தூக்குதுரை @ விமர்சனம்

ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் வெள்ளைப் பாண்டியன், அன்பு , வினோத், சீனிவாஸ் ஆகியோர் தயாரிக்க, யோகி பாபு, இனியா , மகேஷ் சுப்பிரமணியன், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்க, டெனிஸ் மஞ்சுநாத் இயக்கி இருக்கும் படம். 

கிராமம் ஒன்றில் கோவில் திருவிழாவில் அம்மன் மகுடத்தை யார் சுமந்து வருவது;  மற்ற நாட்களில் யார் வைத்திருப்பது என்பதில் அண்ணன் ( மாரிமுத்து) – தம்பி ( நமோ நாராயணன்) இருவருக்குள் பனிப் போர் . இப்போது அது அண்ணன் வசம் இருக்கிறது. 

அண்ணனின் மகள் (இனியா) திருவிழாவுக்கு படம் போட வந்த ஒருவன் (யோகிபாபு) மீது காதல் கொண்டு அவனுடன் ஓடிப் போக , வழியில் மடக்கப்படுகின்றனர். காதல் பிரிக்கப்படுகிறது . காதலனை அடித்து பாழுங்கிணற்றில் போட்டு எரிக்கிறார்கள் . 

அண்ணன் வசம் இருக்கும் அம்மன் மகுடத்தை  திருட  சிலர்  முயல , அப்போதுதான் அண்ணனிடம் இருப்பது பொய் மகுடம் என்பது தெரிகிறது . 

உண்மை மகுடம் எங்கே என்று ஊர் கூடிக் கேட்க, மகளின் காதலனை எரித்த கிணற்றுக்குள் அதுவும் விழுந்து விட்டதும் காதலன் பேயாக மாறி கிணற்றுக்குள் இருப்பதும் தெரிய வருகிறது . 

மகுடத்தைத் திருட நகரத்தில் இருந்து வந்த ஒரு தாதா (மொட்டை ராஜேந்திரன்) , அவனிடம் தொழில் பயின்ற மூவர் (மகேஷ், பால சரவணன் , சென்றாயன்) ஆகியோர் இப்போது  மகுடத்தை எடுக்க கிணற்றுக்குள் இறங்க , இன்னொரு பக்கம் மகுடத்திற்கு ஆசைப்படும் தம்பி அவர் மகனோடு ( கும்கி அஸ்வின்) அய்யனார் கோவில் சுரங்கப்பாதை வழியே கிணற்றுக்குள் வர , நடந்தது என்ன என்பதே படம் 

எளிய கிராமத்துப் படம் . 

நகைச்சுவை ஒரு பக்கம் , பேய் திரில்லர் ஒரு பக்கம் என்று  தியேட்டர்களுக்கு மட்டுமின்றி ஓ டி டி தளங்களுக்கும் ஏற்ற படம் . குடும்பத்தோடு பார்க்க வசதியாக இருக்கும் . 

எல்லா நகைச்சுவை நடிகர்களுமே தங்கள் பங்குக்கு எளிய நகைச்சுவைகளைத் தருகிறார்கள். 
கிராமியப் பின்புலம் அழகு . 

பேயாக  வருகிறார் யோகிபாபு . அவர் பாணி வசனங்கள் உண்டு . 

மெல்லிய காதல் சோகம் உண்டு . 

கதை முதற்கொண்டு படைப்பு மற்றும் தொழில் நுட்ப ரீதியாக எல்லா வகையிலும் இன்னும் நேர்த்தி தேவைப்படும் படம்தான் என்றாலும் வன்முறை , ரத்தச் சக்தி, ஆபாசம் இல்லாமல் குடும்பத்தோடு பார்க்க ஒரு வாய்ப்பு  கிடைப்பதே இப்போது அதிசயம்தான் . 

அந்த பொறுப்புக்கு தூக்குத்துரையை தூக்கி வைத்துப் பாராட்டலாம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *