கலைவாணர் மொழியில் ‘வன்மம்’

DSC_4958
நேமிசந்த் ஜெபக் ஹிதேஷ் ஜெபக் தயாரிப்பில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா நடிக்க, கமல்ஹாசன், கலை மணி, ஆர்.கே.செல்வமணி ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஜெய் கிருஷ்ணா,  தனது 25 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு,  வாய்ப்பு கிடைத்து இயக்கி இருக்கும் படம் வன்மம் .

“சில சமயம் ஒரு வார்த்தை கூட பல அழுத்தமான நட்புகளை உடைத்து விடும் . அப்படிப் பட்ட வார்த்தைகளால் அழுத்தமான நட்புக்கு இடையில் வன்மம் எழுந்தால் என்ன ஆகும்?” என்பதுதான் இந்தப் படம் என்கிறார் இயக்குனர் .

DSC_0143இதுவரை தமிழ் சினிமாவில் புழங்காத குமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுத் தமிழில் இந்தப் படத்தின் உரையாடல் இருப்பதோடு மொத்தப் படமும் அந்தப் பின்னணியிலேயே எடுக்கப்பட்டு  இருக்கிறதாம். திரையுலக மேதையான கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் நாஞ்சில் நாட்டுக்காரர்தான் . அவர் பேசும் முறையில் நாஞ்சில் தமிழ் நமக்கு பரிச்சயம்தான் . (ஜெய் கிருஷ்ணாவும் அந்த மண்ணுக்கு சொந்தக்காரர்தான் )

” ஆனாலும் படத்தில் கிராமிய ரீதியிலான நாஞ்சில் தமிழையே முழுக்க முழுக்க பயன்படுத்தி இருக்கிறேன் . அதே நேரம் எந்த வார்த்தையும் மற்றவர்களுக்கு புரியாமல் போய் விடக் கூடாது என்பதற்காக, அதை நமது யூனிட் ஆட்களிடம் சொல்வேன் . அது யாருக்காவது புரியவில்லை என்றால் அதை மாற்றி எல்லோருக்கும் புரியும் நாஞ்சில் தமிழ் வார்த்தையை போட்டு விடுவேன் ” என்கிறார் ஜெய் கிருஷ்ணா .

DSC_2813“நாஞ்சில் தமிழை பேச முடியாமல் படபிடிப்பில் சிரமப்பட்டதாக விஜய் சேதுபதி கூறினாரே ? எப்படி சமாளித்தீர்கள்?” என்ற கேள்விக்கு ஜெய் கிருஷ்ணா சொல்லும் பதில் எல்லோருக்கும் தேவைப்படும் ஒன்று

 “அடுத்த நாள் எடுக்கப் போகும் காட்சிகளுக்கான வசனங்களை எங்கள் மண் சார்ந்த மாடுலேஷனில் பேசி பதிவு செய்து நடிப்பவர்களுக்கு அனுப்பி விடுவேன் . அதை பல முறை கேட்டு விட்டு அவர்கள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்த போது  சரியாகி விட்டது .”

( தப்பான மாடுலேஷனில் வசனம் பேசும் நம்ம அப்பறசண்டி நடிகர்களுக்கு இந்த முறையை எப்போதுமே பயன்படுத்தலாமே )

படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடி சுனைனா . விஜய் சேதுபதிக்கு ஜோடி இல்லையாம் .

“இந்தப் பாவம் உங்கள சும்மா விடுமா?”‘ என்றால் “கதை அவரது கதாபாத்திரத்துக்கு ஒரு ஜோடியை அனுமதிக்கவில்லை . படத்தில் காதல் குறும்பு ஏரியாக்கள் முழுக்க கிருஷ்ணாவுக்கு . ஆக்ஷன் ஏரியா அதிகம் இருக்கு விஜய் சேதுபதிக்கு ” என்கிறார்  இயக்குனர்

DSC_8953படத்தின் ஒரு காட்சியில் பாவாடையை மார்பு வரை கட்டிக் கொண்டு குளத்தில் இறங்கிக் குளிக்கும் காட்சியில் படு கவர்ச்சி என்று கூறி நடிக்க மறுத்தாராம் சுனைனா . பின்னர் அது நேட்டிவிட்டியான விஷயம் என்று கூறி நடிக்க வைத்தார்களாம் . (குத்தாட்டத்துக்கு போடற டிரெஸ்களை விடவா அது கவர்ச்சி ?)

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →