ஹீரோயினை பார்த்து பாட்டெழுதிய கில்லாடி

ishithaa
nee naan nizhal
பாடல் வெளியீடு

முத்தாரம்மன் பிலிம்ஸ் சார்பில் டாக்டர் பி ஜி எம் சிவகுமார் வழங்க பிந்து ஜான் வர்கீஸ் தயாரிக்க, கே.எஸ்.அதியமானிடம் உதவியாளராக இருந்த ஜான் ராபின்சன் இயக்க, அர்ஜுன் லால் இஷிதா இணையராக நடிக்க,  மலையாளம் மற்றும் தமிழ் இரு மொழிப்படமாக உருவாகும் படத்தின் தமிழ் வடிவம் நீ நான் நிழல் .
படத்தின் முக்கிய நாயகனாக பதினேழு வயதுப் பெண்ணின் தந்தையாக ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் சரத் குமார் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார்.

ஃபேஸ்புக்  போன்ற சமூக வலைத்தளங்கள் டீன் ஏஜ் பெண்களை  எப்படியெல்லாம் தவறான பாதையில் கொண்டு சென்று அவர்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை சொல்லும் படமாம் இது .

ishitha
இஷிதா
nee naan nizhal
பி ஜி எம் சிவகுமார்

மலேசியாவில் ஐந்து பேர் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கொலைகளுக்கான காரணம் தெரியாமல் அந்த நாட்டு அரசே குழம்பிப் போகிறது. அப்போதுதான் அந்நாட்டு போலீஸ் அதிகாரிக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது. அதாவது  ஒரு பேஸ்புக் அழைப்புதான் இந்த கொலைகளின் பின்னணியில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அடுத்த கொலை விழும் முன் கொலையாளியைக் கண்டுபிடிக்க முனைகிறார்.

அதே நேரம், இங்கு இந்தியாவில் ரோஹித் என்ற நபருக்கு, அதே பேஸ்புக் அழைப்பு வருகிறது. அதன்பேரில் மலேசியா கிளம்புகிறான் ரோஹித். போன இடத்தில் என்ன நடக்கிறது என்பதே இந்த நீ நான் நிழல் படம்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களையும் சற்றே நீளமான ஒரு டிரைலரையும் போட்டுக் காட்டினார்கள். நன்றாக இருந்தன .

தனது சிஷ்யர் ஜான் ராபின்சனை வாழ்த்த வந்த கே எஸ் அதியமான் ” ஜான் நல்ல உழைப்பாளி . தொட்டால் சிணுங்கி படத்தை நான் இந்தியில் இயக்கியபோது மொழி தெரியாத எனக்கு பெரும் உதவியாக இருந்தார் ” என்றார்

இயக்குனர் , தயாரிப்பாளர் என்று பலர் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தப்பும் தவறுமாகவாவது அவர்கள் முயன்று தமிழ் பேசியது இங்குள்ள பல பீட்டர் மாஃபியாக்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

vidharth
சிந்தனை (யும்) அழகு

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விதார்த் சொன்ன ஒரு விஷயம் மிக அழகானது . “இந்தப் படம் சம்மந்தப்பட்ட யாரையும் எனக்கு தெரியாது. உங்களை எல்லாம் சந்திக்கத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். நடிக்க வாய்ப்பு கேட்டு தெரியாதவங்கள எல்லாம் பாக்கறோம்ல? அப்போ  தெரியாதவங்கள வாழ்த்தறதும் நம்ம கடமைதானே ?” என்றார் . கிரேட் விதார்த்!

பி ஜி எம் சிவகுமார் பேசும்போது ” பெண் குழந்தை வைத்துள்ள பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம் இது . கல்வி நிறுவனங்கள் அணுகினால் படத்தில் ரிலீஸ் தினத்தன்று  பல ஊர்களிலும் ஒரு காட்சியை இலவசமாக போட்டுக் காட்ட தயாராக இருக்கிறேன் “என்றதும்  அருமையானது

ishitha
பாட்டு வரும்..! பாட்டு வரும்?

படத்தின் வசனகர்த்தாவும் இரண்டு பாடல்களை எழுதியிருப்பவருமான  கண்மணி ராஜா ‘மனம் விட்டு’ப் பேசினார். “திடீர்னு பாட்டு எழுத சொல்லிட்டாங்க . கதாநாயகி இஷிதாவை பார்த்துட்டே இருந்தேன். அப்படியே கவிதை வந்துருச்சி . எழுதிட்டேன்” என்று சொல்லி விட்டு பாடல் வரிகளையும் சொன்னார் . ( ம்ஹும் .. பெருசா இம்ப்ரெஸ் பண்ணல பாஸு!)

இதோடு முடிஞ்சு இருந்தா பரவால்ல. அடுத்து பேசிய இசையமைப்பாளர் ஜார்ஜ் “அடுத்த படத்துக்கு நானும் கதாநாயகி முகத்தை பாத்துக்கிட்டே டியூன் போடறேன் ” என்றார் .

ஒரு விஷயம் கிளியர் பண்ணுங்கப்பா.. மேக்கப் போட்ட முகமா? மேக்கப் போடாத முகமா ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Comments are closed.