Maple Leafs Productions தயாரிப்பில், எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில் உருவாகி இருக்கும் படம் “கட்டில்”.
கே எஸ் ரவிக்குமார் பேசியபோது, “வைரமுத்து சாருக்குப் பிறகு யார் பேசினாலும் எடுபடாது. வைரமுத்து என் 25 படங்களுக்குப் பாட்டு எழுதியிருப்பார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது மகிழ்ச்சி. தேவா என் படங்களுக்கு இசையமைக்கும்போது கீபோர்டில் எப்போதும் ஶ்ரீகாந்த் தேவா தான் இருப்பார். இப்போது அவர் புகழ் பெறுவது மகிழ்ச்சி. இப்படத்தின் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் நன்றி.”என்றார்.
பாடலாசிரியர் மதன்கார்க்கி , ” இந்தப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் மெலடி இசை மிகவும் பிடித்திருந்தது. அப்பா வரிகளில் அவர் பாடல் அருமையாக வந்துள்ளது. கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள் என்ற அர்த்தத்தில் வரும் பாடல் அருமை. அப்பா எப்போதும் பாடல் இப்படி எழுத வேண்டும் என்று சொன்னதே இல்லை கற்றுக் கொடுத்ததே இல்லை. ஆனால் அவர் எழுதிய பாடல்களிலிருந்து நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். அவர் பாடல்கள் மிகப்பெரிய அறிவைத் தந்துள்ளது. ஒவ்வொரு பாடல்களிலும் இருந்து நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். வயவா என்றால் கணவன் என்று பொருள், மனைவியை இழந்த கணவனுக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என ஒரு மனைவி சொல்வதாக வரும் பாடல் என்பதால் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினோம்.”என்றார்.
நடிகை சிருஷ்டி டாங்கே பேசியபோது, “PRO சதீஷ மூலம் தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கவேண்டும் என்றார்கள் முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. பப்ளி கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் போது இந்தக்கேரக்டரில் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். இந்தக் கதாபாத்திரத்தின் கனம் புரிந்தது. தனலட்சுமி கேரக்டர் மிக வலுவானதாக இருந்தது. எனக்கு மிகப் புதிய அனுபவமாக இருந்தது. லெனின் சார் உடன் பணிபுரிந்த அனுபவம் இன்னும் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது. கேமரா மேன் ரவி சார் என்னை அழகாகக் காட்டியுள்ளார். ஶ்ரீகாந்த தேவா தேசிய விருது வென்றிருக்கிறார் வாழ்த்துக்கள். வைரமுத்து சார், கார்கி சார் அருமையான பாடல்கள் தந்ததற்கு நன்றி. இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் “என்றார்.
இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியபோது, “வைரமுத்து ஐயா வரிகளில் மூன்று பாடல்கள், செய்தோம் மிகப்பெரிய கொடுப்பினை. கார்க்கி ஒரு பாடல் எழுதியுள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம் படத்திற்கு ஆதரவு தாருங்கள் “என்றார்
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் ” என் முதல் படத்தில் வைரமுத்து அவர்களுடன் வேலை பார்த்தேன் மீண்டும் இந்தப்படத்தில் வேலைப்பார்த்தது மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.”என்றார்.
தஞ்சை இரா செழியன் , “வைரமுத்து ஐயா 2 மிகச்சிறந்த பாடல்கள் தந்துள்ளார். இந்தப்படமும், பாடலும் தேசிய விருது பெறும். படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.”என்றார்.
செம்மலர் அன்னம், “. இந்தப்படம் எனக்கு நிறைய முக்கிய ஆளுமைகளை அறிமுகப்படுத்தியது. படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.”என்றார்.
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து,
மதன்கார்க்கி
ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கர்
இசை – ஶ்ரீகாந்த்தேவா
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)