நீதா பின்டோ, பிரியா வேணு தயாரிப்பில் உன்னி முகுந்தன், தேவானந்தா, ஸ்ரீபத், சைஜூ குரூப் நடிப்பில், அபிலாஷ் பிள்ளை எழுத்தில் விஷ்ணு சசி சங்கரின் எடிட்டின் மற்றும் இயக்கத்தில் வந்து , தமிழில் பிரபாகரின் வசனத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கும் படம் .
அவமானப்பட்டதால் சிறுமியின் அப்பன் செத்துப் போக, சிறுமி தன் பள்ளித் தோழன் ஒருவனோடு பெருவழிப் பாதையில் சபரிமலை செல்கிறாளாம். அவளை கடத்த சிறுமி விற்பனை செய்பவன் முயல, அவள் கனவில் ஐயப்பன் உருவில் கண்ட நபர் (உன்னி முகுந்தன்) அவளை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படம் . அவர் உண்மையில் ஒரு போலீஸ்காரர் .
தமிழ் நாட்டுக்குள் ஒரு மலையாளி திராவிட , தேசிய , கம்யூனிச முகமூடிகள் மூலம் வந்து கந்து வட்டி கொடுத்து தமிழ்நாட்டில் நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒரு தமிழனை அடித்துக் கொல்ல முடியும். மேலே சொன்ன மூன்று கூட்டமும் அந்தக் கொலைகாரனைக் காப்பாற்ற முயலும் . ஆனால் கேரளாவில் ஒரு தமிழன் மலையாளியிடம் தான் நியாயமாக கொடுத்த காசை திருப்பிக் கேட்டால் கூட அந்த தமிழனைக் கொன்று விடுவார்கள். யாரும் நியாய அநியாயம் பார்க்க மாட்டார்கள் .
மலையாளிகளைப் பொறுத்தவரை சபரிமலை ஒரு சாதாரண கோவில் . ரெண்டு நாள் முன்பு வரை தண்ணி தம் அடித்து , தம் கட்டி மற்ற வேலைகளையும் செய்து விட்டு, காலையில் குளித்து விட்டு மாலையைப் போட்டுக் கொண்டு நேரே சபரிமலைக்கு போய் பதினெட்டாம் படி ஏறாமல் கேரள போலீஸ் இன பாசத்தோடு உதவ, பின் வழியாகப் போய் ஐயப்பனை இலகுவாக நிதானமாக தரிசித்து விட்டு அடுத்த நாள் காலையில் வேலையைப் பார்க்கப் போய்விடுவது மலையாளிகளின் பழக்கம் .
நாற்பத்தி எட்டு நாள் விரதம் இருந்து, கடன் வாங்கி ஐயப்ப பூஜை போட்டு அன்னதானம் செய்து , கஷ்டப்பட்டு பயணம் செய்து கேரள போலீஸ் மற்றும் அதிகாரிகளின் எரிச்சல் எதிர்ப்பில் நொந்து நைந்து, எருமேலியில் பேட்டை துள்ளி, வாவர் எனப்படும் பாபரை வணங்கி , காளைகட்டி கோவில் வணங்கி, கருங்குழி மாரியம்மனை கும்பிட்டு, அழுதா நதியில் முங்கி கல்லெடுத்துச் சென்று அழுதா மேட்டில் போட்டு இறங்கி பின்னர் கரிமலை ஏறி பகவதியை வணங்கி , வழுக்குப் பாறைகள் நிறைந்த கஷ்டமான கரிமலை இறக்கத்தில் இறங்கி, வலியானை வட்டத்தில் ‘ சாமி .. கஞ்சா வேணுமோ ?” என்று ரகசியமாக குரல் கொடுக்கும் மலையாளிகளுக்கு மயங்காமல் சிறியானை வட்டம் கடந்து , பம்பா நதியில் முங்கி, கன்னி மூல கணபதியை வணங்கி , நீலிமலை ஏறி , புலிக்கு மாவு உருண்டை வீசி , வெடி வழிபாடு செய்து, சரங்குத்தியில் சரம் குத்தி , சபரி பீடத்தை வணங்கி , சந்நிதானத்தை அடைந்து பாலத்தில் ஏறி இறங்கும்போது , மலையாள போலீஸ் சட்டென்று இனத் துவேஷத்தோடு ஐயப்பனை பார்க்க விடாமல் இழுத்துத் தள்ளும் அவலத்துக்கு ஆளாகக் கூடாது என்று அதற்கும் ஐயப்பனையே வணங்கி, அதையும் மீறி போலீசிடம் சிக்கி அவர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு வெறியோடு இழுத்து வெளியே தள்ளும்போது, கால்கள் உடைந்தாலும் பரவாயில்லை இருமுடி கீழே விழுந்து விடக் கூடாது என்று போராடி , இருமுடி ஈரமாகும் வரை அழுது , போலீஸ் காலில் விழுந்து கதறி , மீண்டும் பாலத்தில் ஏறி நெரிசலில் சிக்கி, ஒரு வழியாக கருவறையை அடைந்து, ‘மலையாளி அல்ல’ என்று தெரியும் நிலையில் நம்பூதிரிகள் தூக்கிப் போடும் சந்தணத்தை சிந்தாமல் சிதறாமல் கேட்ச் பிடித்து , நொடி நேர மட்டும் ஐயப்பனை பார்த்து விட்டு, கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த காசை கேரளாவுக்கு கப்பம் கட்டிவிட்டு சன்னிதானத்திலோ, பம்பாவிலோ, புலி மேடு எனப்படும் புல் மேட்டிலோ நின்று ஜோதி பார்த்து விட்டு, அடித்துப் பிடித்து நெரிசலில் சிக்கி, கேரள வாகனங்கள் எல்லாம் போகும் வரை திட்டமிட்டு காத்திருக்க வைக்கும் கேரள போலீசின் ஓரவஞ்சனையில் உடைந்து நொறுங்கி, பஸ்ஸில் வேனில் லாரியில் நின்றபடி தூங்கியும் தூங்காமலும் உண்ணும் உண்ணாமலும் வீடு வந்து சேர்வதற்குள் ஒரு வழி ஆகி , அடித்துப் போட்டது போல அடுத்த மூன்று நாள் தூங்கி எழுந்து அடுத்த நாள் சகஜ நிலைக்கு வருவதுதான் தமிழனின் ஐயப்பன் வழிபாடு .
ஆனால் இந்தப் படத்தில் ஒரு மலையாளி , அதுவும் பெண் , அதிலும் சிறுமி யார் துணையும் இன்றி பெருவழிப்பாதை போகிறாளாம்.. மாலை போட்ட ஒரு தமிழன் அந்த சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு மதுரையில் இருக்கும் முதலாளிக்கு விற்கப் பார்க்கிறானாம்.