விசித்திரன் @ விமர்சனம்

பி ஸ்டுடியோஸ் சார்பில்  இயக்குனர் பாலா  தயாரிக்க , ஆர் கே சுரேஷ் கதாநாயகனாக நடித்து  தனது ஸ்டுடியோ 9 சார்பில்  வெளியிட, பூர்ணா, இளவரசு, பக்ஸ், மாரிமுத்து உடன் நடிப்பில்,  பத்ம குமார் இயக்கி இருக்கும் படம் . மலையாளத்தில் வெளிவந்த ஜோசப் படத்தில் தமிழ் மறுஉருவாக்கம். 

துப்பறிவதில் வல்லவரான ஒரு போலீஸ் அதிகாரி ( ஆர் கே சுரேஷ்) . தனது முதற்காதலி கொலை செய்யப்பட்டு உடல் அழுகிக் கிடந்ததைப் பார்த்தபிறகு அவரால் மனைவியோடு( பூர்ணா) சந்தோஷமாக இருக்க முடியவில்லை. மனைவி பிரிந்து போய்  அதிகாரியின் நண்பரையே (பக்ஸ்) திருமணம் செய்து கொள்கிறார் . மகள் அப்பாவோடு இருக்கிறார் . 
ஒரு நிலையில் மகள் இறக்க,  மனைவியும் விபத்தில் இறக்கிறார் . ஆனால் மனைவிக்கு ஏற்பட்ட விபத்து கொலை என்பதை கண்டு பிடிக்கிறார் போலீஸ் அதிகாரி.. அது பற்றி விசாரிக்கும்போது மூளைச் சாவு அடைந்தவர்களின் உடலை ஏழை மக்களுக்குப் பொருத்துவதாக பெயர் பெற்றுக் கொள்ளும் சில மருத்துவமனைகள் அதன் பின்னால் செய்யும் சில பஞ்சமா பாதகங்களையும்  அதை வைத்து கோடி கோடியாகப் பணம் பெறுவதையும் கண்டு பிடிக்கிறார் . 
அதை நிரூபிக்க அவர் செய்யும் தியாகமே படம் . 
 
விரக்தியில் தன்னந்தனியராக குடிகாரராக இருக்கும் அதிகாரி ஒரு கொலை வழக்கை எப்படி அசால்ட்டாக கையாள்கிறார் என்று  படம் துவங்குகிறது . 
 
அவரது காதல், மணம், வாழ்க்கை , இழப்புகள் என்று படம் பயணிக்கிறது . மீண்டும் விசாரணை பகுதிக்கு வருகிறது . 
ஆர் கே சுரேஷ் தன் உடம்பை தொந்தியும் தொப்பையுமாக குண்டாக்கிக் கொண்டு உருமாறி நிதானமாக வசனம் பேசி நடித்துள்ளார் . 
 
லொக்கேஷன்கள் அருமை . பாடல்கள் இனிமை . 
 
விசாரணையின் பகுதியாக வரும் சின்னச் சின்ன விவரணைகள் சிறப்பு . 
 
உறவுச் சிக்கல் தொடர்பான காட்சிகளை தமிழுக்கு ஏற்ப மாற்றி இருக்கலாம். இன்னும் படமாக்கலில் கவனம் செலுத்தி இருக்கலாம் 
 
கடைசிக் காட்சிகள் அதிர வைக்கின்றன . 
கோடி கோடியாகக் கொட்டி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள் பலர். அவர்கள் உடம்பில் சரியான உறுப்புதான் பொருத்தப்பட்டு உள்ளது என்பதற்கான ஆதாரம் என்ன ? பொருத்தப்பட்ட நோயாளிக்கு கொடுக்கப்படும் உறுதி என்ன ? என்ற இடி போன்ற கேள்வியை படம் எழுப்புகிறது . 
 
சரியான விஷயத்தை எடுத்துப் படமாக்கி இருக்கிறார்கள் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *