
ஜோக்கர் படத்தின் வெற்றி விழாவில் கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணு அய்யா ,நடிகர் சிவகுமார், எடிட்டர் மோகன் , இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்
அதிலும் உத்தமத் தலைவர் நல்லகண்ணு அய்யா கலந்து கொண்டதன் மூலம் அந்த விழாவே புனிதம் பெற்றது என்று சொல்லலாம் .
நிகழ்ச்சியில் பேசிய நல்லகண்ணு அய்யா ” முதலில் இந்த ஜோக்கர் படத்தை நான் ஏதோ காமெடி படம் என்றே நினைத்தேன் . படம் பார்த்த பிறகுதான் இது மக்கள் சினிமா என்பது புரிந்தது
கபாலி படத்துக்கு நேர் எதிராக இந்தப் படத்துக்கு கிடைத்து இருக்கும் பூங்கொத்து மகிழ்வை தருகிறது இந்தப் படம் எந்தத் தடையும் இல்லாமல் வெளியே வந்துள்ளது . ஆச்சர்யமான விஷயம்.
நாங்கள் அரசியலில் பல கஷ்டங்களைப் பார்த்து இருக்கிறோம் . எனவே இது போன்ற படங்களைப் பார்த்தால் எங்களுக்கு கண்ணீர் எல்லாம் வராது .
ஆனால் இந்தப் படத்தைப் பார்த்து நான் , வீரமணி , ஜி.,ராமகிருஷணன் எல்லோரும் அழுது விட்டோம்
சில வருடங்களுக்கு முன்பு மாபெரும் படைப்பாளி கே .ஏ. அப்பாஸ் அவர்களின் செஹர் அவுர் சப்னா படத்தை நெல்லையில் திரையிட்டோம் . அதுவும் இது போல மக்கள் வாழ்க்கையை சொல்லும் படம்தான்.
ஆனால் அந்தப் படத்தை பார்த்த நெல்லை மக்கள் ”இந்தக் கஷ்டததைதான் நாங்கள் வாழ்வில் பார்த்துக் கொண்டு இருக்கிறோமே .
அப்புறம் அதை எதற்கு சினிமாவில் பார்க்க வேண்டும்/’ என்று கேட்டார்கள் . நொந்து போனோம் .
ஆனால் ஜோக்கர் படத்துக்கு மக்கள் தங்கள் ஆதரவை கொடுத்து இருப்பது சந்தோஷமான விஷயம் .
அதற்குக் காரணம் ஊடகங்கள் இந்தப் படத்துக்கு கொடுத்த அதரவு . அதற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
சிவகுமார் , மோகன், லிங்குசாமி போன்றவர்களோடு இந்த மேடையைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .
இப்படி ஒரு நல்ல படத்துக்கு பணம் போட்டு எடுத்த தயாரிப்பாளர் பிரபுவுக்கு நன்றி .
இப்படி ஒரு அற்புதமான படத்தை எழுதி இயக்கிய ராஜு முருகனுக்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் . .
இவர் தொடர்ந்து ,இது போன்ற நல்ல படங்களை எடுக்க வேண்டும் ” என்று தனக்கே உரிய மென்மையான குரலில் கண்ணியமான மொழியில் தன்மையான விதத்தில் பேசினார் அய்யா