சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை @ விமர்சனம்

நுஃபைஸ் ரகுமான் தயாரிப்பில் ருத்ரா, சுபிக்ஷா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கி இருக்கும் படம் .

இயற்கை ஒலிகளை பதிவு செய்யும் பணிக்காக,  காடு மலைப் பகுதிக்கு வரும் பண்பலை நிகழ்ச்சி நடத்துனர்   பெண்ணுக்கு (சுபிக்ஷா) உதவியாக, 

ஒலிப்பதிவில் தங்க மெடல் பெற்று இருந்தும்  கிராமத்தில் அப்பா, அத்தை, -போரில் இறந்த ராணுவக் கணவன் திரும்பி வருவான் என்ற மனப் பிறழ்வில் தினமும் தொடர்வண்டிப் பாதைக்கு வரும் – பாட்டி ஆகியோரோடு வாழ்ந்து வரும்  இளைஞன் (ருத்ரா) நியமிக்கப்படுகிறான்  

அந்தப் பணியில் அவர்களுக்குள் ஏற்படும் மெல்லிய மோதல்கள் ஒரு நிலையில் காதல் , காமம் என்றாகிறது . 

அந்தக் காதலுக்கு வில்லனாக நாயகியின் பணி, அவளுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டு பின் நின்று போன திருமணத்தின் மாப்பிள்ளை ஆகியோர் வர, அப்புறம் என்ன ஆனது என்பதே இந்தப் படம் .

வித்தியாமான கதைக் கருவைப் பிடித்தவர்கள் திரைக் கதையில் புதிதாக , சுவாரஸ்யமாக , அழுத்தமாக ஒன்றுமே முயலவில்லை . அதே போல அப்படி ஒரு  அட்டகாசமான லொக்கேஷன்கள் இருந்தும் ஒளிப்பதிவு அழுது வடிகிறது . 

ருத்ரா உற்சாகமாக நடிக்கிறார். ஆனால் அவரே பேசி இருக்கும் பின்னணியில் இருக்கும் அதீத மலையாள நெடி அந்நியப்படுத்துகிறது.  சுபிக்ஷா ஒகே.  

காடு, மலை , அருவிகளில் உள்ள இயற்கை ஒலிகளை பதிவு செய்பவர்கள் பற்றிய கதை என்று சொல்லிக் கொண்டு,  அப்படி உருப்படியாக ஒரு துண்டு ஒலியைக் கூட படத்தில் பயன்படுத்தாத கொடுமையையும் , பின்னணி இசையில் கூட அதற்கு முயலாத அநியாயத்தையும் என்ன சொல்ல?

நாடகத்தனமான காட்சிகள், தறி கெட்டு அலையும் திரைக்கதை, வலிந்து திணிக்கப்படும் முடிவு இவையே படத்தில் தூக்கலாக தெரிகிறது. 

சற்றே குழந்தைத்தனமானது என்றாலும் வித்தியாசமான பெயருக்கு  எடுத்துக் கொண்ட முயற்சியில் கொஞ்சம் கூட மற்ற படத்தின் விசயங்களில் எடுத்துக் கொள்ளவில்லை . 

படத்தின்  பலம்  கதைக் கரு . அடுத்து லொக்கேஷன்கள் . ஆனால் இது இரண்டு மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்து விட்டார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *