சாக்கோபார் @ விமர்சனம்

chaco bar 4

ஏடிஎம் புரொடக்ஷன் சார்பில் டி.மதுராஜ் வழங்க,  நவ்தீப்  தேஜஸ்வினி  நடிப்பில்,  ராம் கோபால் வர்மா தெலுங்கில் இயக்கி,

தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கும்  சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர் படம்  சாக்கோபார்  

 இந்த சாக்கோபார் ருசிக்குமா? இல்லை ஜல்ப்பு பிடிக்குமா? பார்க்கலாம்

 

கடல் போன்ற ஒரு பெரிய  பங்களாவில் கல்லூரி மாணவி (தேஜஸ்வினி)  ஒருத்தி தங்குகிறாள் . அவளது  காதலன் (நவ்தீப்) அவளைப்  பார்க்க வருகிறான் . 
 
chaco bar
பங்களாவுக்குள் ஏதோ காரணத்துக்காக  முன்பு   இருந்தவர்கள் வைத்திருந்த ஒரு தவளை பொம்மையை உதைத்துத்  தள்ளுகிறான் .
விளைவாக அந்த வீட்டுக்குள் சில பேய்கள்   பலம் பெறுகின்றன . அவளை  மிரட்டுகின்றன. 
அவள் சொல்வது எல்லாம் அவளது கற்பனை என்று காதலன் சொல்லச் சொல்ல,  அவளும் அதை நம்புகிறாள் . பேய்களைப் பார்த்து பயப்படாமல் இருக்கிறாள் .
ஆனால்  அடுத்து அவனையும் பேய்கள் மிரட்ட , அப்போதுதான் அவனுக்கு உண்மை புரிகிறது . 
இந்த  நிலையில் தன்னைப் பற்றிய ஓர் அதிர்சியான உண்மையை அவள் சொல்ல , அடுத்து நடக்கும் எதிர்பாராத முடிவே சாக்கோ பார் 
chaco bar 3
ஃப்ளோகேம் என்னும் படப்பதிவு முறையில் (ஸ்டெடிகேம் கேமராவை விட பல விதங்களில் முன்னேற்றப்பட்ட  வடிவம் ) படமாக்கப்பட்ட படம் இது .  எனவே  படம் முழுக்க ஷாட்கள் அசத்துகின்றன . ஒளிப்பதிவு ஆஞ்சி 

மொழி மாற்றுத்  தமிழ் வசனங்களை தயாரிப்பாளர் மதுராஜே எழுதி இருக்கிறார் .  பெரிதாக உறுத்தல் இல்லை . 
ஒரு டைட்டான — மிக  குட்டையான கால் சட்டை , முன் வயிறு வரை திறக்கும் பனியன் என்ற அதி சிக்கன உடையில்,  அந்த பெரிய பங்களாவுக்குள் நடந்து நின்று படுத்து குனிந்து நிமிர்ந்து ,
விபரீத  போஸ்களில் கால் கைகளை விரித்து ..  இப்படியாக தேஜஸ்வினி . பயம் உணரும் நடிப்பும் பரவாயில்லை.  நவ்தீப் ஒகே . 
chaco bar 2
பயமுறுத்துகிறேன் என்ற பெயரில்  தேவை இல்லாத சத்தம் எழுப்பி எரிச்சலூட்டுகிறார்கள்.
அதுவும் அந்த கதவு தட்டும் சத்தம்  ஓவர் . பத்து நாளைக்கு வீட்டில் கூட யாராவது கதவைத் தட்டினால் கடுப்பு வரும் போல இருக்கிறது. 
கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று . ஆனால் அதே நேரம் விட்டேத்தியாக முடிகிறது படம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *