வெற்றிக்குரியாள் ஆவாள் ‘அன்புக்கினியாள்’

நடிகர் அருண்பாண்டியன்  தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர்  கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப் படத்தில் அருண்பாண்டியன் முக்கியப்  பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.  

வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம்  பத்திரிகையாளர்களுக்கு  பிரத்யேகமாக திரையிடப்பட்டது. திரையிடல் நிறைவடைந்த பின் படக்குழுவினர் பேசினார்கள்..

நடிகர் அருண்பாண்டியன் பேசும்போது,  “அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம். அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.  இந்தப்படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம்.

கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண தாமதம். நான் 18 ஆண்டுகளுக்குப் பின்   நடித்துள்ளேன்.  என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது.

படத்திற்கு உயிர் கொடுத்தவர் மியூசிக் டைரக்டர் ஜாவித். மிக சிறப்பாக உழைத்துள்ளார். இந்தப் படத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு. இந்தப்பட கேரக்டர் போல கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன்.  

ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு  மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

இயக்குநர் கோகுல் , “இந்தப் படம் எனக்கு ஒரு புது ஜானராக இருக்கும் என நினைத்துச் செய்தேன். அருண் பாண்டியன் சார்  படத்தின் மலையாள வெர்சனைக் காண்பித்து டயலாக் எழுதச்  சொன்னார்.

படம் பார்த்து முடித்ததும் எனக்கு பிடித்துப் போனதால் .நான் அருண் பாண்டியன் சாரிடம்  படத்தை நானே டைரக்ட்  செய்கிறேன் என்று வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.  

கீர்த்தி பாண்டியன்  சிறப்பாக நடித்துள்ளார். அவரின்  நடிப்பு   படத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறது.  எங்களுக்கு  படம்  வெற்றி பெறும் என்பதில்   சந்தேகமே இல்லை.  ஸ்பாட்டிலே அவர் நிறைய முறை கைத்தட்டல் வாங்கினார்.

அருண் பாண்டியன் சார் மிக சிறப்பான உழைப்பைக் கொடுத்து நடித்தார். ஜாவித் நான் வேலை செய்த இசை அமைப்பாளர்களிலே ஒன் ஆப் த பெஸ்ட் இசை அமைப்பாளர்.  பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.

மீடியா எப்போதும் நல்ல படங்களை  மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவறியதே இல்லை.  இந்தப் படத்தையும் மக்களிடம் மீடியா சரியாகக் கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி ” என்றார்

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்  தனது பேச்சில், “,”நல்ல படங்களுக்கு ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருகிறார்கள் என்றால் அதற்கான காரணம் மீடியாதான். உங்களின் எழுத்தின் மூலமாக இந்தப் படத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்

நடிகை கீர்த்தி பாண்டியன் பேசுகையில், “இந்தப் படத்தை மிக அன்போடு எடுத்திருக்கோம்.  பர்ஸ்ட் லுக்கில் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி.

மேலும்  ஃப்ரீசரில் ஷுட் பண்ணும் போது நிறைய சவால்களைச் சந்தித்தோம். அதற்கான நல்ல  ரிசல்ட்டை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

நடிகர் பிரவின் “எனக்கு இதுதான் முதல் படம்.  எனக்கு வாய்ப்பளித்த அருண் பாண்டியன் சாருக்கும் கோகுல் சாருக்கும் மிக்க நன்றி. படத்தை நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். கீர்த்தி பாண்டியன் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ” என்றார்

இசையமைப்பாளர் ஜாவேத் , “படத்தில் நான் நன்றாக வேலை செய்துள்ளாகச் சொன்னார்கள். அதற்கான காரணம் அருண் பாண்டியன் சாரும்  கோகுல் சாரும் கொடுத்த சுதந்திரமும் நம்பிக்கையும்தான். இந்தப் படத்தில் வேலை செய்ததை பெரும் கிப்டாக நினைக்கிறேன்.படத்திற்கு நல்ல ஆதரவைத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *