வடி’வெலி’

eli 1
தெனாலிராமன் படத்துக்கு அடுத்து, அந்தப் படத்தை இயக்கிய அதே இயக்குனர் யுவராஜ் தயாளனின் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக  நடித்துக் கொண்டிருக்கும் படம் எலி .

பெயர்தான் ரொம்ப சின்னது. ஆனால் படம் பற்றி யுவராஜ் தயாளன் சொல்லும் விஷயங்கள் எல்லாம் ரொம்ப பெரியது .

“பொதுவாக ஒரு நல்ல கூட்டத்தில் தப்பான ஒருவன் இருந்தால் அவனை கருப்பு ஆடு என்று சொல்வார்கள். அதே போல ஒரு மோசமான கூட்டத்தில் ஒரு நல்லவன் சிக்கிக் கொண்டால் அவனை எலி சிக்கிருச்சி என்பார்கள் . அந்த எலிதான் இந்த படத்தில் வடிவேலு சாரின் கேரக்டர் . 

ஒரு தவறான கூட்டத்தில் புகுந்து ஒருவரை ஒருவருக்கு போட்டுக் கொடுத்து அவர்களை குழப்புவதற்காக செல்லும் வடிவேலு நினைத்தது போல,  விஷயம் அவ்வளவு சுலபமாக இல்லை . நூறு பூனைக்கு நடுவில் ஒரு எலி மாட்டியது போல ஆகிறது நிலைமை. அப்புறம் என்ன நடந்தது என்பதை காமெடியாக சொல்வதே இந்தப் படம் .

eli 3

இந்தக் கேரக்டருக்காக எலியின் உடல் மொழிகளை அப்படியே பின்பற்றி நடிக்கிறார் வடிவேலு . இருட்டறைக்குள் நீங்கள் திடீரென விளக்கை போட்டால் , அதுவரை சுற்றிக் கொண்டிருந்த எலி சட்டென்று அதிர்ந்து நிற்கும் . அப்புறம் நாம் நகரும்போதுதன் அதுவும் ஓடும் . படத்தில் வடிவேலுவின் நடவடிக்கைகள் அப்படியே இருக்கும் .

அதே போல வீட்டுக்குள் எலி அடிக்க வேண்டும் என்று கிளம்பினால்,  எலி அடிக்கப்பட்டாலும் சரி தப்பித்தாலும் சரி அதற்குள் வீடே கந்தர கோலம் ஆகிவிடும் . படத்தின் காட்சிகளிலும் அந்த தன்மை  காமடியாக இருக்கும் .

படத்தை 1960களில் வந்த தமிழ் படங்களின் பாணியில் எடுத்துள்ளோம். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வந்த பாணியில் திரில் இசையை வித்யாசாகர் அமைக்கிறார் . அதே நேரம் பழைய தமிழ் சினிமாவை கிண்டல் செய்கிற படமும் இல்லை .

eli 2படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சதா நடிக்கிறார் . கொள்ளைக் கூட்டத்தில் நடனமாடும் பெண்ணாக அவர் வருகிறார் .

 வடிவேலுவுடன் பல படங்களில் நயன்தாரா , தமன்னா ,  என்று பல நடிகைகளும் நடனம் ஆடி இருக்கிறார்கள் . எனவே இந்தப் படத்தில்,சதா ஜோடியாக நடிப்பது பெரிய விஷயம் இல்லை.

தவிர , வடிவேலு  – சதா சம்மந்தப்பட்ட காட்சிகளில் ரொமான்ஸ் எல்லாம் பெரிதாக இருக்காது காமெடிதான் பிரதானமாக இருக்கும் ” என்கிறார் யுவராஜ் தயாளன்

படம் மே மாச ரிலீஸ் . !

வர்றாருய்யா… மறுபடியும் வடிவேலு வர்றாருய்யா….!.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →