செப்டம்பர் 15 இல் வெளியாகும் ‘ யார் இவன் ?’

ஏராளமான தெலுங்குப் படங்களை இயக்கியதோடு , உத்தம புத்திரன், படகோட்டி, களத்தூர் கண்ணம்மா போன்ற சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களையும்  இயக்கியவர் டி. பிரகாஷ் ராவ் .

டி எல் வி பிரசாத்தும் தெலுங்கிலும் இந்தியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் .

இப்போது வைக்கிங் மீடியா ஆண்டு  எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரைனா ஜோஷி என்பவர் தயாரிக்க, சச்சின், ஈஷா குப்தா, பிரபு , கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில், 

டி. பிரகாஷ் ராவின் பேரனும் டி எல் வி பிரசாத்தின் மகனுமான டி.சத்யா என்பவர் எழுதி இயக்கும் படம் யார் இவன்.

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது இந்தப் படம் . 

வெண்ணிலா கபடிக் குழு உட்பட மூன்று படங்களை தெலுங்கில் ரீமேக் செய்த இந்த டி.சத்யா , தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கும் படம் யார் இவன் ?

தமிழில் இது இவருக்கு முதல் படம்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் சிறு முன்னோட்டங்களை  திரையிட்டனர் . கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை தனி அறையில் கை விலங்கு போட்டு வைத்து ,

காவல் துறை விசாரணை அதிகாரி கிஷோர் விசாரணை செய்வது போல அமைந்த முன்னோட்டத்தில் கொலை , ஆக்ஷன் , காதல் எல்லாம் வருகிறது

“படத்தின் கதை மிக வித்தியாசமாக இன்டரஸ்டிங் ஆக இருந்தது . நாயகன் மிக்கப் பெரிய பிசினஸ்மேன் .

அவர் இந்தப் படத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டு ஈடுபாடோடு நடித்தது ஆச்சர்யமாக் இருந்தது ” என்றார் நடிகர் சதீஷ். 

“நான் கஷ்டப்பட்டு நடித்தது ஆச்சர்யமாக இருந்தது என்றார் சதீஷ். நான் எட்டு வயதிலேயே நடிக்க ஆரம்பித்தவன் .

எனது பணம் , வசதி , மற்ற தொழில்கள் எல்லாம் என் அப்பா எனக்குத் தந்தது . ஆனால் சினிமாதான்  நான் விரும்பி ஈடுபடும் என் சொந்தத் தொழில்   ” என்றார் நாயகன் சச்சின்

படம் பற்றிக் கூறும்  இயக்குனர் சத்யா ” இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் படம் .

கபடி விளையாட்டின் பின்னணியில் படத்தை உருவாக்கி இருக்கிறோம் .  ஹீரோ ஒரு கபடி வீரன் . கபடியை ரசிக்கும்  கோடீஸ்வரப் பெண் ஒருத்தி அவனை நேசித்து ,மணந்து  கொள்கிறார் .

ஒரு நிலையில் அந்தப் பெண் கொல்லப் படுகிறாள். கொலைப் பழி ஹீரோ மீது விழுகிறது .

ஹீரோயின் அப்பாவான கோடீஸ்வரர் குற்றவாளியை தண்டிப்பதில் தீவிரமாக இருக்கிறார் .  ஹீரோ என்ன செய்தான் என்பதுதான் கதை . ஹீரோயின் அப்பாவாக பிரபு சார் நடிக்கிறார்.

வித்தியாசமான காட்சிகள் . வித்தியாசமான சூழல்கள் ரசிகர்களைக் கவரும் .” என்றார். 

கபடி என்பது பாரம்பரியம் மிக்க விளையாட்டு . ஆனால் படத்தின் முன்னோட்டத்தில் கபடியும் கிரைமும் ஒண்ணு,

– என்ற வசனம் வருதே ?” என்ற கேள்விக்கு இயக்குனரால் பொருத்தமான பதில் சொல்ல முடியவில்லை .

படம் வரட்டும். பார்ப்போம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *