பெண்களின் வீரம் பேசும் ‘தொண்டன்’

thondan 9

அப்பா  படத்தின் மூலம் சமூக அக்கறையால் ரசிகர்களைக் கவர்ந்த சமுத்திரக் கனி அடுத்து ‘தொண்டன் ‘ என்று வருகிறார்

வசுந்தரா தேவி பிலிம்ஸ் சார்பில் ஆர். மணிகண்டன் மற்றும் நாடோடிகள் திரைப்பட நிறுவனம் சார்பில் சமுத்திரக்கனி தயாரிக்க,

சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா, ஆராதனா, சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு , ஞான சம்பந்தன், வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன், , படவா கோபி, சவுந்திரராஜா ஆகியோர் நடிக்க,

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஏகாம்பரம் மற்றும் ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவில் சமுத்திரக் கனி எழுதி இயக்கி இருக்கும் படம் தொண்டன் படத்தின், 

thondan 1

பாடல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து படக் குழு . நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வண்டியில் ஓட்டுனராகவும் மருத்துவ உதவியாளராகவும் முறையே பணி புரியும் சமுத்திரக்கனி , விக்ராந்த் அவர்களின் ஜோடிகளாக முறையே சுனைனா, அர்த்தனா ,

அவர்களின் வாழ்க்கை, பாசம்,  பகை, விவசாயியின் நிலை என்று பல விசயங்களைக் கொண்ட பரபரப்பான தெறிப்பான தொகுப்பாக இருந்தது முன்னோட்டம் .

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் அமைந்த – சமுத்திரக் கனி – சுனைனா நடித்த பாடல் ஒன்று, விக்ராந்த – அர்த்தனா நடித்த ஒரு பாடல் என்று இரண்டு இனிமையான உயிரோட்டமுள்ள பாடல்கள் திரையிடப்பட்டன .

நிகழ்ச்சியில் பேசிய சுனைனா

thondan 6

“இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான ஒன்று . அர்த்தமுள்ள கதாபாத்திரம் . என் கதாபாத்திரத்துக்கு காட்சிகளில் நல்ல முக்கியத்துவம் இருக்கிறது . படம் மிக நன்றாக வந்திருக்கிறது ” என்றார் .

நடிகர் மூர்த்தி பேசும்போது

thondan 8

” நிறைய கதாபாத்திரங்கள் அவ்வளவு இயல்பான சமூகத்துக்கு தேவையான கதை . எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரியான படம் ” என்றார் .

கவிஞர் யுகபாரதி தன் பேச்சில்

thondan 5

” சமுத்திரக்கனிக்கு பாட்டு எழுதுவது சுலபமானது .ஏனென்றால் பாடலில் என்ன வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருக்கும் .

இந்தப் படத்தின் பாடல்களும் அப்படியே அமைந்தது . ஜஸ்டின் பிரபாகரன் இசை மிக சிறப்பாக வந்துள்ளது ” என்றார்

இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது

thondan 4

” சமுத்திரக் கனி சாருடன் இது முதல் படம் . ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது .

ஆனால் போகப் போக உற்சாகப்படுத்தி இயல்பாக பணியாற்ற வைத்தார் . யுக பாரதியின் வரிகள் சிறப்பாக அமைந்தன ” என்றார்

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் தன் பேச்சில்

thondan 7

” இந்தப் படத்தின் முதல் பாதியை ஒளிப்பதிவு செய்தவர் ரிச்சர்டு நாதன் . இரண்டாம் பாதி நான் ஒளிப்பதிவு செய்தேன் .

ஒரு , பாதிப் பாடல் தவிர மற்ற பாடல்களை நானே ஒளிப்பதிவு செய்தேன் .

எனது குருநாதர் இயக்குனர் பிரியதர்சன் வேகமாக அதே நேரம் தரமாக பணி புரிவார். சமுத்திரக்கனியும் அப்படித்தான். அதனால் என்னால் சமுத்திரக்கனியின் ஓட்டத்துக்கு ஓட முடிந்தது ” என்றார்

விக்ராந்த் பேசும்போது

thondan 3

” இந்தப் படத்தில் எனக்கு மிக முக்கியமான ஒரு கேரக்டர் கொடுத்துள்ளார் கனி அண்ணன் .

அது மட்டுமல்லாது இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றியபோது நிறைய கற்றுக் கொண்டேன் . அது எப்போதும் எனக்கு உதவும் ” என்றார்

முத்தாய்ப்பாகப் பேசிய சமுத்திரக் கனி

thondan 2

“தமிழகத்தின் ஒரு முக்கியமான ஊரில் ஒரு தலைக் காதல் .. அல்ல அல்ல காமம் காரணமாக …..

கிடைக்காத ஆத்திரத்தில் ஒரு வகுப்புக்குள் நுழைந்து நாற்காலியின் காலைப் பிடுங்கி ஒரு பெண்ணை அடித்துக் கொன்றான் ஒருவன் .  மற்ற பெண்கள் எல்லோரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அந்த செய்தி என்னை மிகவும் பாதித்தது. ஒருவேளை அங்கிருந்த மற்ற பெண்கள் அவனை எதிர்த்து இருந்தால் அந்த பெண் இறந்து இருக்க மாட்டாள் . அதுதான் இந்தப் படத்தின் அடிப்படை நோக்கம் .

இந்தப் படம் வந்த பிறகு பெண்களை  யாராவது தாக்க முயன்றால் மற்ற பெண்கள் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் .

அடுத்து உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுவோரின் வாழ்க்கை மற்றும் உணர்வுகள் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

thondan 99

இதோடு ஜல்லிக்கட்டு , விவாசாயிகள் பிரச்னை என்று பல சமூக விசயங்களை படம் பேசும் .

 ஜல்லிக்கட்டுப் பிரச்னையின் போது,  நான் அலங்கா நல்லூர் வாடி வாசலில் மழை வெயில்  பாராமல் இரண்டு நாள் உட்கார்ந்து இருந்தேன் . அப்போது கேட்ட பல சம்பவங்கள் இந்தப் படத்தில் வருகிறது .

ஒரு நீண்ட  ஒரே ஷாட் காட்சியில்,  தமிழ் நாட்டின்  87 வகை நாட்டு மாடுகளின் பெயர்களை சொல்கிறேன் . இந்தக் காட்சியில் நான் நடிக்க வெகுகாலம் பயிற்சி செய்து தயார் ஆனேன் .

விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார் .எல்லாருமே மிக சிறப்பாக பங்களித்துள்ளனர் . படம் விரைவில் திரைக்கு வரும் ” என்றார் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *