இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்’ தயாரிக்க , வைபவ் – விஜய் தொலைக்காட்சி புகழ் பிரியா பவானி சங்கர் நடிக்க,
ரத்னகுமார் இயக்கி இருக்கும் படம் மேயாத மான். தான் இயக்கிய மது என்கிற குறும்படத்தைதான் தற்போது அவர் மேயாத மான் என்கிற படமாக இயக்கியுள்ளார் மது
லயோலா கல்லூரி. மாணவர்கள் முன்னிலையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் இசைத்தட்டை வாங்கியதும் லயோலோ கல்லூரி மாணவ, மாணவிகள்தான்.
இந்த நிகழ்ச்சியில், கார்த்திக் சுப்புராஜ் வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா மற்றும்
படத்தின் இரட்டை இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார், பாடலாசிரியர் விவேக்,
இயக்குநர் ரத்னகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பாபி சிம்ஹாவும் கலந்து கொண்டார்.
படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலுக்குப் படத்தில் வைபவ் தங்கச்சியாக நடித்துள்ள இந்துஜா நடனமாடினார்.
” படத்தோட இயக்குநர் ரத்னகுமாருக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். சந்தோஷ் நாராயணனும் நானும் சேர்ந்து இசையமைத்தால் நல்லாருக்கும்னு,
அவர்தான் சொன்னார். நானும் சந்தோஷூம் சேர்ந்து வேலைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் ‘மேயாத மான்’தான்” என்றார் இசையமைப்பாளர பிரதீப் குமார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சந்தோஷ் நாராயண் ” இறுதிச்சுற்று படத்துக்குப் பிறகு என்னோட இந்தப் படத்துக்குத்தான் ஆடியோ லான்ச் நடக்குது.
ஏன்னா, ஆன் லைன்னிலேயே லீக், ரிலீஸ்னு முடிஞ்சிரும். அதனால், இந்த விழாவைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு’’ என்றார்.
”இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பாட்டு நானும், இயக்குநரும் சேர்ந்து எழுதியிருக்கிறோம்.
‘மெர்சல்’ மேடைக்கு அப்புறம் நான் ஏறுகின்ற முதல் மேடையிது. உலகத்தில் எனக்கு ரொம்ப முக்கியமான நபர் சந்தோஷ்.
நல்ல மனசு உள்ளவர்கள் கலைக்குள்ளே வரணும். அதுதான் மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரொம்ப சரியான ஆளு பிரதீப்.
அவர் ஒரு நாள்கூட யாரையும் தப்பா பேசி நான் பார்த்ததில்லை. சிம்பிளா சொல்லணும்னா பிரதீப் ஒரு ஓவியா.
கார்த்திக் சுப்புராஜின் பெரிய ரசிகன் நான். இந்த டீமில் என்னைச் சேர்த்தற்கு பெரிய நன்றி” என்றார்.
படத்தின் இயக்குநர் ரத்னகுமார் பேசும் போது, ” ஒரு எம்.ஏல்.ஏ வை மீட் பண்ணுனா எப்படி முதலில் கார் டிரைவர், மச்சான்னு எல்லோரையும் பிடித்து,
கடைசியாக எம்.ஏல்.ஏவை பார்ப்போமோ அதே மாதிரிதான் தயாரிப்பாளரை மீட் பண்ண ஒரு வழி குறும்படம் பண்ணுவது.
அதே மாதிரிதான் ஒரு குறும்படம் பண்ணி கார்த்திக் சுப்புராஜை மீட் பண்ணினேன். அவருடைய ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
குறும்படம் இயக்கும் இயக்குநர்கள் அடுத்ததாக பெரிய படங்கள் இயக்க வேண்டும் என்பதற்குத்தான் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு கம்பெனியே ஆரம்பித்தார்.
சில படங்களை பார்க்கிறதுக்கு சும்மா இருக்கலாம். சில படங்களை சும்மா இருக்கிறதுக்காக பார்க்கலாம்.
அப்படி, சும்மா இருக்கிறதுக்கு பார்க்கத்தான் இந்தப் படத்தை இயக்கினேன்’’ என்றார்.
‘மேயாத மான்’ படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ், ” லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்க முடியாமல் போன பையன் நான்.
இப்போது, இந்த காலேஜில் என் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடக்கிறது சந்தோஷமாருக்கு. வைபவ் செமையான நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம்.
பென்ச் டாக்கீஸ் மூலமாக ஐந்து குறும்படங்களை லான்ச் பண்ணினோம். அதில் ரத்னகுமாரின் ‘மது’ குறும்படமும் இடம்பெற்றிருந்தது.
அப்போதே எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. அந்த குறும்படத்தைத்தான் இப்போது முழு படமாக எடுத்திருக்கிறார்.
ரொம்ப ஜாலியான படம் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார் கார்த்திக் சுப்புராஜ்.
பவானி சங்கர் தன் பேச்சில் ” இது என் முதல் படம். எனக்கு ஆதரவு தரும் ரசிகர்களுக்குப் பெரிய நன்றி. ரொம்ப எதிர்பார்ப்பு இருக்கு.
என்னுடைய பெரிய நம்பிக்கை ரசிகர்களாகிய நீங்கள்தான். உங்களை ஏமாற்றாத ஒரு படமாக ‘மேயாத மான்’ இருக்கும். ” என்றார்
நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருதினராக வந்த பாபி சிம்ஹா பேசும் போது, ”எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள். படம் பார்த்தேன்.
சூப்பராக வந்திருக்கு. வைபவ் ஆக்டிங் இந்தப் படத்தில் செமையா வந்திருக்கு” என்றார்