சாயிஷா தன் பேச்சில் ” வணமகன் படம் எனக்கு மிக சிறந்த அனுபவம் .
இந்தப் படம் இன்னும் நல்ல வாய்ப்பு . இயக்குனருக்கும் தயாரிப்பளருக்கும் நன்றி ” என்றார்
ஹீரோகளில் ஒருவரான கார்த்தி ” இயக்குனர் கே. சுபாஷ் எழுதிய அருமையான கதை இது . விஷால் மீது ரொம்ப அன்பு கொண்டவர் அவர் .
‘நீ ஹீரோவாக வேண்டும் ‘என்று எண்ணத்தை விஷாலிடம் முதன் முதலில் சொன்னவர் அவர்தான் . படம் நன்றாக வரும் என்பது புரிகிறது ” என்றார் .
விஷால் பேசும்போது ” ஒரு ஹீரோவுக்கு திருப்தியான கதை சொல்வதே பெரிய விஷயம் . ஆனால் சுபாஷ் சார் இரண்டு ஹீரோவுக்கும் திருப்தி வரும் வகையில் இந்த கதையை உருவாக்கி உள்ளார் .
அன்பு , வன்முறை இரண்டுக்குமான போராட்டமே இந்தக் கதை
சாயிஷா பிரம்மாதமான டான்சர் . எனக்கு அதனால் பிரச்னை இல்லை. ஆனால் கார்த்தி செத்தான் . ஏன்னா அவனுக்கு சாயிஷா கூட பாட்டு இருக்கு .
நானும் கார்த்தியும் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ஆளுக்கு ஐந்து கோடி கொடுக்க உள்ளோம் . அதில் ஒரு பகுதியை இந்தப் படத்தின் சம்பளத்தில் கொடுப்போம் ” என்றார்
இறுதியாகப் பேசிய பிரபு தேவா ” சாயிஷாவின் நடனத் திறமை என்னையே மிகவும் கவர்ந்த ஒன்று . இந்தப் படத்திலும் அது தொடரும் .
ஒரு நல்ல வணிக ரீதியிலான வெற்றிப் படமாக கருப்பு ராஜா வெள்ளை ராஜா வரும் ” என்றார்









