த ஒருவர். நிஜத்தில் வாழ்ந்த அந்த கும்பகோணம் குணாவாக,
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். இவரை எதிர்த்து மோதும் சங்கிலி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில், 
8 முறை குங்ஃபு-வில் பிளாக் பெல்ட் வாங்கிய மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார்.
கிஷோர் – மாஸ்டர் ராஜநாயகம் மோதும் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
சேரன் பாண்டியன், சிந்துநதி பூ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த செளந்தர்யன் இசையமைக்கும் 50 வது படமாக,
உருவாகும் இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு முன்னணி ஹீரோயின் ஒருவர் நடனம் ஆட இருக்கிறார்.
சமூக அக்கறையோடு வாழும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் காதல் கடந்து போனால், என்ன நடக்கும் என்பதை எதார்த்தத்தோடும், தமிழ் கலாச்சாரப் பண்பாட்டோடும்,
பெண்கள் குடும்பத்தோடு பார்க்கக கூடிய அளவுக்கு கண்ணியமான காமெடியோடும் ஜனரஞ்சகமான படமாக,
கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.